Ad Widget

சர்வதேச விசாரணை கோரும் கையெழுத்து தொகுதி ஐ.நா விடம் கையளிப்பு!

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் தொடர்­பாக சர்­வ­தேச விசா­ர­ணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி சர்­வ­தேச பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைக்­கான தமிழர் செயற்­பாட்­டுக்­கு­ழு­வினால் நடத்தப்பட்ட கையெ­ழுத்து வேட்டையின் போது பெறப்பட்ட ஒன்­றரை இலட்­சத்­திற்கு அதி­க­மான கையெ­ழுத்­துக்கள் அடங்­கிய பிர­திகள் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் வதி­விட அலு­வ­ல­கத்தின் மனித உரி­மை­க­ளுக்­கான அலு­வலர் பிரதீப் வகி­ஸிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

11951690_1907746416116622_8313895712306758802_o

நேற்று பிற்­பகல் 3மணிக்கு சர்­வ­தேச பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைக்­கான தமி ழர் செயற்­பாட்­டுக்­கு­ழுவைச் சேர்ந்த தமி ழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், தமிழ்ச் சட்­டத்­த­ர­ணிகள் பேர­வையின் பிர­தி­நிதி சிரேஷ்ட சட்­டத்­த­ரணி புவி­தரன் மற்றும் சிவில் சமு­கத்தின் பிர­தி­நிதி ஆகியோர் அக்­கை­யெ­ழுத்துப் பிர­தி­களை சமர்ப்­பித்­தனர்.

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் தொடர்­பாக சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­வ­தற்­காக இம்­மாதம் 4ஆம் திகதி சர்­வ­தேச பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைக்­கான தமிழர் செயற்­பாட்­டுக்­குழு ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.அத­னைத்­தொ­டர்ந்து அச்­செ­யற்­பாட்­டுக்­குழு கடந்த ஒன்­பதாம் திகதி யாழ். மாவட்­டத்தில் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி கையெ­ழுத்து வேட்­டையை ஆரம்பித்­தது.

அத­னைத்­தொ­டர்ந்து வட­கிக்கில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளிலும் கையெ­ழுத்து வேட்டை நகர்ந்­தது. தொடர்ச்­சி­யாக பத்து தினங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட இச் செயற்­பாட்டில் ஒன்­றரை இலட்­சத்­திற்கும் அதி­க­மாக கையெ­ழுத்­துக்கள் பெறப்­பட்­டன. ஆப்­பி­ர­திகள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்மை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­வேளை மேலும் 25ஆயிரம் கையெழுத்துக்கள் அடங்கிய பிரதிகளும் விரைவில் கையளிக்கப்படவுள்ளதாகவும் அக்குழுவினர் தெரிவித்ததோடு குறித்த பிர திகள் ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கப்பட வுள்ளதாக மனித உரிமை அலுவலர் தெரி வித்ததாகவும் குறிப்பிட்டனர்.

Related Posts