- Saturday
- November 15th, 2025
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை வெறுமனே படுகொலையாகவோ, வன்புணர்வு நிகழ்வாகவோ எடுக்க முடியாது. வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரது சடலம் இருந்த கோலம், இது வெறும் வன்புணர்வு, படுகொலை என்பதைக் காட்டி நிற்கவில்லை. எனவே, இவ்வழக்கில் உண்மை நிலை என்னவென்று கண்டறியப்பட வேண்டும். அதற்கு சந்தேக நபர்கள் உரிய முறையில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட...
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை கிளிநொச்சிப் பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று பிற்பகல் குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் அம்பாள்குளத்தைச் சேர்ந்த மரியதாஸ் உசாராணி (வயது 36 ) என்பவராவார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண் மனநலம் குன்றியவராவார். தனது சகோதரியுடனேயே வசித்து வருகின்றார். நேற்றயதினம் சகோதரி கடைக்குச்...
வறுத்தலைவிளான் பகுதிக்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் மூவர் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழுவினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று திங்கள்கிழமை நள்ளிரவு குறிப்பிட்ட இருவரையும் கைது செய்த சுன்னாகம் பொலிஸார் அவர்களைதெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட இடம் தெல்லிப்பழை பொலிஸ்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஏதாவது நன்மை விளையலாம் என்ற எதிர்பார்ப்புடன் இந்தச் சந்தர்ப்பத்தை நோக்குவதால், எமது விடுதலைக்காக இன, மத பேதங்களைக் கடந்து நீதி, நியாயம் வேண்டி அனைத்துத் தரப்பினரும் மனிதநேயத்துடன் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் செயற்படவேண்டும்' - என்று அனைத்து இலங்கைத் தமிழ் அரசியல் கைதிகள் அமைப்பு, அறிக்கையொன்றினூடாக வேண்டுகோள் விடுத்துள்ளது. தமது விடுதலை...
நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஓரணியில் திரளவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். வெவ்வேறு திசையில் பயணித்தால் வெற்றி இலக்கை நோக்கி நகரமுடியாது எனவும் அவர் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் வலுத்துவருவதால்,...
தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் தொழில் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எத்தகைய கருத்தியல்களை அல்லது தொலைநோக்கைக் கொண்டிருந்த போதும், ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு தாமரைத்தடாக...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டு அவர்களிடம் வேலைத்திட்டங்களுக்காகப் பணம் வழங்கப்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது தொடர்பில் அவரிடம் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரனிடமிருந்து வருகின்ற பதிலையடுத்து, உண்மை நிலைமையை செய்தியாளர்களின் ஊடாகத் தெளிவுபடுத்துவதற்குத்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்குப் ஒன்பது வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநோயாளர் பிரிவில் 35 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில் இதுவரை காலமும் 15 வைத்தியர்களுடன் மாத்திரமே இயங்கி வந்தது. இந்த நிலையில் இன்று 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் புதிய வைத்தியர்களையும் இணைத்து 24 வைத்தியர்களுடன் இயங்கவுள்ளது. இதுவரை காலமும் இரவு...
ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா நாளைய 17.06.2015 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது. 29.06.2015 திங்கட்கிழமை சப்பறம் 30.06.2015 செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா 01.07.2015 புதன்கிழமை தீா்த்தத் திருவிழா 02.07.2015 வியாழக்கிழமை கொடி இறக்கம் மற்றும் தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகின்றது. திருவிழாக் காலங்களில் தினமும் மாலை கோவில் முன் கலையரங்கில் கலை...
பொதுமக்களிடமிருந்து பெருமளவான பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் யாழ். மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பி.சஞ்சீவன், கொழும்பிலுள்ள ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் செய்வாய்க்கிழமை(16), முறைப்பாடொன்றை பதிவு செய்தார். அதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் உடனிருந்தார்.
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், பிறவுண் வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பெருமாள் கோவில் பகுதியில் வைத்து, கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் திங்கட்கிழமை (15) மாலை கைது செய்தனர். நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் வளாகத்தில்...
யாழ் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளாக 7379 பேர் இருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதில் 1100 சிறுவர்களும் 1320 பேர் போரால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை நேற்றைய தினம் மாற்றுத் திறனாளிகளை சமூகத்துடன் சேர்ப்பதற்கான செயற்திட்டத்தின் கீழான விசேட செயலமர்வு ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்ததுடன் குறித்த செயலமர்வில் மாற்றுத்...
காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் திகதி காரைநகர் வலந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து ஒருவரைத்தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவரை கடந்த 13ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்தனர். ஐவரும் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளமறியலில்...
மாணவி வித்தியா படுகொலை சந்தேக நபர்கள் ஒன்பதுபேரையும் 30 நாள் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க ஊர்காவற்றுறை நீதிவான் நேற்று அனுமதி வழங்கிய நிலையில் அவர்கள் ஒன்பது பேரும் நேற்று மாலை 4.00 மணியளவில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு (நான்காம் மாடி)டபிள்யூ.பீ. என்.ஏ.9960 என்ற...
மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரண விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது சிங்கள சட்டத்தரணிகள் மூவர் மன்றில் ஆஜராகினர். குறித்த சட்டத்தரணிகள் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் ஆஜராக வந்தனரா அல்லது வேறு காரணங்களுக்காக வந்தனரா என்பது நேற்று விசாரணைகள் நிறைவுறும் வரை தெளிவுபடுத்தப்படவில்லை. இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கொழும்பில்...
மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்க வேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும்...
பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் நீதி, நியாயாதிக்கப்பகுதிக்குள் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் ஒலிபெருக்கிப் பாவனைக்கு நீதிமன்று தடைவிதித்துள்ளது. பொதுநலன் கருதி இந்த உத்தரவை பிறப்பிப்பதாக மாவட்ட நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டார். பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடிப் பொலிஸ் பிரிவுகளில் ஆலயங்கள், விசேட விழாக்கள் போன்றவற்றில் அதிகரித்த ஒலியுடன் ஒலிபெருக்கிகள் அலறவிடப்படுவதால் மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் நீதிபதி...
தெல்லிப்பழையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற இளைஞர்கள் மற்றொரு இளைஞர் குழுவினால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஏழாலை, மல்லாகம் பகுதியில் குறிப்பிட்ட சில இளைஞர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதுடன் மதுபோதையில் கெட்டவார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டு வீதியால் செல்பவர்களை அச்சுறுத்தி...
உள்ளகப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து பொறுப்புகூறுவதுடன், நல்லிணக்கத்திற்கான உள்ளகப் பொறிமுறையையும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் செப்ரெம்பர் மாத அமர்வுக்கு முன்னதாக ஏற்படுத்தப்படவேண்டும்...
வரணிப்பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் அந்தரங்க உறுப்பில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. இதே இடத்தைச் சேர்ந்த க.கஜிதீபன் (வயது 15 ) என்ற மாணவனே இவ்வாறு காயமடைந்துள்ளார். பாடசாலையில் சிரமதானப்பணி இடம்பெற்ற சமயம் ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவனைத் தாக்கியதிலேயே அவன் காயமடைந்தான் என்று தெரிவிக்கப்பட்டது....
Loading posts...
All posts loaded
No more posts
