இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை தரவேண்டும் தேசிய அரசு! – சுமந்திரன்

இந்த தேசிய அர­சாங்­கத்­தி­லா­வது தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்­றுத்­தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரிவித்துள்ளார்.

அமை­யப்­பெற்­றுள்ள தேசிய அர­சாங்கம் தொடர்பில் எதிர்க்­கட்சி என்ற வகையில் நாம் எமது வாழ்த்­துக்­களை தெரி­விக்­கின்றோம். கடந்த காலத்தில் மக்­க­ளுக்கு கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய இப்­போதும் ஒரு கூட்டு அர­சாங்கம் அமை­யப்­பெற்­றுள்­ளது.

ஆகவே அதில் நாட்டின் நலன் கரு­திய செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்­களின் தேவை­க­ளையும், நலன்­க­ளையும் கருத்தில் கொண்டு இந்த புதிய அர­சாங்கம் செயற்ப்­பட வேண்டும். நாட்­டுக்கும் மூவின மக்­க­ளுக்கும் நன்மை தரக்­கூ­டிய வகையில் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டு­களை நாம் ஆத­ரிப்போம். அதேபோல் எதிர்க்­கட்சி என்ற வகையில் நாட்­டுக்கு தேவை­யான கருத்­துக்­களை நாம் முன்­வைப்போம்.

எனினும் நாம் இந்த தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கைக்கு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­கின்றோம். பாரா­ளு­மன்­றத்­திலும் நாம் இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டினோம். எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் இந்த அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பதை ஆதரிக்கவில்லைவில்லை என வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­தி­ருந்தார்.

அதே நிலைப்­பாடே இப்­போதும் உள்­ளது. இந்த தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அள­வுக்கு அதி­க­மாக அதி­க­ரிப்­பதை அவ­சி­ய­மற்ற ஒன்­றா­கவே கரு­து­கின்றோம். நாட்டில் குறைந்த அமைச்­ச­ர­வையை கொண்ட நாடுகள் சிறப்­பாக செயற்­ப­டு­கின்­ற­மைக்கு பல உதா­ர­ண­களை முன்­வைக்க முடியும். ஆகவே அதை அர­சாங்கம் தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். எனினும் ஏனைய விட­யங்­களில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை நாம் வர­வேற்போம். கூட்டு அர­சாங்கம் இன்று உத்­தி­யோக பூர்­வ­மாக அமைந்­துள்­ளது. அதற்கு எமது வாழ்த்­துக்­களை தெரி­விக்­கின்றோம்.

மேலும் இந்த நாட்டில் இன்னும் தீர்க்க வேண்­டிய தேசியப் பிரச்­சி­னைகள் பல உள்­ளன. குறிப்­பாக தமிழ் மக்­களின் நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை பெற்­றுக்­கொள்ள வேண்­டுய அவ­சியம் உள்­ளது. அதுவும் விரைவில் ஒரு தீர்வு வேண்டும் என்றே நாம் எதிர்ப்பார்க்கின்றோம். ஆகவே அமையப்பெற்றுள்ள தேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் இந்த அரசாங்கத்துக்கு வலியுறுத்துகின்றோம் என்றார்.

Related Posts