ப்ளாஸ்ரிக் தராசுகளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான தராசுகளை உபயோகிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுத்தல் அளவைச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமசிறி குமார தெரிவித்தார்.
இவ்வாறான தராசுகளில் நிறுக்கப்படும் தின்பண்டங்களை வாங்குவதை தவிர்த்து கொள்ளுமாறு நுகர்வோரிடம் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
முத்திரையிடப்பட்ட தராசுகள் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும். அவற்றை கொள்வனவு செய்து பொருட்களை நிறுக்குமாறும் திணைக்களம் வர்த்தகர்களிடம் கோரியுள்ளது.
திணைக்களத்தின் பணிப்பை மீறி ப்ளாஸ்ரிக் தராசுகளை பயன்படுத்துவோர் தொடர்பில் 011-2587199 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடுமாறும் கோரப்பட்டுள்ளது.