- Saturday
- April 27th, 2024
யாழ். மாவட்டத்தின் சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்....
வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் திறக்கப்பட்ட பேக்கரி அன்றைய தினமே மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின், வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபா செலவில் வவுனியா, செட்டிகுளம், பிரமணாலங்குளம் பகுதியில் பேக்கரி ஒன்று...
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவவீரர்கள் 10 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு சம்பளத்தை வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவரை குற்றமற்றவர் என்று இனங்கண்டே நீதிமன்றம் அவரை இன்று திங்கட்கிழமை...
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் எதிர்வரும் 25ஆம் திகதிவரை மக்கள் மீள்குடியேற வேண்டாம் என்று புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் அவர்களது சொந்த காணிகளை துப்பரவு செய்து குடியேற நேற்று ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது அந்த மக்களை குடியேறவேண்டாம் என்று பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்....
இலங்கை ஊடகத்துறையில் பணியாற்றுகின்ற 29 வீதமான பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீல்ரூக்சி ஹந்துன்நெத்தி என்ற ஊடகவியலாளர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 45 பெண்களில் 13 பெண்கள் (28.8%) தாம் வேலைத்தளங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகவேண்டியிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர் என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வடபகுதிக்கான பயண ஒழுங்கை இறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் வடமாகாணத்துக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழுவில் பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும், வெளிவிவகார அமைச்சைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருப்பர். இந்தியப் பிரதமர் இரு நாள் பயணமாக எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்புக்கு வருகிறார். இந்தப் பயணத்தின்போது வடபகுதிக்கும்...
வடபகுதி மக்களைச் சந்திப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் வடக்குக்கு வருகை தரவுள்ளார். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு முதன்முறையாக வந்திருந்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தையும், யாழ்.மாவட்ட வெயலகத்தில் நடத்தியிருந்தார். இந்த நிலையில் தேர்தலில் மாற்றத்துக்காக வாக்களித்த வடபகுதி மக்களைச் சந்தித்து...
முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில் 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவுகளை மேற் கொள்வதற்கான கால எல்லை இந்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் பதிவுகளுக்கான காலம் முடிவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. உதவிகளைப் பெறப் பதிவு செய்பவர்களுக்கு...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவு இன்று திங்கட்கிழமை காலை 10.33 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுனியாவின் எல்லையோரங்களில் இருந்த சிங்கள மக்களையும் மீள்குடியேற்ற வேண்டும் என கூட்டமைப்பு சார்பு வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவினில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:- நாம் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. எல்லா மக்களையும் ஒன்றிணைத்துச் செயற்பட...
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் ஒருவருக்கும் நம்பிக்கையில்லாவிட்டாலும், அதில் தமது முறைப்பாட்டை பதிவு செய்வது கடமை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்திருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சனிக்கிழமையன்று சந்தித்துப் பேசியது குறித்து, பி.பி.சிக்கு அளித்த பிரத்யேக செவ்வியின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களில் உள்ள குடும்பங்கள் தமது வருமானத்தின் பொருட்டு மேற்கொண்டு வரும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை உரிய முறைகளில் சந்தைப்படுத்த முடியாதுள்ளதாக கூறுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு குடிசைக் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது உற்பத்தி...
வடமாகாணத்துக்கு புதிதாக 31 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸ்வர் சனிக்கிழமை (07) தெரிவித்தார். 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்த பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அவை முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், காரைநகர், கிளிநொச்சி, பருத்தித்துறை சாலைகளுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளன. இவற்றை கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும்...
வடபகுதி ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தென்னிலங்கை ஊடகவியலாளர் அமைப்பு சனிக்கிழமை (07) தெரிவித்துள்ளது. தென்னிலங்கை ஊடகவியலாளர் யாழ். ஊடக அமையத்தில் வடபகுதி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, அவ்வமைப்பின் ஊடகவியலாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 'வடபகுதியில் கொலை செய்யப்பட்ட காணாமல் போன மற்றும் அச்சுறுத்தப்பட்ட...
காரைநகர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்தார். காரைநகருக்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள் குறித்த பஸ்தரிப்பு நிலையங்களை நேற்று (08) திறந்து வைத்தார். முன்னதாக வலந்தலை சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் திறந்து...
இளம் விதவைகளை மறுமணம் செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். விதவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை...
கிராமங்களில் மண்ணையும் மரங்களையும் நேசித்து இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கும் இறுதி ஆசைகள் உண்டு. ஆனால் அந்த ஆசைகளும் இயற்கையோடு ஒட்டியே பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் மத்திய மாகாணம், தம்புள்ளை நகருக்கு அருகே இருக்கின்ற சீகிரிய பிரதேசத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கின்றது உடவலயாகம என்ற விவசாயக் கிராமம். இங்கு மண்ணையும் மழையையும் நம்பி வாழ்க்கை...
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு ஆட்சிமாற்றம் நடந்துள்ள சூழ்நிலையில், புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். எலிசபெத் மகாராணியின் தலைமையின் கீழ் இருக்கின்ற காமன்வெல்த் அமைப்பின் தற்போதைய நிர்வாகத் தலைவரான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக...
இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம். இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து பிபிசி...
காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது. கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகல் நீராகாரத்துடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேவேளை...
Loading posts...
All posts loaded
No more posts