யாழ். நீதிமன்ற தாக்குதல் இருவருக்கு பிணை 18 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 18 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி யாழ். நகரப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ். நீதிமன்ற...

முக்கியத்துவம் வாய்ந்த மயிலிட்டி துறைமுகத்தை வளலாயில் அமைப்பது சாத்தியமற்ற செயல்! – டக்ளஸ்

யாழ்.குடாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வலிகாமம் வடக்கு, மயிலிட்டி துறைமுகத்தை வளலாய் பகுதியில் அமைப்பது தொடர்பான பாதுகாப்புத் தரப்பினரின் யோசனையை ஏற்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். சென்ற வாரம் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா அவரகள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,...
Ad Widget

கூட்டுறவாகச் செயற்பட்டதால் பப்பாசிப் பழ ஏற்றுமதியில் வவுனியா விவசாயிகள் சாதனை

பப்பாசிப்பழ ஏற்றுமதியில் வவுனியா வடக்கு விவசாயிகள் அபார சாதனை படைத்திருக்கிறார்கள். நடப்பு 2015 ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாவுக்குப் பப்பாசிப் பழ விற்பனை இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கில் பப்பாசிச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தனித்தனியாகப் பிரிந்துநின்று இயங்காமல் பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பாகச் செயற்பட்டதாலேயே இது சாத்தியமாகியது. இது கூட்டுறவுக்குக் கிடைத்த ஒரு வெற்றி...

தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவாக உயர்த்த இம் மாதத்துக்குள் தீர்மானிக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் கடந்த முதலாம் திகதி மூன்று பிரதான கட்சிகளுடன் எனது தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தனியார் துறை சம்பளம் அதிகரிப்பு...

வெற்றிடங்களை நிரப்ப யாழில் நேர்முகத்தேர்வு

முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் 500 வரையான வெற்றிடங்களுக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு பொது மக்கள் தொழில் சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காக நாடு முழுவதிலும் கிளைகளைக் கொண்டுள்ள முன்னணி தனியார் கம்பனியிடமிருந்து 500...

கல்லுண்டாய் கழிவு கொட்ட இடைக்கால தடை உத்தரவு

யாழ்.கல்லுண்டாய் வெளியில் 3 மாத காலத்துக்கு கழிவுகள் எவையும் கொட்டப்படக்கூடாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன் நேற்றைய தினம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்.கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கழிவுகள்கொட்டப் படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில்...

அகதிகள் முகாமில் இருந்த இலங்கைப் பெண் மாயம்

தமிழகத்தின் மானா மதுரை இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மானாமதுரை மூங்கில்ஊருணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ரவி. இவரது மகள் நிரோஷா (21 வயது). இவர் மானாமதுரையில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை வேலைக்குச்...

வாள்களுடன் ஐவர் கைது

ஏழாலை மயிலணிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம் புரிய முற்பட்ட 5 பேர் கொண்ட கும்பலை, ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் மயிலணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் கும்பலொன்று நுழைய முற்பட்டுள்ளது. எனினும், வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டு அயலவர்கள் கூடியமையால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்து...

கோப்பாய் சந்தியில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதகுடன் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமானார். நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் வடமராட்சி -பருத்தித்துறை - கற்கோவளத்தைச் சேர்ந்த எஸ்.மணிமாறன் (வயது -32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே மரணமானவராவார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர் கடமை முடிந்து...

சேயாவை தானே கொன்றாராம்! கொண்டயாவின் சகோதரர் வாக்குமூலம்!! இருவருக்கும் 19 வரை மறியல் நீடிப்பு!!!

வன்கொடுமையின் பின் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்ட சிறுமி சேயாவை தானே கொலை செய்தார் என்று சி.ஐ.டியினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் கொண்டயாவின் சகோதரரான ஜயலத். சேயா கொலை வழக்கு நேற்று மினுவாங்கொட நீதிமன்றில் பிரதம நீதிவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ஜயலத் மேற்கண்டவாறு வாக்குமூலம் அளித்தார் என்று சி.ஐ.டியினர் நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினர். சேயா கொலைக்குப் பின்னர் கொண்டயா...

மீன்தொட்டிக்கு 37 கோடி ரூபா! ஒரு மீனுக்கு ரூ.65 ஆயிரம்!! மஹிந்தவின் வீண் செலவுகளை பட்டியலிடுகிறார் சம்பிக்க!!!

மஹிந்த அரசால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட மிதக்கும் சந்தை, சுதந்திர சதுக்க கட்டிடத்தொகுதி முதலான அபிவிருத்தித் திட்டங்களால் பல கோடி ரூபாக்கள் நட்டம் மட்டுமே ஏற்பட்டது என பாரிய கொள்கைத் திட்டங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். உலக குடியிருப்புத் தினத்தை முன்னிட்டு, கொழும்பு பிரதீபா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விசேட...

எங்கள் பிரச்சினைகள் எதுவாகினும் பேசித் தீர்ப்போம்! ஜனாதிபதி மைத்திரி கிளிநொச்சியில் அழைப்பு!!

"எங்களுக்கு உலகத்தில் இன்று எதிரிகள் இல்லை. இன்று உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் எங்களுடன் நல்ல நட்பாக உள்ளன என்பதுடன் எம்முடன் இணைந்தும் செயற்படுகின்றன. எனவே, இந்த நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு இதுவே நல்ல சூழல். இதுதான் சரியான யுகம். இந்த அரசின் காலத்தில் சிறப்பான நிலைமையை உருவாக்கவேண்டும். எங்களுக்குள் எந்தப் பிரச்சினை இருந்தாலும் அதனைப்...

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் விடயம் குறித்து சம்பந்தனிடம் மகஜர்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை வரவேற்றார் வடக்கு முதல்வர்

இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளார். “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற தொனிப் பொருளில் ஆரம்பான தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் அவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார். கிளிநொச்சி இரணைமடு வட்டக்கச்சியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த...

அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்க முயற்சிக்கிறோம்

சட்டவிரோத செயல்களற்ற அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார். யாழ். புனித மரியாள் வித்தியாலயத்தில், இடம்பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே, இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை நிறைவடைந்ததும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும். தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடக்கூடாது. அவ்வாறு பிரச்சினைகள் ஏதும்...

சங்கிலியனின் வாளில் விளம்பர பதாகை: வருந்தியது நிறுவனம்

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்புக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மென்பான நிறுவனம் ஒன்றின் விளம்பர பதாகையொன்று பொருத்தப்பட்டிருந்தது. தமது நிறுவனத்தின் விளம்பரப் பதாகையானது பொருத்தப்பட்டது விசமிகளின் செயல் எனவும் அதற்கு மனவருந்துவதாகவும் குறித்த மென்பான நிறுவனம் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட...

வடக்கில் இன்று 576 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று திங்கள்கிழமை ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018 இன் ஆரம்ப நிகழ்வின் போதே, மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் உள்ளிட்ட...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள்

2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று (05) வௌியிடப்பட்டுள்ளன. குறித்த வெட்டுப்புள்ளிகளைத் தெரிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ள முடியும்.

யுத்த பாதிப்பு பகுதிகளில் வறுமை ஒழிப்பு செயற்பாடுகள் உடன் தேவை!

வடக்கு மாகாணத்தில் மக்களது வறுமை நிலையைப் போக்குவதற்கு மேலும் உரிய திட்டங்கள் அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடந்த கால...

நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ.2.5 மில்லியன் நன்கொடை

வடக்கில் நலிவடைந்த நிலையில் உள்ள ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அவற்றை மேம்படுத்தவென தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் 2.5 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. வவுனியா முத்தையா மண்டபத்தில் வவுனியா மாவட்டக் கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் கூட்டுறவுதின விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (04.10.2015) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போதே, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த வடக்கின் கூட்டுறவுத்துறை அமைச்சர்...
Loading posts...

All posts loaded

No more posts