- Thursday
- September 18th, 2025

சவுதி அரசாங்கத்தினால் நோன்பு காலத்திற்கென வழங்கப்பட்டுள்ள பேரிச்சம்பழங்களை பெறுவதற்கு யாழ் முஸ்லிம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர். யாழ், கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து பள்ளிவாசல் எல்லைக்குட்பட்ட மக்களிற்கு பேரிச்சம்பழங்களை பெறுவதற்கு என்றுமில்லாதவாறு குடும்பவிபரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தை வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் கடிதம் மூலமாக கேட்டுள்ளார். அத்துடன் குடும்ப...

இளவாலை சிறுவிளானைச் சேர்ந்த அப்புக்குட்டி இராஜேந்திரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு புதிய சாதனைகளை படைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். விளையாட்டுத்துறையில் ஆர்வம் மிக்க இவர் திருமணம் ஆகிய போதிலும் தனது விளையாட்டுத் துறையின் பால் உள்ள ஆர்வத்தைக் கைவிடாத நிலையில் காணப்படடார். இந் நிலையில் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர்...

தற்போதைய அரசாங்கம் பாரிய நிதிநெருக்கடியில் உள்ளதாகவும், அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை கூட வழங்கமுடியாத நிலையில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். திறைசேரியில் நிதியில்லாமை காரணமாக அரசாங்கம் திண்டாடுகிறது என தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தால்...

20ஆவது திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஜுலை மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேர்தல் முறைமை உள்ளடக்கப்பட்ட 20ஆம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர்...

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சியின் இயக்குநருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக ஒளி பரப்பியிருந்தது. இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றின் உதவியை நாடியிருந்தார். இதன் வழக்கு விசாரணைக்காக தொலைக்காட்சியின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை...

சட்டவிரோதமாக இந்தியாவின் தமிழ்நாட்டுக்குள் மீனவரின் படகு மூலம் நுழைந்த இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என பி.ரி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த டி.வினோத்குமார் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு கைதானவராவார். தமிழ்நாட்டின் நாகப்பட்டணம் மாவட்டத்தில் வைத்தே இவர் கைதானார்.

வடமாகாண அதிபர்கள் சங்கத்தின் 'அதிபர்கள் சங்மம் 2015' கலந்துரையாடல் யாழ்ப்பாணம் ரில்க்கோ விருந்தினர் விடுதியில் வடமாகாண அதிபர்கள் சங்கத்தலைவர் க.சிவநேஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வடமாகாண பாடசாலைகளில் கல்வியில் நடைமுறை ரீதியில் காணப்படும் குறைபாடுகள், தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிபர்களுடைய கௌரவத்துக்குரிய மதிப்புக்கள் வழங்கப்படவேண்டும். அதிபர் பதவி வெற்றிடங்கள் ஏற்படும்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சனிக்கிழமை(09) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவிருகின்றது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிகொள்வது தொடர்பிலேயே இந்த பேச்சுவார்த்தையின் போது ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது....

2009ஆம் ஆண்டிலிருந்து மே 18 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வந்த 'போர் வெற்றி நாள்' ஆயுதப்படைகள் நாள்' என்று பெயர்மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நாளில், கடந்த 30 வருடங்களாக யுத்தத்தில் உயர்நீத்த சகலரும் நினைவு கூறப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வலி தென்மேற்கு - பண்டத்தரிப்பு - பிரான்பற்று புளியடி வைரவர் ஆலயத்தில் 113 ஆட்டுக் கடாக்கள் பலியிடப்பட்ட விடயமானது, மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள...

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான ஆயுதமோதல் முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற சூழலில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை குறித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. தமிழ் சிவில் சமூகத்தினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இறுதி யுத்தத்தின்போது இறந்த தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துதவற்கு முன்னைய அரசாங்கம் தடை...

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் புலம்பெயர் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்புடன் மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதில் 100 வீடுகள் புதிதாக நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளதாக, வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். வலி.வடக்கில் மக்கள் மீள்குடியமர்வதற்கு அண்மையில் ஒரு தொகுதி நிலப் பரப்பு விடுவிக்கப்பட்டது. இருப்பி னும், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் மீள்குடிய மர்வுக்குரிய...

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் சோலை பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வகையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. அந்த காட்டுப்பகுதிக்குச் சென்றவர்கள் சிலர் சடலத்தை கண்டு அக்கராயன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், பொதுமக்களால் சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட இருவரையும் கைதுசெய்தனர்....

சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில், தமிழ் மக்களுக்குப் போதிய சுயாட்சி வேண்டும் என்ற உண்மையான கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில்...

மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான MH 179 என்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது மர்மமாகவே இருக்கின்றது என்று செய்தி வெளியாகியுள்ளன. விமானம் புறப்பட்டு சில மணி நேரங்களில் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு விமானம் திரும்பியுள்ளது. மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த விமானம் மலாக்கா நீரிணைக்கு மேலாக இரண்டு மணிநேரம்...

மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் கடந்தமாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துக்கு திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்ற சந்தேகத்தில் தெல்லிப்பழை அளவெட்டி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (08) கைது செய்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படிவாள் வெட்டுசம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் கடந்தமாதம் 27ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே கைதானவர்களிடம்...

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் ( எல்ரீரீஈ) இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான நாகமணி ஜெகதீஸ்வரன் (வயது 34) என்பவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். 2003ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்களை மட்டக்களப்பு – ஆரையம்பதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கைக்குண்டுகளையும் வீசி ஆட்கொலை புரிந்தார், எட்டுப்பேரை காயப்படுத்தினார்...

பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் சனிக்கிழமை (09) நண்பகல் வடமாகாண சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிந்த ஒருவர் பலியாகியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ், முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கனகசபாபதி அருளானந்தம் (வயது 61) என்பவரை மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் திடீரென திருப்ப...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஏற்கனவே 3 தடவைகளுக்கு மேல் அவரைக் கொலைசெய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் அக்கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தபோதிலும் எதிர்காலத்திலும் ஜனாதிபதியை கொல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படலாம் என அச்சம் வெளியிட்டார். இது...

வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளிஅம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போது சுகாதார விதிமுறைகள், சட்டதிட்டங்களுக்கு அமைவாக சம்பந்தப்பட்டோர் முன்னிலையில் ஆலய வீதியில் இதற்கென அமைக்கப்பட்ட கொல்களத்தில் 113 ஆடுகள் பலியிடப்பட்டன. சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கடாக்களை வெட்டும் மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதேபோன்று வெட்டப்படும் கடாக்களும்...

All posts loaded
No more posts