Ad Widget

துர்க்கா மகளிர் வீட்டுத்திட்டம் திறந்துவைப்பு

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய தேவஸ்தானத்தினால் துர்க்கையம்மன் ஆலயத்தில் வாழும் பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி நிர்மாணிக்கப்பட்ட துர்க்கா மகளிர் வீட்டுத்திட்டம் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

துர்க்கையம்மன் ஆலய தேவஸ்தான தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் இருந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு வீடுகளுக்குமான படங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

தொடர்ந்து விருந்தினர்கள் மங்கள வாத்திய சகிதம் ஊர்வலமாக வீதியில் இருந்து வீட்டுத்திட்டம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

வீட்டுத்திட்டத்துக்கான நினைவுப் பலகையை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.ஆனந்தராசா திரைநீக்கம் செய்து வைத்தார்.

உரிய வீடுகளை விருந்தினர்களான வைத்திய கலாநிதி ஆனந்தராசா, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.ஸ்ரீமோகனன், வைத்திய கலாநிதி ரவிராஜ், அமெரிக்க நாட்டின் ஹாவாய் குரு பீட தொண்டு நாதசுவாமிகள், நல்லை குரு முதல்வர் திருஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திருமதி ஆனந்தராசா ஆகியோர் திறந்துவைத்தனர்.

Related Posts