Ad Widget

அடிவாங்கியவருக்கு எதிராக 9 வழக்குகள் உள்ளன

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் வைத்து கடந்த 22ஆம் திகதியன்று போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட விசேட தேவையுடையவருக்கு எதிராக இதுவரையிலும் ஒன்பது வழக்குகள் உள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

police-attack

அந்த நபர், போக்குவரத்து பொலிஸாரின் சமிக்ஞையை மீறி, மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றதாகவும் அவரிடம், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவருக்கு எதிராக, பொலிஸ் சமிக்ஞையை மீறி வாகனத்தை செலுத்தியமை, மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தியமை, பாதுகாப்பான தலைக்கவசத்தை அணியாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு கீழ் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அவருக்கு எதிராக இதுவரையிலும் நீதிமன்றத்தில் ஒன்பது வழக்குகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த விசேட தேவையுடைய ஒருவரை, போக்குவரத்து பொலிஸார் நடைபாதையில் போட்டு, கஹட்டகஸ்திகிலிய பொலிஸின் போக்குவரத்து பொலிஸ் பிரிவு அதிகாரிகளில் இருவரினால் புரட்டி, புரட்டி தாக்கினர்.

22ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலைவேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீடியோ சமுக மற்றும் செய்தி வலைத்தளங்களில் தீயாய் பரவியிருந்தன.

சம்பவம் தொடர்பில் அன்று வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், விசேட தேவையுடைய அதுவும் செயற்கை காலொன்று பொருத்தப்பட்ட ஒருவர், மோட்டார் சைக்கிளில் கஹட்டகஸ்திகிலிய நகரத்துக்கு வந்துள்ளார். கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் இருவர், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிய அந்த மோட்டார் சைக்கிள், கஹட்டகஸ்திகிலிய பஸ் நிலைய பக்கமாக பயணித்துள்ளது.

அந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்த பொலிஸார் இருவரும், பஸ்நிலையத்துக்கு அருகில் வைத்து மடக்கிபிடித்தனர்.

மடக்கி பிடித்தது மட்டுமன்றி கடுமையாக தாக்கியுள்ளனர். பொலிஸாரின் தாக்குதலில் அவருடைய செயற்கை காலும் கழன்றுவிட்டது. இதனால் அவர், நடைபாதையில் விழுந்துவிட்டார். அப்போதும் விடாமல் அவ்விரு பொலிஸாரும் புரட்டி, புரட்டி தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் ரண்வலஆராச்சி, அன்று தெரிவிக்கையில்,

அவ்வாறான பாரதூரமான சம்பவம்தொடர்பில் தனக்கு தெரியாது. எனினும், மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபரொருவர், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்துள்ளார். அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அவரை கைதுசெய்வதற்கு முயன்றபோது, பொலிஸ் அதிகாரியின் கையை அவர், கடிக்கமுயன்றுள்ளார் என்று தனக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேநபர், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

போட்டுத் தாக்கும் போக்குவரத்து பொலிஸார் (வீடியோ இணைப்பு)

Related Posts