வீட்டுக்காரர்களின் அசண்டையீனத்தால் ஒன்றரை மாதக் குழந்தை பலி!!

வீட்டுக்காரர்களின் அசண்டையீனத்தால் ஒன்றரை மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை இரவு ஊரெழு மேற்கில் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் தாயார் பிள்ளைக்கு பால் கொடுத்து தலையணையில் உறங்கவைத்துவிட்டு உடுப்பு துவைப்பதற்காகச் சென்றுள்ளார். தலையணைகள் இன்றி ஒரு தலையணையில் கிடத்தப்பட்ட பிள்ளை, தலை திரும்பி முகம் குப்புற கவிழ்ந்தமையால் அது...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தொண்டர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தொண்டர்களாக குறைந்த சம்பளத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் 35 பேர் தமது பதவிகளை விட்டு வட மாகாண சுகாதார அமைச்சினால் இடைநிறுத்தப்பட்ட போதிலும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியால் தொடர்ந்து கடமையாற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சு...
Ad Widget

வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவம் உடன் வெளியேற்றப்பட வேண்டும்! – ஜெனிவாவில் சுரேஷ்

வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் உடன் வெளியேற்றப்பட வேண்டும் சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜெனிவாவில் வைத்து வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டிற்கு சார்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு...

காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்த விசாரணை: தமது குழுவே சிறந்ததாம் என்கிறார் பரணகம!

"காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் எனது குழுவினர் போன்று சிறப்பாகச் செயற்பட்டவர்கள் எவரும் இல்லை." இப்படித் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம. காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அத்துடன் இதன்...

பொது மன்னிப்பு அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இதுவரையில் வழக்குத்தாக்கல் செய்யப்படாதவர்கள், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டவர்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்...

ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் – சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணையில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மேலும் சில பகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆகவே அமெரிக்கவின் தீர்மானித்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்களை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரண மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர்...

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் திருத்த யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் திருத்த யோசனைக்கு 25 நாடுகள் இணை அனுசரணையை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில், அமெரிக்காவின் திருத்த யோசனையில் பல பரிந்துரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் மனித உரிமை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் ஆகியனவற்றை, மேம்படுத்தல் என்ற தலைப்பின் கீழ் இந்த யோசனை இன்று ஜெனீவா மனித உரிமை பேரவையில்...

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் தெரிவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக சிவக்கொழுந்து அகிலதாசை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்திருப்பது இயற்கைநீதிக்கு முரணான செயல் எனவும், மக்கள் வழங்கியஆணைக்கு மதிப்பளிக்காது செயற்படுவதாகவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபை உறுப்பினராக இருந்த அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்...

நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கல்வி கற்கும் 1150 சிறுவர்கள்

யாழ்.மாவட்டத்தில் உள்ள நலன்புரி முகாம்களில் ஆயிரத்து 150 சிறுவர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இன்றுவரை தமது கல்வியை தொடர்ந்து வருவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து 26 வருடங்களாக நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுவும் இன்றி தமிழ்க் குடும்பங்கள்...

புனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வும்

புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஜெறோ செல்வநாயகத்தினால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எட்டாவது எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கௌரவிப்பும் பாராட்டும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித்...

சிறுவர்,பெண்கள் வன்முறையை கண்டித்து யாழில் மாபெரும் பேரணி

எமது சமூகத்தில் சிறுவர் மற்றும் பெண்களின் துஸ்பிரயோகங்கள் தேவையற்றது என்ற தொனிப் பொருளில் யாழ்.மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,தேசிய பெண்கள் சம்மேளனம்,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,யாழ்.கிராமிய உழைப்பாளர் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து சிறுவர்,பெண்கள் வன்முறையை கண்டித்து இன்று யாழ்.நகரில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது. குறித்த பேரணி யாழ்.பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பமாகி யாழ்.மாவட்ட செயலகத்தில் முடிவடைந்தது....

காங்கேசன்துறை கடற்பரப்பில் மேலும் 4 கி.மீற்றரை ஆக்கிரமித்தது கடற்படை! கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு எனக் கூறி மேலும் 4 கிலோமீற்றர் நீளமான கடற்பரப்பை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் 650 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.வலி. வடக்குப் பிரதேசத்தில் நிலப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு எனக்கூறி சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் நீளமான பகுதியை ஆக்கிரமித்திருந்தனர்....

புலி படத்திற்கு சிக்கல் : புலி திரைப்படம் வெளியாகாததால் யாழில் பரபரப்பு!!!

இன்றைய தினம் நடிகர் விஜய் இன் புலி திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த திரைப்படம் ராஜா, மெஜெஸ்டிக் கொம்பிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே அதிகளவான ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு குழுமி இருந்தனர். ஆனாலும் குறித்த நேரத்துக்கு...

புதிய மாகாண சபை உறுப்பினராக அகிலதாஸ் நியமனம்

வடமாகாண சபையின் எதிர்கட்சி வரிசை வெற்றிடத்திற்கு அகிலதாஸ் சிவக்கொழுந்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வடமாகாணசபை வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதன் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அகிலதாஸ் சிவக்கொழுந்து நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி...

யாழில் எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதற்தடவையாக, வருகை தந்து முதல் நிகழ்வாக தந்தை செல்வா சதுக்கத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். இன்று காலை 8.30 மணியளவில் துரையப்பா மைதானத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் யாழ்-கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்,வடமாகாண சபை...

ஓர் ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவர முடியவில்லை: முதலமைச்சர் சி.வி ஆதங்கம்

அரசியல் கைதிகளின் வழக்குகளை நடத்துவதற்கு தேவையான நிதி சேகரிப்பதற்காக ஓர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் நிதியை திரட்டி வழக்கை நடத்துவோம் என எண்ணியிருந்தோம். எனினும், அந்த அமைப்பை ஓர் ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவர முடியாமல் போய்விட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 'சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், அரசியலாக்கப்பட்டமையால் அவர்களுக்கு விடுதலை...

பாலியல் துன்புறுத்தல் : அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபரை தொடர்ந்தும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரம், புதன்கிழமை (30) உத்தரவிட்டார். பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அதிலிருந்து தப்புவது தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றை, தென்மராட்சி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் அண்மையில் இந்தப்...

அப்பாவை விடுதலை செய்யுங்கள்:ஜனாதிபதியிடம் கோரிக்கை

'எங்கள் அப்பாவை கட்டியணைக்க ஆசையாகவுள்ளது, ஜனாதிபதி மாமா, எங்கள் அப்பாவை விடுதலை செய்யுங்கள்' என்ற கோஷத்துடன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பிள்ளைகள், யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (30) பேரணியொன்றை நடத்தினர். யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி, முதலமைச்சர் அலுவலகம் வரைச் சென்றது. அதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு கோரி...

மரண பயம் வந்துவிட்டது – மஹிந்த

எமது நாட்டில் வாழ்கின்ற பிள்ளைகளின் இதயத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மரண பயம், அவர்களின் இதயங்களில் மீண்டும் சூழ்கொண்டுள்ளது. இது தனக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சேயா சந்தவமி கொலை மற்றும் சிவலோகநாதன் வித்யா என்ற...

மல்லாவியில் விபத்து: 40 பேர் காயம்

மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸும் வவுனியாவிலிருந்து பனங்காமம் நோக்கிச்சென்ற பஸ்ஸும் மல்லாவி ஒட்டறுத்தகுளம் சந்திக்கு அருகில் வைத்து நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. காயமடைந்தவர்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி...
Loading posts...

All posts loaded

No more posts