Ad Widget

கூட்டமைப்பைச் சந்தித்தார் நிஷா பிஸ்வால்

இரண்டு நாள் பயணமாக நேற்று இலங்கை வந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்...

வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குள் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, விசேட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் அதன்மூலம் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.பி.என்.பாலசூரிய, செவ்வாய்க்கிழமை(03) தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையப் பிரிவுக்குள் அதிக குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனரா...
Ad Widget

நெல்லியடி பொதுச் சந்தை திறப்பு

வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 51.963 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நெல்லியடி பொதுச் சந்தையின் மரக்கறி விற்பனைப் பகுதி செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா சந்தையை திறந்து வைத்தார். கடந்த...

ஜனநாயக ரீதியில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார் மஹிந்த – மாவை

தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க முற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்கு என்னும் ஜனநாயகத்தால் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களின் 4.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்கப்பட்ட வட்டக்கச்சி...

போரில் உயிரிழந்தவர்களை நினைகூறும் நாள் குறித்து ஆராய்வு

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக ஒரு பொதுவான நாள் ஒன்றை சமாதானத்துக்கான நாளாக அனுஸ்டிக்க முடியுமா என்பது குறித்து தாம் ஆராய்வதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பாகவுள்ள லோர்ட் நசெபி தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (02) விஜயம் மேற்கொண்ட இவர், வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்கார, யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், சிவில் சமூகப் பிரதிகள்...

பாடசாலை அதிபர்களுக்கான இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

வடமாகாண பாடசாலைகளில் 7 ஆண்டுகளாக ஒரே பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களுக்கான இடமாற்ற பட்டியல் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறையில் சீர் செய்யப்பட்ட இந்த இடமாற்றப் பட்டியல் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது. கல்வி அமைச்சின் சுற்றரிக்கைக்கு அமைய ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 7 வருடங்கள்...

ரயிலுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து

யாழ். மீசாலை சந்தியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக கடக்க முற்பட்ட உழவு இயந்திரத்தை செவ்வாய்க்கிழமை (03) காலை ரயில் மோதியததால், உழவு இயந்திரம் தூக்கி எறியப்பட்டதுடன், அங்கிருந்த கடையொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திர சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு...

யாழ். பல்கலைக்கழக கல்லூரியின் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ். பல்கலைக்கழக கல்லூரியின் கற்கை நெறிகளுக்கு வடமாகாண இளைஞர், யுவதிகள் இணைந்து கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள், உயர்கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ப.சிவானந்தன் தெரிவித்தார். கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகில் பல்கலைக்கழக கல்லூரி கட்டிடம் புதிதாக அமைக்கப்படுகின்றது. இதன் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இங்கு வழங்கப்படும்...

உ/த, புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2015ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 23ஆம் திகதியும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒகஸ்ட் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை மீண்டும் அமுல்

குற்றச்செயல்களின் சதவீதம் நாட்டில் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசிக்கும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கெஹலியவின் வீட்டிலிருந்து மீட்ட பொருட்கள் குறித்து விசாரணை

முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்தே கண்டி, புஸ்பதான மாவத்தையில் உள்ள அவரது வீட்டிலிருந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு, கறுவாத்தோட்டம், கெப்பட்டிபொல மாவத்தையிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து...

விளக்கேற்றி சுதந்திரத்தைக் கொண்டாடவும்

தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சுதந்திர தினமான நாளை புதன்கிழமை இரவு 9.30 மணிக்கும் 9.34க்கும் இடையான காலப்பகுதியில் வீட்டுக்கு முன்னால் விளக்கொன்றை ஏற்றுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. இந்நாட்டிலுள்ள அனைத்து இன மற்றும் மத மக்களும் ஒன்றாக இணைந்து, எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திர நாடொன்றை கிடைக்க பிரார்த்திப்போம் என்று வேண்டிக்கொண்டு இந்த விளக்கை ஏற்றுமாறு...

யாழ்ப்பாணத்திற்கு வருவார் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் இலங்கை வருகிறார். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்தார். இதன் பின்னர் 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு...

யாழ் மாவட்டத்தில் முதற்தடவையாக சேதன விவசாயச் சான்றிதழ்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சேதன விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு முதற்தடவையாக சேதன விவசாயச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.2015) கரந்தன் இராமு வித்தியாலயத்தில் சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சேதன விவசாயச் சான்றிதழ்களை வழங்கி வைத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செறிவு வேளாண்மையில்...

போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், வடமாகாண அரச முகாமைத்துவ உதவியாளர் III ஆம் தரத்துக்கான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மார்ச் 2015 இல் பரீட்சைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வி்ண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி பெப்ரவரி 25 ஆகும்.

போராளிகள், அவர்களின் குடும்பங்களுக்கான விண்ணப்ப படிவங்கள்

வடமாகாணத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்கள் தமக்குரிய விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 10ஆம் திகதி அந்தந்த பிரதேசங்களிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என வடமாகாண மீன்பிடி போக்குவரத்து மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன் திங்கட்கிழமை (02) தெரிவித்தார். இது...

ஓமந்தையில் சோதனைகள் நீங்கியது

ஓமந்தை சோதனை சாவடியில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சோதனை நடவடிக்கைகளும் இன்று முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு பதிவுகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த பதிவு நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழு மோதலில் ஈடுபட்ட அறுவர் கைது

யாழ்ப்பாணம், மல்லாகம், நரியிட்டான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) குழு மோதலில் ஈடுபட்ட அறுவரைக் கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி தெற்குப் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் மல்லாகம் நரியிட்டான் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் 6 பேரைக் கைது செய்தனர்.

மீள்குடியேற்ற அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். இவர், மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகத்திலும் காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்திலும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். மருதடி பிள்ளையார் ஆலயத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வடக்குக்கான விஜயம் பற்றி வினவியபோது 'ஆலய வழிபாட்டுக்காகவே...

நெடுந்தீவில் குதிரைகள் சரணாலயம்

நெடுந்திவு பிரதேசத்தில் குதிரைகள் சரணாலயம் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆ.சிறி திங்கட்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கூறிய அவர், 'எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் நலன்கருதி வடமாகாண காணி ஆணையாளரின் அனுமதியுடன் பிரதேச செயலகத்தின் ஊழியர்களைக் கொண்டு இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 537 ஹெக்டேயர்...
Loading posts...

All posts loaded

No more posts