Ad Widget

உலக வங்கியின் துறைமுகம் மற்றும் கடற்றொழில் பிரதிநிதிகள் யாழ்.விஜயம்

குருநகர் இறங்குதுறையை துறைமுகமாக மாற்றுவதற்கான திட்டம் தொடர்பில் உலக வங்கியின் துறைமுகம் மற்றும் கடற்றொழில் பிரதிநிதிகள் ஆராய்ந்துள்ளனர்.

world-bank

யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட உலக வங்கியின் துறைமுகம் மற்றும் கடற்றொழில் உயிரியல்துறை அதிகாரி ஜீன் மரிவ், பொறியியலாளர் ஆகியோர் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தியை நீரியல்வளத்துறை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குருநகர் இறங்குதுறையையும் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது குருநகர் கடற்கரையின் ஆழம் தொடர்பில் கேட்டறியப்பட்டுள்ளதுடன், துறைமுகம் அமைப்பது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.

குருநகர் இறங்குதுறையில் துறைமுகம் அமைக்கும்போது, அதற்கான எண்ணெய்க் களஞ்சியமானது அருகிலுள்ள இராணுவ முகாம் உள்ள பகுதியிலே அமைக்க வேண்டும் என்பதினால் அந்தப் பகுதியிலிருக்கும் இராணுவ முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உலக வங்கியின் துறைமுகம் மற்றும் கடற்றொழில் பிரதிநிதிகள் கூறினர்.

யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ரமேஸ் கண்ணா, கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதன்போது உடனிருந்தனர்.

Related Posts