பொறுத்திருந்து பார்ப்போம் – டக்ளஸ்

தேசிய அரசை அமைக்கப்போவதாக மைத்திரி கூறியுள்ளார். அதன் சாதக பாதகங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை...

மைத்திரிபால சிறிசேன வெற்றி – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 62 இலட்சத்து 17,162 (51.28%) வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள்...
Ad Widget

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அமெரிக்கா

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கப் போகும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும் முடிவுகளை ஏற்று வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இலங்கையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கும் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் அவர்...

யாரும் சட்டத்தை கையில் எடுக்காதீர்கள்!

எவரும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் எனவும், எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அனைவரும் சட்டத்தை மதித்து செயற்படுமாறும் ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இன்று மாலை இலங்கையின் புதிய...

நாட்டைவிட்டுச் செல்ல மாட்டோம் – பசில், நாமல்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த நாட்டை விட்டுச் செல்லமாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பசில்...

449072 வாக்குகளால் மைத்திரி வெற்றி!

2015 சனாதிபதி தேர்தலில் 4 லட்சத்து 49072 வாக்குகளால் மைத்திரி வெற்றி பெற்றுள்ளார்.அவ்வெற்றிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளே காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை மக்களுக்கு மைத்திரி நன்றி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்திருக்கிறார். தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, " என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத்...

வரலாற்றிலேயே அமைதியாக நடைபெற்ற தேர்தல் இது!

நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை நோக்குமிடத்து ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே வன்முறைகள் குறைந்த, அமைதியான தேர்தலாக இத்தேர்தலை குறிப்பிட முடியுமென தேசிய தேர்தல் கண்காணிக்காளர் மத்திய நிலையம் குழு தெரிவிக்கின்றது. இந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த தேசிய தேர்தல் கண்காணிக்காளர் மத்திய நிலைய தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்தார். 1982ஆம் ஆண்டுக்குப்பிறகு...

மைத்திரி, ரணில் இன்று சத்தியப்பிரமாணம்

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். புதிய பிரதமராக ரணி;ல் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என...

த.தே.கூ தலைவர் வாக்களிக்கவில்லை

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தநிலையில் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர். வாக்களிக்கும் உரிமையும் திருகோணமலை மாவட்டத்திலேயே உள்ளது. எனினும் அவர் தனது வாக்குரிமையினை செலுத்தச் செல்லாது கொழும்பிலேயே இருந்துள்ளார். அவர் வாக்களிக்கச் செல்லாதமைக்கு சுகவீனம் காரணம்...

வடக்கு கிழக்கு மகிந்தவை முற்றாக நிராகரித்தது

இம்முறை சனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வடக்குகிழக்கு மாகாணம் முற்றாக நிராகரித்து மைத்திரியை தெரிவுசெய்துள்ளது நாடுமுழுவதும் அறவிக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி மைத்திரி அவர்களே முன்னணியில் இருக்கின்றார்!      

மைத்திரிக்கு மோடி வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைதியான மற்றும் ஜனநாயகமான தேர்தலை முன்னெடுப்பதற்காக ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஏற்று அலரி மாளிகையை விட்டுச் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார். புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி...

அமைச்சரவை அவசரமாகக் கூடுகிறது! நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்?

தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில் - விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகின்றது

யாழ். மாவட்ட தேர்தல் முடிவுகள் சில

யாழ். மாவட்டம் தேர்தல் தொகுதிகளுக்கான சில முடிவுகள் பருத்தித்துறை மைத்திரி 17388 மகிந்த 4262 சாவகச்சேரி மைத்திரி 23514 மகிந்த 5647 மானிப்பாய் மைத்திரி 26958 மகிந்த 7225 உடுப்பிட்டி மைத்திரி 18119 மகிந்த 3837 இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி மைத்திரிக்கு 311,117 (56.16%) மகிந்த விற்கு 236,386 (42.67%) கிடைக்கபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

வடக்கில் 60 வீத வாக்குப்பதிவு!

இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆகக் கூடுதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவாகியுள்ளது. இதன்படி- யாழ்ப்பாணம் - 61% கிளிநொச்சி - 64% முல்லைத்தீவு - 73% வவுனியா -...

வடக்கில் மற்றுமொரு தேர்தல் வன்முறை

யாழ்ப்பாணம், கொடிகாமம், கச்சாய் பிரதேசத்தில் வாக்களிக்கச் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் இருவேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த சிலர், வாக்களிப்பு நிலையத்தில் நின்றிருந்த மக்கள் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இரு பிரதான வேட்பாளர்களும் வாக்களித்தனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் இன்று வியாழக்கிழமை காலை தமது வாக்ககளைப் பதிவுசெய்துகொண்டனர். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிரும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது வாக்கை இன்று காலை தனது குடும்பத்தாருடன் சென்று பதிவு செய்துகொண்டார். இதேபோன்று பொது எதிரணி சார்பாகப் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால...

எமது வார்த்தைக்கு மதிப்பளித்து மக்கள் வாக்களித்து வருகின்றனர் – மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ் மக்கள் ஆர்வத்துடன் இன்று வியாழக்கிழமை (08) காலை முதல் வாக்களித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கொல்லன் கலட்டி தமிழ் கலவன் பாடசாலையில் தனது மனைவியுடன் சென்து வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மாவை இவ்வாறு தெரிவித்தார்....

அல்வாயில் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில் கைக்குண்டு தாக்குதல்

யாழ்.பருத்தித்துறை அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று வியாழக்கிழமை (08) காலையில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு - 2 இன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யவ்பர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
Loading posts...

All posts loaded

No more posts