- Thursday
- May 14th, 2026
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் வெளியிட்ட விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் போரை நடத்திய இராணுவத் தளபதியான சரத்பொன்சேகா வரவேற்றுள்ளார். அத்துடன் நீதியை நாட்டப்படுவதற்கான செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவவேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இந்த நாட்டு மக்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும், இந்த...
இந்திய ரோலர் படகின் அத்துமீறலை கண்டித்து மாபெரும் முற்றுகைப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் கூட்டுறவு சங்க சம்மேளனத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர்...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக தாக்கல்செய்யப்பட்டுள்ள அறிக்கையின் சில விஷயங்கள் தொடர்பான உள் நாட்டு விசாரணைகளை 18 மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்போவதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மங்கள சமரவீர இந்தத் தகவலைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி...
சர்வதேச விசாரணை மட்டுமே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் கூட்டாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை என்று கோரி வந்த அமெரிக்காவும், இப்போது தவறான...
ஐநா ஆணையாளரின் அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையினை வெல்வது எப்படி என்பது குறித்து கரிசனை கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை உள்ளகப்பொறிமுறையினை நிராகரித்த ஆணையாளரின் காரணங்களினை வரவேற்றுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு(TACIAM) முழுமையான சர்வதேச விசாரணையே தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு...
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை போர்க்குற்றவியல் அறிக்கை அல்லவென தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.மேலும் அறிக்கையினை வரவேற்பதோடு கலப்பு நீதிமன்றம் தொடர்பில் முழுமையான தெளிவு ஏற்படுத்தப்படவேண்டும் என்றார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசிய முன்னணியின் சார்பாக...
தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் அதேவேளை, இங்குள்ள மக்களது வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் ஏனைய தேவைப்பாடுகளுக்கும் தீர்வு காண்பதற்கு எதிர்காலத்தில் எமது முழுமையான பங்களிப்பு தொடருமேன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வேலணை சரவணைப்பதி சிறி செல்வக்கதிர்காம தேவஸ்தானத்தின் கும்பாபிசேகம்...
நெடுந்தீவைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாண கிளை மற்றும் UTE ஆகியன இணைந்து நீர் வழங்கல் மற்றும் இரு புதிய கடல் நீர் சுத்திகரிக்கும் (Reverse Osmosis) நிலையங்களை நிறுவ முன்வந்துள்ளன. நெடுந்தீவுப் பகுதியில் தூய்மையான குடிநீருக்காக காணப்படும் தேவையை நிவர்த்தி செய்யும்...
இம்முறை க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இணைய வழி ஊடாக கணிதப் பாடத்துக்கான ஆற்றலை மேம்படுத்தும் உன்னத திட்டம் ஒன்றை கொமர்ஷல் வங்கி தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் Optimized IT என்ற நிறுவனத்துடன் இணைந்து அண்மையில் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இணைய வழி மூலமாக பல் தெரிவு...
2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பை பதிவு செய்தல் (தற்காலிக நடைமுறை) சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பத்தாட்சி மற்றும் இறப்பத்தாட்சி படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் இறப்பத்தாட்சிபடுத்தும் அதிகாரத்தை பதிவத்தாட்சி ஆணையாளர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது. எனினும் பயங்கரவாததாக்குதல், மக்கள் புரட்சி மற்றும் இயற்கை...
கொத்து கொத்தாய் குண்டுகள் வீசி கொல்லப்பட்ட தமிழர்கள்... குழந்தைகளும், பெண்களும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து மடிந்ததை காண்பவர்களின் கண்களில் மட்டுமல்ல நெஞ்சங்களிலும் ரத்தத்தை வரவழைக்கும் ஆவணபபடம்தான் 'இலங்கை - நீதியைத் தேடி'. இலங்கை இறுதிப்போரில் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறது "இலங்கை-நீதியைத் தேடி" என்ற ஆவணப்படம். போர் இறுதிக்காலங்களில்...
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற குளங்களில் ஒன்றான பிரமந்தனாறு குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. பிரமந்தனாற்று வடிநிலத்தின் குறுக்காக அணைக்கட்டை உருவாக்கியே பிரமந்தனாற்றுக் குளம் உருவாக்கப்பட்டது. இக்குளத்திலிருந்து பெறும் நீர்ப்பாசனத்தின் மூலம் 600 ஏக்கர் பரப்பளவில் மிளகாய், நிலக்கடலை, வெங்காயம் போன்ற மறுவயற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக உள்ள பகுதியாக...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையின் அறிக்கைக்கு, இலங்கை தனது பதிலை வழங்கியுள்ளது. அவ்வறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்குப் போதிய கவனம் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இது தொடர்பில் மேலதிகக் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள்: மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினது...
சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடியவாறு புதிய சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொடதெனியவைச் சேர்ந்த சேயா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...
ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த விடயங்களுக்கு இன்று...
தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தருணத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் ஊடங்கங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு...
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான நவீல்ட் பாடசாலை அதிபருக்கு எதிரான சாட்சியங்கள், வாய்பேச முடியாதவர்களாக இருப்பதால், அவர்களுடைய சாட்சி பதிவு செய்வதற்கு சைகை மொழிபெயர்பாளர் ஒருவருரை பெறுவதில் தாமதம் உள்ளதாக சாவகச்சேரி பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். வெகுவிரைவில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு பூரணமான அறிக்கையினை சமர்பிக்குமாறும், வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் எனவும் சாவகச்சேரி...
போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடு என்றும் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் போர்க் குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறும்...
மருத்துவ நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் எமது பிரதேசங்களில் இல்லாத நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரனின் இடமாற்றம் ஏற்றதல்ல என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட பொது வைத்தயிசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரனுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் இதனை நிறுத்த தன்னாலான முயற்சியை மேற்கொள்வேன் எனவும் வட மாகாண சுகாதார அமைச்சர்...
போர்க்குற்ற விசாரணைகளை மேற் கொள்வதற்கு கலப்பு நீதிமன்றம் நியமிப்பதினால் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினால் இலங்கை தொடர்பாக இன்று வௌியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,...
Loading posts...
All posts loaded
No more posts
