- Friday
- January 2nd, 2026
சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு அரசியல் தீர்வையும் இலங்கை அரசு எம் மீது திணிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரி வித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். (more…)
அடுத்த புதுவருடத்துக்கு யாழ்தேவியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மீண்டும் உங்களைச் சந்திப்பேனென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ் நகரில் நேற்று மாலை தெரிவித்தார். (more…)
“நான் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவியில் தான் வருவேன்” இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் அதிமேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
கிளிநொச்சி - சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (more…)
இலங்கையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடக்கவிருக்கும் வடமாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தி ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார். (more…)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியையும் ஆஸ்பத்திரி வீதியினையும் இணைக்கும் முத்திரைச் சந்திப் பகுதியிலே இந்த முதலாவது வீதிச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. (more…)
ஆவரங்காலில் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு விசமிகளால் சேதமாக்கப்பட்டதுடன் அரச தரப்பு வேட்பாளர்களின் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
தனிநாட்டினை பெறுவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளின் மூலம், வடமாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பது மட்டுமல்ல, மாகாண சபைகளை இல்லாது ஒழிப்பதற்காக நடவடிக்கைகளும் இருக்கின்றன' என்று சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். (more…)
வலி.வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அமைப்பதற்குப் பாவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், (more…)
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு நேற்று வெள்ளிக்கிழமை முதல் இரண்டு வருட காலத்திற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. (more…)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க தெரிவித்தார். (more…)
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40 பேரை இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)
கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது....
வடமாகாணத்தில் வாக்குரிமை அற்றவர் விக்னேஸ்வரன். அவர் கொழும்பில் வாழ்பவர். வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுகிறார் அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறுபவற்றைக் கேட்பவர்கள் மூடர்கள் என்று திட்டியிருக்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி. (more…)
தேர்தல்கள் இடம் பெறவுள்ள வடமேல், மத்திய மற்றும் வடக்கு ஆகிய மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
வடக்கில் தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்று வருவதாக ட்ரான்பெரன்சி இன்ரநசினல் அமைப்பு, தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது. (more…)
கொழும்பு, கோட்டையிலிருந்து கிளிநொச்சிக்கு எதிர்வரும் 15 ம் திகதி முதல் தினமும் மூன்று ரயில்கள் புறப்படவுள்ளன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
