Ad Widget

வடமாகாணசபையின் கோரிக்கையை நிறைவேற்ற மதுவரித் திணைக்கள ஆணையாளர் நடவடிக்கை

வடமாகாணசபையின் கோரிக்கையை நிறைவேற்ற மதுவரித் திணைக்கள ஆணையாளர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 09ஆம் திகதி வடமாகாண எல்லைக்குள் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகளை மூடவேண்டும் எனவும் ஆலயங்கள், பாடசாலைகள், பொதுநிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு அருகாமையில் இயங்கும் மதுபான நிலையங்களுக்கான அனுமதியை...

வேள்வியை நிறுத்த 90 வீதமான ஆலயங்கள் சம்மதம்!!

மிருக பலியிடலை நிறுத்துவதற்கு 90 வீதமான ஆலயங்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மிருக பலியிடல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் 25க்கும் மேற்பட்ட ஆலயங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதே கலந்துகொண்ட ஆலயங்களில் 90 வீதமானவை...
Ad Widget

யாழில் கறுப்புக் கண்ணாடி பொருத்திய தலைக்கவசத்துக்குத் தடை! ஒரே நாளில் 12 பேருக்கு அபராதம்

கறுப்புக் கண்ணாடி பொருத்திய தலைக் கவசத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்திய 12 பேருக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றில் தலா ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கபட்டது. சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்ட பரிசோதனையின் போது கறுப்புக் கண்ணாடி பொருத்திய தலைகவசத்துடன் அணிந்து பயணித்தவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்குகள் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை...

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம்!

பொதுத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதன்படி, ஜுலை 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கமுடியும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

உயர் தரப் பரீட்சை திகதியில் மாற்றம்!

ஓகஸ்ட் 14 - 21 ஆம் திகதி வரை நடைறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் அத்தினங்களில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பொதுத் தேர்தலையொட்டியே பரீட்சை தினங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. எனினும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம்...

சரியான பாதையில் பயணிக்கிறது இலங்கை! – அப்துல் கலாம் பாராட்டு

இலங்கை இன்று சரியானதொரு பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதேபோல் பசுமையான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்திக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் தெரிவித்தார். "அறிவுப் பொருளாதாரத்தில் சக்தி சவால்கள்” எனும் தலைப்பிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருக்கும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி...

தேர்தல் மறுசீரமைப்பால் கூட்டமைப்புக்கு பாதிப்பில்லை – சுமந்திரன்

'அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்கள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த தேர்தல் முறைமை மாற்றத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பிரச்சினை வராது. இருப்பினும், அடுத்தடுத்த கட்டங்களில் உள்ள சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படும். இதனாலேயே 20ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்க்கின்றோம்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

விடுதியில் தங்கிய பெண்களுக்கு விளக்கமறியல்

கடத்தியதாக நாடகமாடி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விருந்துனர் விடுதியில் இரு நாட்கள் தங்கியிருந்த வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 35 வயதுடைய இரு பெண்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, வியாழக்கிழமை (25) உத்தரவிட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தனர். கடந்த 22ஆம்...

மாணவிகளை புகைப்படம் எடுத்தவர்கள் கைது

கந்தரோடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு முன்னால் நின்று பாடசாலை மாணவிகளை கைபேசியில் புகைப்படம் எடுத்த இருவரை வியாழக்கிழமை (25) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தனர். கைதான இருவரும் அளவெட்டி தெற்கு பகுதியினை 21, மற்றும் 23 வதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து...

வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் புங்குடுதீவு ம.வியில் அனுஷ்டிப்பு!

கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கல்வி கற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிளியூர் ரமணன் உருவாக்கிய 'வித்தியா...

கொலைகாரனுக்கு சமூகவலைத்தளங்களில் பெருகும் ஆதரவு!

யாழ். மிருசுவிலில் 2000ஆம் ஆண்டில் 8 தமிழ் மக்களைப் படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றுமுன்தினம் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் சுனில் ரத்னாயக்கவுக்கு ஆதரவாக ருவிற்றரில் தொடங்கப்பட்ட பக்கத்திற்கு முதல் நாளிலேயே 10 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 'போர் வெற்றி வீரர் சுனில் ரத்னாயக்கவை பாதுகாப்போம்' என்ற பொருள்படும்...

மஹிந்த – மைத்திரி அணிகள் இணைப்பு அறுவர் குழு எண்மராகியது! தேர்தலுக்காக விசேட ஏற்பாடாம்!!

மைத்திரி அணி - மஹிந்த அணி என இரண்டாகப் பிளவடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்பதற்காக ஏற்கனவே ஆறு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியை ஒற்றுமைப்படுத்தி பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக எட்டுபேர் அடங்கிய மற்றுமொரு குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

யாழில் திரியபியச வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காசோலை வழங்கிவைப்பு!

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் உள்ள வீடுகளற்ற குடும்பங்களிற்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஆரம்பகட்ட நிகழ்வு அண்மையில் (24) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திரியபியச வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் இம்முறை யாழ் மாவட்டத்தில் உள்ள வீடுகளற்ற 300 பயனாளிகள் தெரிவு...

இந்திய முன்னாள் ஜனாதிபதி இலங்கை இன்னாள் ஜனாதிபதி இடையே சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் நேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோரும் பங்கேற்றனர்.

மீண்டும் தொடங்கியது ஆபத்தான கடல் பயணம்: 78 பேர் கைது

கடல் வழியே சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த 78 இலங்கையர்கள் கிரிந்தவில் இருந்து 65 மைல் கடல் தொலைவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் இந்திக சில்வா தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 59 தமிழர்களும் 17 சிங்களவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் காலி துறைமுகத்திற்கு...

ஜூலை 6 தொடக்கம் 15 வரை வேட்பு மனு கோரல்

ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜூலை 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னரான புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் 1ம் திகதி கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு!

இலங்கையில் உள்நாட்டுப் போரினாலும் இன வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை துரிதமாக வழங்க தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாத நிலையில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சின் நிர்வாகத்திலுள்ள புனர்வாழ்வு அதிகாரசபையில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானத்தின்படி அந்தக் கோப்புகளை மீளாய்வு...

23 மில்லியன் ரூபா செலவில் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் :முல்லை விநாயகபுரம் விவசாயிகளிடம் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கையளிப்பு

முல்லைத்தீவு விநாயகபுரத்தில் 22.7 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நேற்று வியாழக்கிழமை (25.06.2015) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்து, அதனை இத்திட்டத்தின் பயனாளிகளான விநாயகபுரம் விவசாயிகளிடம் கையளித்துள்ளார். போரினால் இடம்பெயர்ந்த விநாயகபுரம் மக்கள் மீளக்குடியேறியதன் பின்னர் நீர்ப்பாசன வசதிகள்...

அப்துல் கலாம் இலங்கையில்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்தார். மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த அவரை அமைச்சர் சம்பிக்க ரணவக்க விமான நிலையத்தில் வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும்...

கோப்பாய் கொலை வழக்கில் பிணையில் சென்ற முதலாவது எதிரியும் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினாராம்!

கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை வழக்கொன்றில் பிரதான எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், அண்மையில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலில் எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்துச் செய்வதற்கு மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு கோப்பாய் பிரதேசத்தில் இரத்தினம்...
Loading posts...

All posts loaded

No more posts