தலைமன்னார் – ராமேஸ்வரம் தரைவழி பாலம் குறித்து மோடி ஆலோசனை

இலங்கையின் தலைமன்னாரையும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரைவழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பாரிய தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார...

ஜெனீவா செல்ல அனுமதிக்காவிடின் பதவி துறப்பேன்! – அனந்தி

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதியளிக்காவிட்டால் பதவி துறக்கப் போவதாக அக்கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரித்துள்ளார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வது பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை என அறிவித்துள்ளது. வட...
Ad Widget

யாழில் குடிநீர் போத்தல்களின் விற்பனை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் போத்தல்களின் விற்பனை அதிகரித்துள்ளது. சுன்னாகம் பகுதியிலுள்ள மின்சார சபையின் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணமாக, வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் கடந்த காலங்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ள கிணறுகளின் நீரைப் பொதுமக்கள் பருகமுடியாத நிலை ஏற்பட்டதுடன், மக்களுக்கான குடிநீரை பிரதேச சபைகள், மாவட்டச் செயலக...

நாவற்குழியில் பறவைகள் சரணாலயம்

நாவற்குழி பகுதியில் பறவைகள் சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வடமாகாண விவசாய மற்றும் சூழலியல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தார். பறவைகள் சாரணாலயத்தை ஏற்படுத்துவதற்காக இப்பகுதியின் நன்னீர் அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டு, நன்னீர் சேகரிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அதன் பின்னர்...

ஜெனிவா செல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை – சிவாஜிலிங்கம்

ஜெனிவாவுக்கு செல்வதற்காக அனுமதியை கோரி வடமாகாண ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்து இரண்டு வார காலமாகின்ற போதிலும் இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். வடமாகாண சபை தலைவரிடம் உரிய அனுமதி பெற்று...

வடக்கில் வனஜீவராசிகள் வனாந்தரங்களுக்கு பெயரிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

வடமாகாணத்தில் உள்ள வனஜீவராசிகள் வனாந்தரங்கள் 16 யையும் பெயரிடுமாறு ஜனாதிபதியும் சுற்றாடல்துறை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவிடம் சூழலியலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்த பெயரிடும் நடவடிக்கை கடந்த மூன்று வருடங்களாக தாமதமாகியுள்ளதாகவும் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொருளாதார அமைச்சின் எதிர்ப்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இந்த வனஜீவராசிகள் வனாந்தரத்தை பெயரிடமுடியாத நிலைமை என்பட்டதாகவும் அவர்கள், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். ஐ.நா...

கரையோரப்பகுதிகளை சுத்தம் செய்ய முன்வருமாறு அரச அதிபர் அழைப்பு

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் எதிர்வரும் 21 ஆம் திகதி அனுட்டிக்கப்படுகின்றது. கரையோரப்பகுதிகளை சுத்தம் செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்தார். யாழில் சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முப்படை மற்றும், பொலிஸ், பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர்...

வவுனியா நகரசபை பெண் அதிகாரியை பலர் முன்னிலையில் கெட்டவார்த்தைகளால் பேசிய உள்ளூராட்சி ஆணையாளர்!

நகரசபையின் சம்பள பிரச்சனையை சீர்செய்த பெண் அதிகாரியை அரசியல்வாதிகளுடன் கீழ்த்தரமாக நடந்தாக தெரிவித்து கெட்டவார்த்தைகளால் பேசியமையால் இறப்பதை தவிர வேறு வழி தனக்கு தெரியவில்லை என வவுனியா நகரசபையின் பெண் அதிகாரி ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அப் பெண் அதிகாரி கருத்து தெரிவிக்கையில், சுகாதார திணைக்களத்தில் 13 வருடமாக பணியாற்றிய...

சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு! ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பந்தன்!!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு'' - என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பைத் தனது திருகோணமலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நடத்தினார். இந்தச்...

44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள், நேற்று மாலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் சில அமைச்சுக்கள் குறித்த விபரம் வருமாறு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு - வீ.சிவஞானஜோதி நிதி அமைச்சு - ஆர்.எம்.எச்.சமரதுங்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு - எஸ்.எம்.கோதாபய ஜெயரத்ன...

யாழில் இன்னும் 43 இடம்பெயர்ந்தோர் முகாம்கள்

இலங்கையில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், அங்கு வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்துவருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இடம்பெயர்ந்தவர்களின் 43 முகாம்கள் இருப்பதாக தாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. 1500 குடும்பங்களைச் சேர்ந்த 6000 பேர்...

செம்மணி வெள்ளநீர்த் தடுப்பணை புனரமைப்புப் பணிகள் மாரிகாலத்துக்கு முன்பாக முழுமை பெறும் – ஐங்கரநேசன்

உப்பாறு நீரேரியில் சேகரிக்கப்படும் மழைநீரை செம்மணி வயல்களுக்குள் செல்லவிடாது தடுக்கும் வெள்ளநீர்த் தடுப்பணையைப் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாகவும், புனரமைப்பு வேலைகள் யாவும் மாரிகாலத்துக்கு முன்பாக முழுமைபெறும் எனவும் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வெள்ளநீர்த்தடுப்பணை நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாததால், கடந்த சில ஆண்டு மழைகாலத்தின்போது வெள்ளநீர் செம்மணி வயல்களை மூழ்கடித்ததோடு, உப்பாற்று ஏரியில்...

அதிகரித்து வரும் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் : பொலிஸார் மீது மக்கள் விசனம்

சுன்னாகம் இணுவில் பகுதிகளில் மீண்டும் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் ஆரம்பித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே இச்சம்பவம் இடம் பெற்று வருகின்றது. கடந்த சனிக்கிழமை இரவும் இளைஞர்குழுக்கள் பகிரங்கமாக வாள்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களுடன் நடமாடியதாகவும் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தினால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள்...

மீற்றர் வட்டியால், மகனை காணாது தவிக்கும் தாய்

கரணவாய் தெற்கு கரவெட்டி பகுதியினைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனை 2013ஆம் ஆண்டிலிருந்து காணவில்லை என காங்கேசன்துறை மோசடிப்பிரிவு அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு கரணவாய் தெற்கு கரவெட்டி பொன்னன் வளவு பகுதியினைச் சேர்ந்த மேற்படி இளைஞன் ஒருவர் கடை ஒன்றை ஆரம்பித்து வியாபாரம் செய்வதற்கென 3 இலட்சம் ரூபாய் பணத்தினை...

யாழ்.வாசியின் ஓட்டோ சந்தை

முச்சக்கர வண்டி ஒன்றினை தனது வியாபார நிலையமாக்கி அதன் மூலம் தனது அன்றாட வருமானத்தினை தேடிக் கொள்ளும் யாழ்.வாசியின் முயற்சியை பலரும் வியப்புடன் பார்த்து அவரை பாராட்டியும் உள்ளனர். தனது மரக்கறிச் சந்தை வியாபாரத்தை விஸ்தரிப்பதற்காக முச்சக்கர வண்டி மூலம் தனது வியாபார பயணத்தை மேற்கொள்வது வியக்கத்தக்க விடயமாகும் என மக்கள் பலரும் அவரை பாராட்டியிருக்கின்றனர்.

யாழில் இனஅழிப்பிற்கான நீதி கோரி பாதயாத்திரை! : தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவு

இனஅழிப்பிற்கான நீதி விசாரணை வேண்டி யாழில் பாதயாத்திரை போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து புறப்படும் இப்பாத யாத்திரை யாழ்ப்பாணம் வரை ஏ-9 வீதி வழியே பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ள பாதயாத்திரை போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள்...

விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை! கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு! மாவை

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். வவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், விக்னேஷ்வரன் மீது பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார். இந்தநிலையில் சேனாதிராஜா நேற்று இந்திய ஊடகமான ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தலின்போது, விக்னேஷ்வரனின் நடத்தை...

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அத்துடன் மீண்டும் ஒரு சர்வதேச விசாரணை...

யாழில் மாணவர்களுக்கு சைவநெறிப் போட்டி

யாழ். கல்விவலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே சைவசமய அறிவை மேம்படுத்தும் வகையில் சைவநெறிப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்கமைய பேச்சு, மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல் மற்றும் பண்ணிசை ஆகிய போட்டிகள் தரம் 6 முதல் க.பொ.த உயர்தர மாணவர்களிடையே, நான்கு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,...

மேல் – வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் நியமனம்!

மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் இருவர் நேற்று (07) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாணசபை முதலமைச்சாராக இசுரு தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் முன்னிலையில் மேல்மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதேவேளை வடமேல் மாகாண...
Loading posts...

All posts loaded

No more posts