இலங்கையில் எப்போது நல்லிணக்கம் இருந்தது? – சிவாஜிலிங்கம்

சிங்கள தேசம் இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றார்கள். மீள் நல்லிணக்கம் என்றால், முன்னர் எப்போது இந்த நாட்டில் நல்லிணக்கம் இருந்தது?' என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்....

தமிழர் பிரதேசத்தில் விகாரை; காணி உரிமையாளர்கள் விடுவிப்பு

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (05) அடையாள உண்ணாவிரம் இருந்த விகாரை அமைக்கப்படும் காணி உரிமையாளர்கள் மூவரையும் விசாரணை செய்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். தனியார் காணிகளில் விகாரை அமைக்கப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும்...
Ad Widget

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை கட்டுப்படுத்த வருகிறது சட்டம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015 ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 29 இலட்சம் மோட்டார்...

சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகத்தில் இளைஞர் கைது!!

13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 27 வயதான இளைஞர் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்டுகின்றது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தின அச்செழு பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆலயத் திருவிழாக்களின் போது சிறுமியின் தாயார் கச்சான் விற்பனை செய்து வருகிறார். அவருக்கு உதவியாகக் குறித்த இளைஞன் இருந்தார்...

எனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைக்காவிடின் ஜெனீவாவில் தீ குளிப்பேன்!

"எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீ குளிப்பேன்" என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலியே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மேலும், "நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை...

யாழில் சிறுவனைக் காணவில்லை!

17 வயது சிறுவனை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் சஜீவன் (17) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 07.00 மணிக்கு வெளியில் போய்விட்டு வருவதாக கூறி சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் ஊர்காவற்துறை பொலிஸ்...

சூழல் பாதுகாப்பின் மைய விசையாக மாணவர்கள் செயற்பட வேண்டும் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

மாணவர்களிடம் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்பார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சுற்றாடல்...

விமானத்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு நினைவுத்தூபி

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் 1995ஆம் ஆண்டு புக்காரா விமானக் குண்டு தாக்குதலில் பலியாகிய 21 மாணவர்கள் நினைவாக வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபிக்கான அடிக்கல் வெள்ளிக்கிழமை (05) நாட்டப்பட்டது. தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இந்த அடிக்கல்லை நாட்டினார். விமானக் குண்டுத் தாக்குதலில் வித்தியாலயத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் எதிர்க்கட்சி கையளித்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 112 பேர் கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே நேற்றிரவு அவரிடம் கையளித்ததாக அவர் மேலும்...

ரவிராஜ் கொலை: துப்பாக்கி இராணுவத்தினருடையதாம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி ராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, இலங்கை இராணுவத்துக்கு உரித்துடையது என்று குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி

கிளிநொச்சியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இசை நிகழ்ச்சியில் குழுமோதல்: எண்மர் காயம் : இருவர் கைது

கந்தரோடை அருளானந்த பிள்ளையார் ஆலயத்தில் வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற குழு மோதலில் 8பேர் காயங்களுக்கு ஊள்ளாகி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மோதலில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனர். இசை நிகழ்ச்சிக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சிலர்...

குடும்பஸ்தரை காணவில்லை

அனலைதீவு, 6ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த செவ்வராசா ரமேஸ் (வயது 36) என்பவரை புதன்கிழமை (03) தொடக்கம் காணவில்லையென அவரது உறவினர்கள் வியாழக்கிழமை (04) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத் தலைவரைச் சந்தித்துவிட்டு வருவதாக கடந்த புதன்கிழமை (03) வீட்டிலிருந்து புறப்பட்டவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

தமிழர் பிரதேசத்தில் விகாரை நிர்மாணம்; உண்ணாவிரதமிருந்தவர்கள் கைது

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை (05) அடையாள உண்ணாவிரதமிருந்த காணி உரிமையாளர்கள் மூவரையும் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்து கண்டனப் போராட்டமும் கைவிடப்பட்டு, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதத்துக்கு...

கீரிமலையில் பெரும் நந்தவனம் அமைக்க நடவடிக்கை!

வரலாற்று சிறப்பு மிக்க கீரிமலைப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் பெருமளவு மலர்கள் கொண்ட நந்நதவனம் ஒன்று அமைப்பதற்கான முன் முயற்சி நடவடிக்கைகளை சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிவபூமி அறக்கட்டளை நிலையத்தின் ஸ்தாபகர் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். இதற்கான காணியை ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் மூவர் தமது தாய் தந்தையர்களின் நினைவாக...

வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் இன்று வழிபாடு!

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய வைகாசி விசாக மடை வழிப்பாட்டுக்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். நீண்ட காலத்துக்கு பின்னர் இராணுவ அனுமதி கிடைத்தமையால் பெருமளவான மக்கள் ஆலயத்துக்கு செல்வதற்காக வயாவிளான் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கூடினர். இதன்போது உயர் பாதுகாப்பு வலய எல்லையில் பதிவுகளை மேற்கொண்டே மக்கள் உட்செல்ல...

கனிமொழியுடன் பேசிய பிறகே எழிலன் சரணடைந்தாராம்! – அனந்தி சாட்சியம்

இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு...

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, போதைப்பொருள் ஒழிப்புக்கு வடக்கில் வேலைத்திட்டம்! – சுமந்திரன்

வடக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் போதைப் பொருள், மது பாவனையை முடிவுக்குக் கொண்டுவர விசேட சமூக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்காக அரச மற்றும் தனியார் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நீண்டகால நிகழ்ச்சித் திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரைவில்...

சுற்றாடலை பாதுகாக்க எமது அரசில் சட்டதிட்டங்கள் – ஜனாதிபதி

எமது அரசு காடுகளும் வன சீவராசிகளும் பாதுகாப்பாக இருப்பதற்காக அவை அழிக்கப்படுவதை தடுக்கின்ற அதேவேளையில், கூருணர்வு மிக்க சூழல் முறைமையை பாதுகாப்பதற்காகவும் புதிய சட்டங்களை இயற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கும். அவற்றை அழிக்கின்ற சக்திகளை அந்தஸ்த்து பாராமல் சட்டத்தின் முன் கொணர்வதற்கு நடவடிக்கை எடுக்கும் என உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ள...

டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு

யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தில் 2 கோடி ரூபா மோசடி செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவுசெய்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இதன் போது உடன்...
Loading posts...

All posts loaded

No more posts