Ad Widget

எமது தந்தை ஒரு திருடன் – நாமல்

எங்கள் தந்தை ஒரு திருடன். அவர் எவற்றைத் திருடியுள்ளார் என்பதை புதன்கிழமை (06), மெதமுலனையில் வைத்து கண்டுகொண்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாமல், 'எங்கள்...

அமைச்சர்களின் பாதுகாப்பு அரைவாசியாக குறைப்பு

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களை பயன்படுத்தினால் அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பணித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகளுக்காக அமைச்சர்கள், அரசாங்கத்தின் வாகனத்தை பயன்படுத்தினால் அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே யோசனையை முன்வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள...
Ad Widget

யாழில் மூவருக்கு மரண தண்டனை

இருவேறு வழக்குகளின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று மரணதண்டனை வழங்கியுள்ளது. 2006ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி கொடிகாமம் - கச்சாய் வீதியைச் சேர்ந்த செல்லையா பொன்னுராசா என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. இதில் குற்றவாளிகளாக காணப்பட்ட சிவபாலன் கிருஷ்ணகுமார் மற்றும்...

ஈ.பி.டி.பி தனித்து வீணையில் போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். நகரிலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது கட்சி தனித்து போட்டியிட வேண்டும்...

மஹிந்த சுதந்திரக்கட்சியில் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி அனுமதி மறுப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்புமனு வழங்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த...

வடமாகாண கல்வி வீழ்ச்சிக்கு அரசும் தீயசக்திகளுமே காரணம் – விந்தன்

வடமாகாணத்தின் கல்வி மட்டம் அண்மைக்காலங்களில் வீழ்ச்சியடைந்து செல்கின்றமைக்கு அரசும், அரசியலும், தீயசக்திகளுமே முக்கிய காரணம் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். யாழ் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் புதன்கிழமை (01) பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் ஆ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்; பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு...

கே.பி. என்பவரை தவறாக புரிந்துகொண்டேன் – சுவாமிநாதன்

தன்னை தவறாக புரிந்துகொண்டிருந்ததாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை, முல்லைத்தீவிலுள்ள பாரதி இல்லத்துக்கு அமைச்சர் சுவாமிநாதன் சென்றிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு முகாமாகவே இந்த பாரதி இல்லத்தினை கே.பி. நடத்தி வருகிறார்....

தமிழ் தலைமையில் மாற்றம் அவசியமானது – டக்ளஸ் தேவானந்தா

தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் தலைமையில் மாற்றம் ஏற்படாவிட்டால் எமது மக்களுக்கு எவ்விதமான பயன்களும் கிடைக்கப் போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்...

காணாமல் போனோரின் உண்மைத்தன்மையை அரசு உடன் அறிவிக்கவும் : யாழ்.பல்கலையில் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பிலான உண்மைத்தன்மையை அரசு அறிவிக்க கோரியும் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில் காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகளால் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு...

கூட்டமைப்புக்கு எதிராக செயற்படமாட்டேன் – அங்கஜன்

தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்தோடு தான் அரசியலுக்கு வந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுவதற்காக அல்ல என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பம்

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அதிர்வு, நிலநடுக்கமா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று (01) மாலை நான்கு மணியளவில் மூன்று தடவைகள் அதிர்வுகள் ஏற்பட்டதை தாம் உணர்ந்ததாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டனர். அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்பான இடத்திற்கு தாம்...

யாழ்.மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 7ஆக குறைப்பு!

யாழ்.மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது யாழ்.மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டால், குறைந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது. இம்முறை தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக...

கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவற்றை விடுவித்து மீள்குடியேறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பொன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே மாவட்டச் செயலாளர்...

180 கிலோகிராம் கஞ்சாவுடன் நால்வர் கைது

வடமராட்சி கிழக்கு அம்மன் கோவில் பகுதியில் 180 கிலோகிராம் கஞ்சாவுடன் 4 சந்தேகநபர்களை விசேட அதிரடிப் படையினர் வியாழக்கிழமை(02) அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர். கடல் மார்க்கமாக கேரள கஞ்சாவை கடத்திவந்து இறக்கிக் கொண்டு இருக்கும் போதே நால்வரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நால்வரையும் தொடர்ந்தும்...

வடக்கு, கிழக்குக்கு வெளியே போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு தவிர்ந்து ஏனைய இடங்களில் போட்டியிடுவது தொடர்பில் மனோ கணேசனின் முற்போக்கு கூட்டணியுடன் கலந்துரையாடி இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா புதன்கிழமை (01) தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில்...

மாணவர்கள் மூவரை காணவில்லை

வல்வெட்டித்துறைப் பகுதியில் மூன்று மாணவர்களைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வல்வெட்டித்துறைப் பகுதியிலுள்ள தமது வீடுகளில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் ஒருமணிக்கு வவுனியாவிற்கு புறப்பட்டுள்ளனர். வவுனியாவிலுள்ள மாணவன் ஒருவனின் சகோதரனின் பிள்ளையின் பிறந்தநாள் வைபவத்திற்கு செல்வதாக கூறியே இந்த மூன்று மாணவர்களும் சென்றதாக பெற்றோர் வல்வெட்டித்துறை...

மாணவர்கள் மாணவர்களாக வாழ வேண்டும்: டீ.எம்.சுவாமிநாதன்

மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தில் இன்று உருவாகியுள்ளது. சமுதாயம் வளரவேண்டுமாயின் மாணவர்கள் இவற்றிலிருந்து விடுபட்டு தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கட்டத்திறப்பும் கல்லூரி முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக...

குடும்பப் பெண் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்!

தனிமையில் வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண்னை இனந்தெரியாதவர்கள் தாக்கியதில் அவர் மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் குப்பிளான் தெற்கு சந்திக்கு அண்மையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்கப்பட்ட இவர் இரண்டாம் நாளான நேற்றும் மயக்கம் தெளியாத நிலையில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின்...

தாம் செய்த ஊழல்களை மூடி மறைப்பதற்காகவே பிரதமர் பதவிக்கு வரத் துடிக்கிறார் மஹிந்த!

தாம் செய்த ஊழல்களை மூடிமறைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவிக்கு வரத்துடிக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் எம்.பியு மான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என மெதமுலனையில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு விடுத்த அறிவிப்பு தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு...

கூட்டமைப்பை சீர்குலைக்கும் எந்த முடிவையும் புளொட் எடுக்காது!

கூட்டமைப்பை சீர்குலைக்கும் எந்த முடிவையும் புளொட் எடுக்காது. கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில்...
Loading posts...

All posts loaded

No more posts