Ad Widget

மாணவிகளை புகைப்படம் எடுத்தவர்கள் கைது

கந்தரோடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு முன்னால் நின்று பாடசாலை மாணவிகளை கைபேசியில் புகைப்படம் எடுத்த இருவரை வியாழக்கிழமை (25) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தனர்.

கைதான இருவரும் அளவெட்டி தெற்கு பகுதியினை 21, மற்றும் 23 வதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்களை சிவில் உடையில் சென்ற பொலிஸார் கைது செய்திருந்தனர்.

Related Posts