Ad Widget

சிவபூமி மாணவர்கள் அவுஸ்திரேலியா பயணம்

கோண்டாவில் சிவபூமி மனவளர்ச்சிப் பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் விசேட ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்வதற்காக அங்கு சென்றுள்ளனர்.

sivapoomi-school

சி.தனுஷன், இ.கி.ரோன் பிளைக்னோ, சி.துஷ்யந்தன் ஆகிய மாணவர்கள் கடந்த நான்கு மாத காலமாக யாழ். பல்கலைக்கழக மைதானத்திலும் கொழும்பு சர்வதேச மைதானத்திலும் விசேட பயிற்சிகளைப் பெற்றனர். யாழ் பல்கலைக்கழக உடற்பயிற்சி விரிவுரையாளர் செல்வி.ராதை அருளானந்தம் இவர்களுக்கான பயிற்சியை வழங்கியுள்ளார்.

இம்மாணவர்களுடன் இலங்கையின் வெற்றியாளர்களான 14 மாணவரும் இணைப்பாளர்களும் அவுஸ்ரெலியா பயணமானார்கள். வடமாகாண விசேட ஒலிம்பிக் பணிப்பாளர் இளம்பிறையன், இலங்கை ஒலிம்பிக் விசேட முகாமையாளர் பிரான்சிஸ்போல் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

சிவபூமி பாடசாலை மாணவன் சி.துஷ்யந்தன் ஏற்கனவே 2010ஆம் ஆண்டு கிறீஸ் நகரில் 100 மீற்றர் ஒட்டத்தில் வெள்ளிப்பதக்கம். பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts