சேகுவாரே நினைவு தினம் : யாழ் பொது நூலகத்திற்கு நூல்கள் அனபளிப்பு

சேகுவாராவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை ஒரு தொகுதி நூல்கள் யாழ் பொது நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூல்களை யாழ். பொதுநூலக பிரதான...

வடமாகாண சபை முன் தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நிரந்தர நியமனம் கோரி வடமாகாண சபை முன்பு தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 09.00 மணி முதல், வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு, வவுனியா வடக்கு மற்றும் துணுக்காய் ஆகிய ஐந்து கல்வி வலயங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக நியமனம் கிடைக்கும் என...
Ad Widget

மரண தண்டனைத் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டமைக்கு இணங்க மரண தண்டனை நிறைவேற்றல் தீர்மானத்தை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். விரைவில் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றம் அமுலுக்கு வரப்போகிறது என்ற தகவல்கள் வெளியான நிலையிலேயே இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையின்பேரில்...

பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் நேரடி ஒளிபரப்பு

பாரா­ளு­மன்­றத்தின் அமர்­வுகள் இன்று(08)வியா­ழக்­கி­ழமை முதல் தேசிய ரூப­வா­ஹி­னி­யூ­டாக நேரடி ஒளி­ப­ரப்புச் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பிற்­பகல் 1.00 மணி­முதல் இரவு 7.30 மணி­வ­ரை­யான செவ்­வாய்க்­கி­ழமை முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை­யான அமர்­வுகளின்போது முதல் இரண்டு மணி­நே­ரத்­துக்கே இவ்­வாறு நேரடி ஒளி­ப­ரப்பு செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று புதன்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடிய பாரா­ளு­மன்ற விவ­கார தெரி­வுக்­குழு கூட்­டத்­தி­லேயே மேற்­படி...

உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை நிராகரித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் குறித்து ஜனாதிபதி செயலாளர் பி.பீ அபேகோன் அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தல புனரமைப்பு மற்றும் வேறு செயற்பாடுகளுக்காக 180 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க அண்மையில் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்தை அடுத்து இந்த தகவல்...

முரளி கிண்ண கிரிக்கெட் நேற்று ஆரம்பம்

வருடந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 நேற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நேற்று காலை ஒன்பது மணிக்கு இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் போன்ற இடங்களில்...

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பித்து வெகுவிரைவில் பிரச்சினைக்குத் தீர்வு

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப் பதில் உள்ள பல தடைகளையும் தாண்டி வெகுவிரைவில் மக்களின் பிரச்சினை களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்ப டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு...

புலிகள் சர்வதேச சமூகம் மூலம் சரணடைய முயன்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறார் கோத்தபாய ராஜபக்ஸ

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சமூகத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும், சரணடைதல் தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் சரணடைந்த போது,...

யாழ்.முகாம்களில் 4000ற்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள்

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் யாழ்பபாணத்தில் தொடர்ந்தும் முகாம்களில் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள 32 முகாம்களில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த 4737 பேர் முகாம்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத்...

 குடிநீர் போத்தல்களில் ‘கிரீஸ்’

கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. நுகர்வோர் அதிகாரசபையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு நகரின் சில கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 37 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை மேலும் அறிவித்துள்ளது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட குடிநீரில் எண்ணெய் மற்றும் கிரீஸ்...

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை வட மாகாண போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் திட்டத்திற்கு அமைவாக, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர்...

ஐந்து தசாப்த கால பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடன் பேசுகிறோம்!

இலங்கையில் ஐந்து தசாப்த காலமாக நீடிக்கும் இன, மொழிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே நாங்கள் பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம். - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து தசாப்த காலமாக இலங்கையில் மொழி மற்றும் இனப்பிரச்சினை முக்கிய விவகாரங்களாக இருந்ததுடன் கடந்த...

வடக்கு பிரதேச செயலகங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்கள்

வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் வடமாகாணத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பெற்றுக்ககொள்ள முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், கணினியின் உபயோகத்துடன் பிறப்பு,இறப்பு மற்றும் விவாக சான்றிதழினை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய...

யாழ்தேவியில் மோதி வயோதிபர் பலி

யாழ்.தேவி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதி வழியான 392 வது கிலோ மீற்றர் கட்டையை அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் குருநகர் பகுதியைச் சேர்ந்த தேவசகாயம் ஏனோக் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று காலை...

பொலிஸ் பதவிக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10ம் திகதி

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறும் யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு. கே. ஜயலத் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்....

பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய 23க்கு முன் விண்ணப்பிக்கவும்!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர் ஊடாக குறித்த விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்...

யாழ்.மாவட்ட நலன்புரி நிலையங்கள் தொடர்பில் பாராளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி??

யாழ்.மாவட்ட நலன்புரி நிலையங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் நிலையியற் கட்டளை 23/2 நேற்றைய தினம் எழுப்பிய வினா யாழ்.மாவட்டத்தில் 32 நலன்புரி நிலையங்களில் 1318 குடும்பங்களில் 4737 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களுடைய அடிப்படைத் தேவைகள் தொடர்பில் உரிய தரப்பினர் காலத்திற்குக்காலம் தேவையான நடவடிக்கைகளை போதியளவு எடுக்கவில்லையென்பதனை அறியத்தருவதுடன், யாழ்மாவட்டத்தில் யுத்தம்...

மாவட்ட ரீதியிலான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

யாழ்ப்பாண மாவட்டம் 2015 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில், யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர் சோதிநாதன் வசீகரன் 192 புள்ளிகள் பெற்று யாழ். மாவட்ட ரீதியாக முதலிடத்தினை பெற்றுள்ளார். [caption id="attachment_51180" align="aligncenter" width="365"] சோதிநாதன் வசீகரன்[/caption] யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்களான கனகராஜ் கவிலக்ஷன் 188...

சிறுவர்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விசேட நீதிமன்றச் செயற்பாடு அவசியம் – பாராளுமன்றில் டக்ளஸ்

நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையில் அதி உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்ட வாதப் பிரதிவாதங்களின்போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (06) ஆற்றிய உரை கௌரவ சபாநாயகர் அவர்களே…. இன்றைய நாளில் எமது எதிர்காலச் சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலம் தொடர்பாக...

கோப்பாயில் இளைஞர் மீது வாள்வெட்டு!

வேலை முடிவடைந்து வீடு திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள் வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை படுகாயமடைந்தார். படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகம் ஜயனார் கோவிலடியைச் சேர்ந்த தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் சிவனேந்திரன் தர்மதாசன் (வயது 26) என்பவரே கையிலும் காலிலும்...
Loading posts...

All posts loaded

No more posts