Ad Widget

பகிடிவதையால் மாணவி தற்கொலை: சக மாணவர்களுக்கு சடலத்தை காட்ட வேண்டாம் என கடிதம்!

பகிடிவதை காரணமாக மன உலைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ்.எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது....

யாழில் இருவேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்பு

கொடிகாமம் மிருசுவில் பகுதியிலுள்ள சென்.நீக்கிலஸ் தேவாலய சேமக்காலையிலிருந்து செவ்வாய்க்கிழமை (17) ஜி – 400 ரக கைக்குண்டுகள் 18 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இறந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதற்காக குழியொன்றை தோண்டியபோது, அந்தக் குழிக்குள் இருந்து இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று குண்டுகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
Ad Widget

கோயிலுக்கு சென்றவரை காணவில்லை

கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த இராசன் தயாளன் (வயது 41) என்ற குடும்பஸ்தரை செவ்வாய்க்கிழமை (17) முதல் காணவில்லை என அவரது மனைவி, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை (18) முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சிவராத்திரி தினத்துக்காக பொலிகண்டியிலுள்ள ஆலயத்துக்கு சென்று வருவதாகச் துவிச்சக்கரவண்டியில் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என மனைவி தனது முறைப்பாட்டில்...

உடனடி தீர்வு இல்லையேல் உண்ணாவிரதத்தில் குதிப்போம் : சுகாதார தொண்டர்கள்

யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முதல் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்னால் முன்னெடுத்தனர். 1998 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சமூக சுகாதார பணியாளர்களாக 232...

விபத்தில் இருவர் படுகாயம்

மீசாலை ஐயா கடையடிச் சந்தியில் புதன்கிழமை (18) காலையில் சிறிய ரக உழவு இயந்திரமும் வான் ஒன்றும் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடுவில் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் விநாயகமூர்த்தி (வயது 34), வரதராசன் சாந்தகுமார் (வயது 40) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் முதலில் சாவகச்சேரி ஆதார...

சமுர்த்தி ஊழியர்களின் சேமலாபநிதி மீள வழங்கப்படும்

சமுர்த்தி மற்றும் வாழ்வின் எழுச்சி, துறைகளில் பணிபுரியும் 8368 அதிகாரிகளுக்கு கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டிருந்த ஊழியர் சேமலாப நிதியை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதற்கிணங்க எதிர்வரும் 28ம் திகதி அவர்களை கொழும்புக்கு அழைத்து அவர்களுக்குச் சேரவேண்டிய பணம் 70,000 இலட்சம் ரூபாவை மீள அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க...

ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தேவையில்லை – சிவஞானம்

உள்ளூராட்சி மன்றங்களை பொறுத்தவரையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியொன்று இருக்கவில்லை. அவ்வாறு இருப்பது உள்ளூராட்சி தத்துவதற்கு மாறானது. ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை மட்டும் அழைப்பது பொருத்தமானது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடத்துவது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு, கடந்த 10 ஆம்...

மு.கா., தமிழரசு கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடந்த 9ஆம் திகதி கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி கே.துரைராஜசிங்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் ஹசன் அலியும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா...

இருநாட்டு ஒப்பந்தம்- இலங்கை மீனவர்கள் வரவேற்பு

இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாட்டு அரச தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவை இலங்கையின் வடபகுதி மீனவர்கள் வரவேற்றிருக்கின்றார்கள். இதுபற்றி கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் அல்பட் ஜஸ்டின் சொய்சா, இரு தரப்பு மீனவர் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்துவதை இரு நாட்டு அரசாங்கங்களும்...

நலன்புரி முகாமில் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலி

யாழ்.சுன்னாகம், கந்தரோடை விக்கிராலை நலன்புரி முகாமிலுள்ள வீடொன்றின் சுவர் செவ்வாய்க்கிழமை (17) மதியம் இடிந்து விழுந்ததில் ரமேஸ் பிரியங்கா என்ற இரண்டு வயதான குழந்தையொன்று இறந்துள்ளதாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது., மேலதிக விசாரணைகளை...

பொதுமக்கள் எதிர்பை அடுத்து கழிவகற்றல் செயற்பாட்டையே நிறுத்தியது யாழ்.மாநகர சபை!

யாழ்.மாநகரசபையால் அகற்றப்படும் கழிவுகளை கல்லுட்டாய் வெளியில் கொட்டக்கூடாது என்று பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மாநகர எல்லைக்குள் கழிவகற்றல் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்தவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யாழ்.மாநகரசபை தனது எல்லைக்குள் சேகரிக்கும் திண்மக் கழிவுகளை இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை...

சிறுநீரக மோசடிகாரர்களின் மையமாக இலங்கை! தெடர்பு சாதனமாக சமூக வலைதளங்களாம்!!

இந்தியர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிறுநீரக மாற்று மோசடிகள் இடம்பெறுகின்றன என்றும் இதற்கான தொடர்பாடல் சாதனமாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் இந்திய நாளிதழ்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்தியாவின் ஹைதராபத் நகரில் நேற்று 4 நோயாளிகளும், ஒரு வைத்தியரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட், 2 மடிக் கணினிகள், 6 கைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில்...

விபத்தில் இளைஞன் பலி

யாழ்.பண்டத்தரிப்பு சந்தியில் செவ்வாய்க்கிழமை (17) துவிச்சக்கரவண்டி மீது தனியார் பஸ் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் பலியாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதகல், வில்வளை பகுதியை சேர்ந்த ரி.பகீரதன் (வயது 28) என்பவரே உயிரிழந்தார். இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இளவாலை மற்றும் யாழ்ப்பாணப்...

கல்லுண்டாய் மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்

யாழ்.மாநகர சபை பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் கல்லுண்டாய் மற்றும் காக்கைதீவு பகுதியில் கொட்டப்படுவதை நிரந்தரமாக நிறுத்தக்கோரி நவாலி, ஆனைக்கோட்டை பகுதி மக்கள் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமையும் (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. தொடர்ந்து கல்லுண்டாய் வீதியின் இரு மருங்கிலும் பகுதி பகுதிகளாக...

கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கும் நாளை விடுமுறை

சிவராத்திரி தினத்துக்காக கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு புதன்கிழமை (18) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார். சிவராத்திரியை முன்னிட்டு வடமாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், கலாசாலைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான பதில் நாளாக எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கலாசாலை செயற்படும். கற்பித்தல் பயிற்சிக்காக பாடஅலகுகளை பெறவேண்டிய ஆசிரிய மாணவர்கள்...

வீடு தீக்கிரை

ஆவரங்கால் மந்திரிமனை ஜே-277 பகுதியில் அமைந்துள்ள வீடொன்று திங்கட்கிழமை (16) மாலை தீக்கிரையாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தனர். வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றாக எரிந்தமையால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. மேற்படி வீட்டில் சாமி அறையில் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்த தீ, வீடு முழுவதுமாக பரவியதாக விசாரணைகளின் மூலம்...

சொகுசு ஜனாதிபதி மாளிகைகள், ஹோட்டல்களாக மாற்றப்படும் – பிரதமர்

கடந்த அரசாங்கத்தின் போது அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின்...

அறிக்கை தாமதமாவது தண்டனையிலிருந்து தப்ப இடமளிக்கும்

இறுதிப்போரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிப்பதை தாமதப்படும் முடிவை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுத்தால் அதன் காரணமாக குற்றம் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பி செல்ல கூடும். அதற்கு இலங்கை இடமளிக்க கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய கீர்த்தி திஸாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்து 100 வாகனங்கள் காணாமல் போன குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கில் 6000 வெற்றிடங்கள்; நிவர்த்தி செய்ய நடவடிக்கை என்கிறார் கரு ஜெயசூரிய

வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாது காணப்படுகின்றன என வடக்கு முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் இணைந்து உள்ளூராட்சி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. அதன்போது வடக்கு மாகாண பிரதம செயலர் பத்திநாதன் தனது வரவேற்புரையிலும் முதல்வர்...
Loading posts...

All posts loaded

No more posts