சுதந்திர தினத்தன்று நல்லூர் பிரதேச சபையில் தேசியக்கொடி ஏற்றப்படாமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் கூறினார்.
இலங்கையின் 67ஆவது சுதந்திர தினமான புதன்கிழமை (04), நல்லூர் பிரதேச சபையில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த தவிசாளர், ”அன்றைய தினம் தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், ஏன் தேசியக் கொடி ஏற்றவில்லை என கேட்டனர்.
சபையின் தீர்மானத்துக்கமைய ஏற்றவில்லை என கூறியபோது, இது தொடர்பில் கொழும்புக்கு விசாரணைக்கு அழைப்போம் அப்போது வர வேண்டும் எனக்கூறினர் என்று அவர் கூறினார்.