கடல் வழியே சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த 78 இலங்கையர்கள் கிரிந்தவில் இருந்து 65 மைல் கடல் தொலைவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் இந்திக சில்வா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 59 தமிழர்களும் 17 சிங்களவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்படுகின்றனர்.