Ad Widget

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீட்பு

daniyal-epdpநெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக நேற்றயதினம் மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2011 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் நெடுந்தீவு பிரதேசசபைக்கு ஈ.பி.டி. பி கட்சி சார்பில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவிசாளராக செயற்பட்டு வந்தவர் .

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவருமான டானியல் றெக்ஷிசன்( தோழர் ரஜீவ் ) நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் தீவகத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து தீவக மக்களின் நல்வாழ்வுக்காகவும் கட்சியின் அரசியல் வளர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

இவரது சடலம் தற்போது நெடுந்தீவு வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts