Ad Widget

வீதி விளக்குகளை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர் மின்சாரம் தாக்கிப் பலி!

துன்னாலை பூதராயன் வீதியில் வீதி விளக்குகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த, கரவெட்டிப் பிரதேச சபை மின்சார ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 12.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் கரணவாய், அண்ணா சிலையடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான செல்லத்தம்பி சுதர்சன் (வயது 42) என்பவரே உயிரிழந்தார்.

இவரது சடலம் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Posts