யாழில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்

விஜய் நடித்து நேற்று வியாழக்கிழமை (01) வெளியிடப்பட்ட புலி படத்தை மொக்கைப்படம் எனக்கூறியரை, விஜயின் ரசிகர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் யாழ். ராஜா திரையரங்கில் இடம்பெற்றுள்ளது. தாவடியிலிருந்து வருகை தந்த இளைஞர் குழு, நேற்று (01) படத்தைப் பார்வையிட்ட பின்னர், அந்தக் குழுவில் இருந்த ஒருவர் 'புலி படம்...

யாழில் இளைஞரைக் காணவில்லை

19 வயது இளைஞரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் தனஞ்சயன் (வயது 19) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். கடந்த 28 அம் திகதி இரவு 8 மணியளவில் யாழ். நகரப்பகுதிக்கு போய் வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். எனினும்...
Ad Widget

ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடப்பட்ட “போர்க்களத்தில் ஒரு பூ”!

ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழீழ பத்திரிகையாளர்...

சீனி, உப்பு,எண்ணெய்க்கான வரிகளை அதிகரிக்க அமைச்சர் ராஜித அரசுக்கு ஆலோசனை

சீனி, உப்பு, எண்ணெய் ஆகி­ய­வற்றின் வரிகள் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். இதன்­மூலம் நாட்டில் இரு­தய நோயா­ளர்­களின் எண்­ணிக்கையை குறைக்க முடியும் என்று சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். மது, சிகரட் பாவ­னையால் நோய்­க­ளுக்கு இலக்­கா­கு­ப­வர்­களின் மருத்­துவ செல­வு­க­ளுக்கு அர­சாங்கம் பல இலட்­சம் ரூபாய்க்களை செலவு செய்ய வேண்­டி­யுள்­ளது என்றும் அமைச்சர் தெரி­வித்தார். கிரு­லப்­ப­னை­யி­லுள்ள அர­சாங்க...

மட்டு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் கோரல்

மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஏழு மாதங்களுக்கு நடைபெறும் இப்பயிற்சிகளில் தேசிய தொழிற் சான்றிதழ் (என்.வி.கியூ) கற்கை நெறிகளான கடற்துறை வெல்டிங் தொழில்நுட்பவியலாளர், கடற் சுழியோடிகள், சமுத்திரவியல் இயந்திர தொழில்நுட்பவியலாளர், வெளிப்புறத்தில் பொருத்தும் என்ஜின் தொழில்நுட்பவியலாளர், கடற்தொழில் தொழில்நுட்பவியலாளர், கப்பல் தலைமைத்துவத்துக்கான பயிற்சி ஆகியன 6 மாதங்களைக் கொண்டதாக நடைபெறுகின்றன....

புனர்வாழ்வு பெற்று வந்த கிராம அலுவலர்கள் உள்ளிட்ட 20 பேர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியமை மற்றும் அவ் அமைப்புடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வு பெற்று வந்த கிராம அலுவலர்கள் உள்ளிட்ட 20 பேர் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி,...

சிறுவர் துஷ்பிரயோகங்களால் முழுநாடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது

யாழ்ப்பாணத்தில் வித்தியாவுக்கு எதிரான அநீதி முதல் கொடதெனியாவ சேயா வரையிலான, துயரமாக கொடூரச் சம்பவங்கள் சிறுவர் மீது திணக்கப்பட்ட அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சமூக ரீதியான ஏனைய பாதிப்புக்கள் காரணமாக முழு நாடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற சர்வதேச சிறுவர்...

இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளது

உலக பார்வை தினத்தை முன்னிட்டு யாழ். அரிமாக்கழகத்தின் அனுசரணையுடனும் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும், யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் பார்வைக் குறைபாடுடைய தனது பயனாளிகளுக்கு கண் பரிசோதனைகளை மேற்கொண்டு இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கவுள்ளது. மேற்படி சிகிச்சை முகாமில் பங்கு கொண்டு பயன்பெற விரும்பும் யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனப் பயனாளிகள் எமது நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு நாளை...

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலமாக மீட்பு

நீரிவேலி பகுதியிலுள்ள தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை வியாழக்கிழமை (01) மீட்டதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த மோகன் விஜயமாலா (வயது 41) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதன்கிழமை (30) இரவு நித்திரைக்கு சென்றவர், அதிகாலை காணாமல் போயுள்ளார். அதனைத் தொடர்ந்து நடத்திய தேடுதலின் பின்னர். போது,...

கற்கவே களவெடுத்தேன்: கொள்ளையடித்தவர் வாக்குமூலம்

பாணந்துறை நகரில் தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் முயற்சியில் தோல்விகண்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர தான் மொஸ்கோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவன் எனவும் , அதற்கான கட்டணம் செலுத்தவே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கிக்கு வந்த 35 வயதான சந்தேகநபர் கருமபீடத்துக்கு சென்று அங்கிருந்த காசாளரிடம் வங்கி...

வீட்டுக்காரர்களின் அசண்டையீனத்தால் ஒன்றரை மாதக் குழந்தை பலி!!

வீட்டுக்காரர்களின் அசண்டையீனத்தால் ஒன்றரை மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை இரவு ஊரெழு மேற்கில் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் தாயார் பிள்ளைக்கு பால் கொடுத்து தலையணையில் உறங்கவைத்துவிட்டு உடுப்பு துவைப்பதற்காகச் சென்றுள்ளார். தலையணைகள் இன்றி ஒரு தலையணையில் கிடத்தப்பட்ட பிள்ளை, தலை திரும்பி முகம் குப்புற கவிழ்ந்தமையால் அது...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தொண்டர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தொண்டர்களாக குறைந்த சம்பளத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் 35 பேர் தமது பதவிகளை விட்டு வட மாகாண சுகாதார அமைச்சினால் இடைநிறுத்தப்பட்ட போதிலும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியால் தொடர்ந்து கடமையாற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சு...

வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவம் உடன் வெளியேற்றப்பட வேண்டும்! – ஜெனிவாவில் சுரேஷ்

வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் உடன் வெளியேற்றப்பட வேண்டும் சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜெனிவாவில் வைத்து வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டிற்கு சார்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு...

காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்த விசாரணை: தமது குழுவே சிறந்ததாம் என்கிறார் பரணகம!

"காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் எனது குழுவினர் போன்று சிறப்பாகச் செயற்பட்டவர்கள் எவரும் இல்லை." இப்படித் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம. காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அத்துடன் இதன்...

பொது மன்னிப்பு அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இதுவரையில் வழக்குத்தாக்கல் செய்யப்படாதவர்கள், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டவர்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்...

ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் – சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணையில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மேலும் சில பகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆகவே அமெரிக்கவின் தீர்மானித்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்களை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரண மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர்...

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் திருத்த யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் திருத்த யோசனைக்கு 25 நாடுகள் இணை அனுசரணையை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில், அமெரிக்காவின் திருத்த யோசனையில் பல பரிந்துரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் மனித உரிமை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் ஆகியனவற்றை, மேம்படுத்தல் என்ற தலைப்பின் கீழ் இந்த யோசனை இன்று ஜெனீவா மனித உரிமை பேரவையில்...

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் தெரிவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக சிவக்கொழுந்து அகிலதாசை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்திருப்பது இயற்கைநீதிக்கு முரணான செயல் எனவும், மக்கள் வழங்கியஆணைக்கு மதிப்பளிக்காது செயற்படுவதாகவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபை உறுப்பினராக இருந்த அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்...

நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கல்வி கற்கும் 1150 சிறுவர்கள்

யாழ்.மாவட்டத்தில் உள்ள நலன்புரி முகாம்களில் ஆயிரத்து 150 சிறுவர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இன்றுவரை தமது கல்வியை தொடர்ந்து வருவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து 26 வருடங்களாக நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுவும் இன்றி தமிழ்க் குடும்பங்கள்...

புனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வும்

புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஜெறோ செல்வநாயகத்தினால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எட்டாவது எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கௌரவிப்பும் பாராட்டும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித்...
Loading posts...

All posts loaded

No more posts