வடக்கில் 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு

வட மாகாணத்திற்கு உட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதாந்தம் 2000 ரூபாய் வாழ்வாதாரக் கொடுப்பணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார். அவர்களில் இருதய நோய் போன்ற நிரந்தர நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் தேவையைப் பொறுத்து 5000 ரூபா வரை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு...

தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பலவீனமாக்க தென்னிலங்கை சூழ்ச்சி

திட்டமிட்ட குடியேற்றத்தினால் தமிழர் சனத்தொகை வீதத்தினைக் குறைத்து, அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து எமது அரசியல் பலத்தை பலவீனப்படுத்தும் தென்னிலங்கையின் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையில் எமது வாக்குகளை முழுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்துவத்தை பலமாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன்...
Ad Widget

தமிழ் தேசியத்திற்கு குரல்கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமையாகும் – யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் தமிழர்களுக்கு என்றுமில்லாதவாறு நெருக்கடி மிக்க தேர்தலாக உள்ளது. காரணம் அதிக எண்ணிக்கையான கட்சிகளும் வேட்பாளர்களும் வடக்கு கிழக்கில் தேர்தலுக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தமிழரின் பலத்தை உடைத்து அவர்களை உதிரியாக்கிமிதவாத அரசியல் பங்களிப்பையும் பலவீனப்படுத்துவதே அத்தகைய சக்திகளின் நோக்கமாகும்.அத்தகைய நோக்கத்தைமுறியடித்து தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவது தமிழ் மக்களின் கடமையாகும். இத் தேர்தலில் தமிழ்...

முன்னணி ஆதவாளர்கள் மீது உடுப்பிட்டி,கனகராஜன் குளம் பகுதிகளினில் தாக்குதல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளரொருவர் நேற்றிரவு உடுப்பிட்டி பகுதியினில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். அதே வேளை கனகராயன் குளப்பகுதியினில் வைத்து மற்றுமிரு ஆதரவாளர்கள் வேட்பாளர் ஒருவரின் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு வடமராட்சி பகுதியினில் பிரச்சார நடவடிக்கைகளினை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியிருந்த அவரை அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் நபர்கள் தாக்கியுள்ளனர்.செயின் மற்றும் கூரிய...

தீவுப்பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கடற்படையினர் கொண்டுசெல்வர்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கும் தீவுப்பகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், கடற்படையினரின் பாதுகாப்புடன் அவர்களின் படகுகள் மூலம் கொண்டு செல்லப்படும் என யாழ். மாவட்ட செயலரும் தெரிவித்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். 'எதிர்வரும் 16ஆம் திகதி காலை முதல் வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு...

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரச அலுவலர் தொடர்பில் விசாரணை

தேர்தல் விதிமுறையை மீறி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரனுக்குச் சார்பாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஈடுபட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலக ஊழியர் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என யாழ். மாவட்ட செயலரும் தெரிவித்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (11) சாவற்கட்டு பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல்...

ஊழல் மோசடிகாரர்களை தேசிய பட்டியலில் மூலம் பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம்

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவின்போது மோசடிகாரர்களுக்கு இடமளிக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள், தேர்தல் சட்டத்தை மீறியோர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளோர், சுற்றாடல் அழிவு ஏற்படுத்தியோர்,...

தமிழர்களின் அரசியல் பலம் மீண்டும் நிரூபிக்கப்பட வேண்டும்

தமிழர்களின் அரசியல் பலத்தை தமிழர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்காக, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போதும் எமது அரசியல் பலத்தை மீண்டும் நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கிளிநொச்சி, பூநகரி, வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு...

விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை பலி

மீசாலை பகுதியில் புதன்கிழமை (12) இரவு துவிச்சக்கரவண்டியில் சென்றவரை வாகனம் ஒன்று மோதியதில் துவிச்சக்கரவண்டியில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த விசாசித்தம்பி தெய்வநாதன் (வயது 40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உறவினர் ஒருவருடைய வீட்டில் குழாய்க் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டுவிட்டு, வீடு சென்றுகொண்டிருந்த இவரை வீதியில்...

எலிகடித்த சிசுவின் சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு

வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் முகத்தை எலிகள் கடித்ததால் அச்சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது. உடுவில் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குப் பிறந்த சிசுவொன்று, பிறந்த மறுநாளே உயிரிழந்துள்ளது. இந்த சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த போதே,...

வெற்றிலை, கையை தவிர்த்து எந்த விலங்குக்கும் புள்ளடியிடுங்கள்

ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

கூட்டமைப்பின் பலம் என்பது தமிழ் மக்களின் பலம்: தாயகத்திலும் புலத்திலும் உள்ள மக்கள் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும்! – மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்பது தமிழ் மக்களின் பலம். அந்தப் பலத்தைப் பாதுகாத்து எமது தாயகத்தை வளப்படுத்த தாயகத்திலும் புலத்திலும் இருக்கின்ற தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார். இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு...

இன்று அகில இலங்கை தமிழ்காங்கிரசின் மாபெரும் பரப்புரைக்கூட்டம்

இன்று (13-08-2015 )வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு அகில இலங்கை தமிழ்காங்கிரஸ்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பரப்புரைக்கூட்டம் பருத்தித்துறை மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் தலைமையில் இப் பரப்புரைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சைக்கிள் சின்ன முதன்மை வேட்பாளரை இலக்கு வைத்து வவுனியாவில் பொலிசார் மீண்டும் அடாவடி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை இலக்கு வைத்து பொலிசாரின் அடாவடிச் செயற்பாடுகள் தொடர்கின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று புதன்கிழமை சைக்கிள் சின்னத்தின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை அழைத்து வருவதற்காக...

வாக்காளர்கள் யாருடைய மிரட்டல்களுக்கும் பயப்படத் தேவையில்லை : யாழ்.அரச அதிபர்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் பயப்பட தேவையில்லை சிலர் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரிய வரும் என மிரட்டுவதாக தகவல்கள் உண்டு அவ்வாறு நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதனை யாராலும் எச் சந்தர்ப்பத்திலும் பார்க்க முடியாது எனவே அவ்வாறானவர்களின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்....

இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இலவச பஸ் சேவை

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக இலவச பஸ் சேவை நடத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார். கரவெட்டி பிரதேச செயலகத்திலிருந்து குஞ்சர் கடையடி, நெல்லியடி, கொடிகாமம் வீதி, துன்னாலை கலிகைச்சந்தி, மந்திகைச்சந்தி, மாலுசந்தி, உடுப்பிட்டி, அச்சுவேலி, புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், மல்லாகம் ஊடாக...

யாழ்ப்பாணத்தில் 13 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றம்

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏற்பாடாகியிருந்த வாக்களிப்பு நிலையங்களில் 13 நிலையங்களின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார். புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையம், புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாலயத்துக்கும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் இருந்த இரண்டு...

கிளிநொச்சியில் லொறி தீக்கிரை

கிளிநொச்சிப் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் லொறி ஒன்று தீக்கிரையாகியுள்ளது. ​நேற்று மாலை 05.15 அளவில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து வெளியேறிய பொற்றோலினாலேயே லொறி தீப்பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புங்குடுதீவு விவகாரம்: கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், புதன்கிழமை (12) உத்தரவிட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 60 நாட்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 9 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, 4ஆவது சந்தேகநபரிடமிருந்து...

வித்தியா வழக்கைத் திசை திருப்ப முயன்றராம்! துவாரகேஸ்வரனுக்கு ரூ.20 இலட்சம் பிணையில் விடுதலை!!

புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கை திசைதிருப்பும் விதத்தில் நடந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.தே.கவின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் பிரபல வர்த்தகருமான துவாரகேஸ்வரனை 20 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதித்தது. மாணவியின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வந்த சட்டத்தரணி கே.வி.தவராசாவை...
Loading posts...

All posts loaded

No more posts