Ad Widget

மாணவர்களை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்

சுன்னாகம் நகரப்பகுதியில், பாடசாலை மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும், நான்காவது சந்தேகநபரை எச்சரித்த நீதவான், அவரை 60,000 ரூபாய் ஆள்பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணர்;களான கண்ணதாசன் கோணேஸ்வரன் (வயது 18), பத்தசீலன் விதுஸன் (வயது 18) ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) சந்தேகநபர்களால் தாக்குதலுக்குள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மானிப்பாய், மல்லாகம் பகுதிகளில் வைத்து திங்கட்கிழமை (21) இரவு சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.

Related Posts