பிரபாகரனை உயிருடன் கொழும்புக்கு கொண்டு வந்திருந்தால் மகிந்த ராஜபக்ஸ அவரை ஒரு முதலமைச்சர் ஆக்கியிருப்பார்! – பொன்சேகா

முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் sarath fonseka-2015நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா அம்மான் என்கிற வினாயகமூர்த்தி முரளீதரன், இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இப்போது கூறப்படுவது போல பிரபாகரன் ஸ்ரீலங்கா இராணுவத்தினாரால் கொல்லப்படவில்லை, ஆனால்...

எமது வீட்டு வேலைகளை நாங்களே செய்து கொள்வோம் ! – ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருக்கு நெருக்கமான பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அந்த மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். சிறிது நேரம் ஜனாதிபதியுடன் உரையாடிய பின்னர், ஜனாதிபதியின் மனைவியிடம் பேச மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது...
Ad Widget

முதலமைச்சர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது – சிவாஜிலிங்கம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுப்பது, என்ற பேச்சுக்கே இடமில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டால் மாத்திரமே கூட்டமைப்பால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அவ்வாறான எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார். 'வடமாகாண...

கோப்பாய் கோமகனின் சமாதி விடுவிப்பு

கீரிமலைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான 'கோப்பாய் கோமகன்' என்று அழைக்கபடும் கு.வன்னியசிங்கத்தின் சமாதியானது இராணுவத்தினரால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. கோமகனின் சாம்பலை வைத்து அமைக்கப்பட்ட இந்தக் கோவிலின் மேல் பகுதியில் சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டு, கவுணாவத்தை பூசகர் ஒருவர் பூசை வழிபாடுகளாற்றி வந்திருந்தார். இந்தச் சமாதியை கோமகனின் மனைவி கமலா அமைத்து...

ஐ.நா. கூட்டத்தொடரில் கையளிக்கும் பிரேரணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் செல்லும் போது, கூட்டத்தொடரிலும் அங்கத்துவ நாடுகளிடமும் கையளிப்பதற்காக, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளை வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிடம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட, 'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது' மற்றும் 'இலங்கையில்...

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க விரும்பும் அதிபர்கள் தங்கள் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் அதற்கான முன் அனுமதி பெற்று அதனைச் செயற்படுத்த முடியுமென வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (11) காலை 7 மணிக்கு நல்லூர் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய...

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் கைகலப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும் கனிஷ்ட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு, பல்கலைக்கழக நிர்வாக தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கனிஷ்ட மாணவர்கள் இடுப்புப் பட்டி அணிந்து வருவதற்கும் மரங்களின் கீழுள்ள பென்ச்களில் அமர்வதற்கும் சிரேஷ்ட மாணவர்கள் அனுமதியளிக்க மறுத்தனர். அதனையும் மீறி கனிஷ்ட மாணவர்கள் நடந்து கொண்டதாகக் கூறப்பட்டு, ஏற்பட்ட முறுகல் நிலை...

பதவிகளை மாற்றிக்கொண்ட பிரதியமைச்சர்கள்

தேசிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று புதன்கிழமை (09) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இரு பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை மாற்றிக்கொண்டுள்ளனர். சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிமல் லன்ஸாவும் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அருந்திக்க பெர்னாண்டோவும் தங்களுடய அமைச்சுப் பதவிகளை மாற்றிக்கொண்டுள்ளனர். இதற்கமைவான, உள்நாட்டலுவல்கள்...

வல்வெட்டித்துறை கடற்கரையில் இந்திய மீனவர்களால் வலைகள் நாசம்

வல்வெட்டித்துறை கடற்கரையில் இருந்து பத்து கிலோமீற்றர் தூரம் வரை வந்த இந்திய மீனவர்களின் றோலர்கள் செவ்வாய்க்கிழமை (08) , அப்பகுதியிலிருந்து சிறிய கண்ணாடி இழைப்படகுகளில் சென்ற மீன்வர்களின் வலையை நாசமாக்கியதில் இரண்டு இலட்சம் தொடக்கம் மூன்று இலட்சம் வரை நட்டம் ஏற்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காற்றுக்கடலாக இருந்ததனால் கடற்படையினர் கடலில் இல்லாததால்,...

எண்ணத்தை மாற்றுவோம் – பிரதமர்

அமைச்சர்கள் வசதிகளை பெற்றுக்கொண்டு வேலைச்செய்வதில்லை என்ற எண்ணமே மக்கள் மனதில் இன்னும் இருக்கின்றது. அந்த எண்ணத்தை ஆறு மாதங்களில் மாற்றுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெல்லிப்பழையில் புடவைக் கடை தீப்பிடித்தது! பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசம்!!

புடவைக் கடை ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் பல இலட்சக்கணக்கான பெறுமதி வாய்ந்த உடைகள் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை சந்தியில் இடம்பெற்றுள்ளது. திடீரென புடவைக் கடையில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர். அத்துடன் யாழ். மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவு உடனடியாக விரைந்து...

யாழில் படை முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 23 காணிகளை விடுவிக்கப் படைத்தரப்பு இணக்கம்

யாழ்.மாவட்டத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 23 பேருக்குச் சொந்தமான காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு படைத்தரப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், தெல்லிப்பளை, மருதங்கேணி, பருத்தித்துறை, கரவெட்டி, உடுவில், யாழ்ப்பாணம், சங்கானை ஆகிய 10 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 29 கிராமசேவர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான...

நோயாளிக்கு 3 மணிநேரம் ஆகியும் சிகிச்சை அளிக்காத சம்பவம் காரைநகரில் பரபரப்பு

மயக்கமடைந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக சிகிச்சைக்கு உட்படுத்தப்படாது காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று காரைநகர் வைத்திசாலையில் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்த வேளையில் பந்தைப் பிடிக்க ஒடிச்சென்ற வேளையில் இருவர் மோதிக்கொண்டதில்...

வடமாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த இளைஞர் யுவதிகளுக்கு இலவச பயிற்சி நெறி

வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் பொருட்டு, ´சுற்றுலாத்துறையும் விருந்தோம்பலும்´ எனும் தொனிப்பொருளில் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அப்பயிற்சிநெறிக்கான பாடசாலை நேற்று புதன்கிழமை யாழ் நகரில் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலை யாழ். நகர் 3ஆம் குறுக்கு வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனும், கனேடிய பல்கலைக்கழக வதிவிட பிரதிநிதி எஸ்தர் மக்டோன்ஸ்...

வாகன விபத்தில் புளொட் சிரேஷ்ட உறுப்பினர் உயிரிழப்பு

யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல-403, மின்சார நிலைய வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை வின்சென்ற் கெனடி என்பவர் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரான வின்சென்ற் கெனடி கழக மத்தியகுழு உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பருத்துத்துறை நகரபிதாவுமாவார். திருமலையில் கடந்த திங்கட்கிழமை (07.09.2015) இடம்பெற்ற...

2020ம் ஆண்டுவரை இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது

எதிர்வரும் ஐந்து வருடங்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவோ மாற்றவோ இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த அரசாங்கம் நீண்டகாலம் இருக்காது கவிழ்க்க முடியும் என சிலர் கூறுவதாகவும் அது நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 2020ம் ஆண்டுவரை அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் எதிர்பார்க்க கூடாது என்றும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட...

சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 கிலோ கிராம் சீனிக்கான வரி 12 ரூபாவினாலும் 1 கிலோ கிராம் உருளை கிழங்கிற்கான வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் சீனியின் சந்தை விலைகளில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி...

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் விபரம் இதோ!

தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு, இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி - தேசிய ஒருமைப்பாட்டு டிலான் பெரேரா - பெருந்தெருக்கள் ரி.பி.ஏக்கநாயக்க - காணி பிரியங்கர ஜயரட்ன - சட்டம் ஒழுங்கு லக்ஷமன் யாப்பா -...

நீதிமன்றக் கட்டடம் மீதான தாக்குதல்: 3 பேருக்கு பிணை! 21 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்தின் மீது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் சந்தேக நபர்கள் 24 பேர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பலர் ஏற்கனவே கட்டங்கட்டமாக பிணையில் விடப்பட்டுள்ளார்கள். இவர்கள் 24 பேரும் கைதுசெய்யப்பட்டு...

கையெழுத்துபோராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகம் இணைந்தது

Loading posts...

All posts loaded

No more posts