விசாரணைகளின் போது படையினரைப் பாதுகாப்போம்! – ரணில் வாக்குறுதி

போர்க்குற்ற விசாரணையின்போது படையினர் பாதுகாக்கப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முப்படை அதிகாரிகளுக்கும் உறுதியளித்துள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படுதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் தரைப்படையினர், கடற்படையினர், விமானப்படையினர், பொலிஸ் உயர் அதிகாரிகளை அழைத்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஜெனீவா அறிக்கையின்படி படையினர் மீது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக...

அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய விடயங்களில் எதிர்ப்போம்! – இரா.சம்பந்தன்

2016ம் ஆண்டு எமது மக்களின் அரசியல் தீர்வுக்கான பிரச்சினைகள் அணைத்தும் தீர்க்கப்படும் அதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நேற்று மாலை கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் உடனான சந்திப்பு ஒன்று, யாழ் மாட்டீன் வீதியில்...
Ad Widget

மோடி, ஒபாமாவை அடுத்து ஜப்பான் பாராளுமன்றத்தில் ரணில்

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் கன்சாய் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார். இன்றையதினம் அந்த நாட்டில் இடம்பெறவுள்ள விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். குறித்த மாநாட்டில் பல்வேறு அரச தலைவர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக ஜப்பான் ஊடகச் செய்திகள்...

யுவதி ஒருவரை இளைஞர்கள் இருவர் தாக்கும் காணொளி – வௌியானது உண்மைகள்

இரண்டு இளைஞர்கள் யுவதி ஒருவரை தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வௌியாகி பெரும் பரபரப்பை ஏற்படித்தியிருந்தது. இந்தக் காணொளியோடு சம்பந்தப்பட்ட யுவதி மற்றும் அந்த இளைுர்கள் இருவரும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு நேற்று சென்று நடந்தவற்றைக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2014ம் நவம்பர் மாதம் 15ம் திகதி பகல் 1 மணியளவில் இடம்பெற்ற...

சிகரட் மற்றும் மதுபான விலைகள் அதிகரிப்பு

சிகரட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிகரட் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிகரட் ஒன்றின் விலை 33 ரூபாக அதிகரித்துள்ளது. 5% க்கு குறைவான அல்கஹோல் கலந்த மதுபானங்களின் விலை ஒரு லீற்றருக்கு 40 ரூபாவும் 5% க்கு மேல் அல்கஹோல் கலந்த மதுபானங்களின் விலை ஒரு லீற்றருக்கு 60 ரூபாவும்...

யாழில் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா !

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றைய தினம் வடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று காலை 5.30மணியளவில் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து விசேட ரயில் மூலம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் அமைச்சர் நண்பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடைந்தார். யாழ். புகையிரத நிலையத்தில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில்...

சேயா கொலையைக் கண்டித்து யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

கொட்டதெனியாவ பிரதேசத்தில் 5 வயது சிறுமி சேயா பாலியல் வண்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று யாழ். மத்திய பேரூந்து நிலைய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மற்றும் பெண் விடுதலை சிந்தனை அமைப்பு இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது. இன்று எமது நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக,...

மார்கழிக்குள் முழுமையான மீள்குடியேற்றத்திற்கு முயற்சிப்பேன் : எதிர்க்கட்சித் தலைவர்

இந்த வருடம் மார்கழி மாதத்திற்குள் வளலாய் பகுதி மக்களை முழுமையாக மீள்குடியேற்ற முயற்சிகள் எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதியளித்தார் இன்றைய தினம் மீள்குடியேற்றப்பட்ட. வளலாய் பகுதி மக்களை எதிர்க்கட்சித்தலைவர் சந்தித்து பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு கெட்டகாலம் போய் நல்ல காலம் மலர்ந்துள்ளது.முதலில் முழுமையான...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கைக்கு ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம்!

போரின் போதும், போருக்குப் பின்னரும், மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கைக்கு ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள்...

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐ.நா தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை

சமஸ்டி பெற்றுத் தருவோம் என்று மக்களிடம் ஆணை பெற்றவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் வெளியிடப்பட்ட பிரேரணையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்துடன் திருப்தியடைந்து மௌனமாக இருப்பது ஏன் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின்...

சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் நிலையம் திறப்பு

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் தொடர்பான பொலிஸ் நிலையம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால் வியாழக்கிழமை (01) மாலை திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டடம் அமைப்பதற்கு சிறுவர் மற்றும் விவகார அமைச்சு 5 மில்லியன் ரூபாய் நிதியை...

எமது மக்களின் நிலங்களை, வாழ்வாதாரங்களை அபகரிக்கும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது!

வடக்கு மாகாணத்தில் முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தி, எமது மக்களின் நிலங்களை அம் மக்களுக்கே வழங்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். கொழும்பில் வன்னி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் விடயம்...

மது, புகைத்தல் பாவனையால் நாளொன்றுக்கு 100 பேர் பலி

மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனையால், இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் மரணிப்பதாகவும் இவ்விரு தீய செயல்களிலும் ஈடுபடுவதற்கு நாளொன்றுக்கு 80 சிறுவர்கள், புதிதாக முயற்சிக்கின்றனர் என்றும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. மதுபாவனையால் நாளொன்றுக்கு 40 பேரும் புகைத்தல் பாவையால் 60 பேரும் மரணத்தை தழுவி கொள்கின்றனர் என்றும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க...

மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை – ஜனாதிபதி

யுத்த வெற்றி நாயகர்களை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்கப்போவதாகக் கூறினார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. அதேபோல் ஹைபிரிட் நீதிமன்ற முறைமையும் இருக்காது. எமது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து விசாரணைகளும் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஜெனீவாவுக்கான விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடுதிரும்பி ஜனாதிபதி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் முகமாக ஜனாதிபதி...

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கதைத்து முடிவு எட்டப்படும் – எதிர்க்கட்சி தலைவர்

வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் கதைத்து திடமான முடிவு எடுக்கப்படுமென எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வலி.வடக்கு வசாவிளான் ஒட்டகபுலம் காணி விடுவிப்பு குறித்த கூட்டம் வசாவிளான் மாதா கோவில் நடைபெற்றது. அங்கு விஜயம் மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார். இந்த காணியை மீண்டும் மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்...

வருமானத்திற்காக வளங்களை மாசுபடுத்துகின்றார்கள்: முதலமைச்சர் .சீ.வி.விக்கினேஸ்வரன்

நாங்கள் “நிலத்தில் எண்ணை, எண்ணை” என்று சில காலத்திற்கு முன்னர் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் எமக்கு நீரின் பாதிப்பு எண்ணையில் இருந்து வருவதிலும் பார்க்க பல மடங்கு அதிகமாக அசேதனப் பசளைப் பாதிப்பால் வருவது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாகப் புகையிலைப் பயிர் செய்வோர் தீவிர அசேதனப் பசளைப் பாவிப்பால் நிலத்தடி நீரை வெகுவாகப் பாதிப்படையச்...

இந்திய தூதரக ஏற்பாட்டில் யாழ் இந்துவில் அகிம்சை தினம் ! எதிர்கட்சித்தலைவர் மற்றும் டக்ளஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு!

இந்திய தூதரக ஏற்பாட்டில் யாழ் இந்துக்கல்லுாரியில் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில்  சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது.  சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வுஇடம்பெற்றது  விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் அவர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் வடக்கு மாகாண சபை...

யாழ்.இந்து மாணவன் வெட்டு காயத்துடன் மீட்பு!

யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த 14 வயது மாணவனே அவ்வாறு மீட்கப்பட்டு உள்ளான். மாணவன் மீட்கப்பட்ட வீட்டு கிணற்றில் இருந்து மாணவனின் பாடசாலை பை (bag) மீட்கப்பட்டு உள்ளது....

31.03.2012 ற்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு கொழும்பில்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் செயலணிக்குழுவினருக்கும் வடமாகாண சபைச் செயலணிக் குழுவினருக்குமிடையே நேற்றயதினம் காலை 11.00 மணிக்கு வடமாகாண சபையில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இது தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது சார்பில் 15 உறுப்பினர்களும் வடமாகாண செயலணிக்குழுவில் வடமாகாண அவைத்தலைவர், வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர், மாகாணசபை...

போராட்டத்தைக் கைவிட்ட வலி. வடக்கு முகாம் மக்கள் !! : அரசியல் அழுத்தம் காரணமா??

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால், குறித்த போராட்டம் கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டு உள்ளதாக தெரிய வருகின்றது. இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும்,...
Loading posts...

All posts loaded

No more posts