தமிழர் செயற்பாட்டுக் குழுவின் இணையத்தளம்

சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழு (TACIAM) தமது இணையத்தளம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியீட்டுள்ளது. அதில் .. சர்வதேச பொறுப்புக் கூறுல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவினால் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களாக திரட்ப்பட்ட கையொப்பங்கள் ஸ்கான் செய்யப்பட்டு கீழுள்ள இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை...

யாழில் இடம்பெற்ற தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கடற்கரையோராங்களை பாதுகாத்தல் சம்பந்தமான விழப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்புறமாக இந்த விழப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர்...
Ad Widget

இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டம் – அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு

செப்டம்பர் மாத இறுதிக்குள் சிறைச்சாகைளில் விசாரணைகளின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், அந்தக் கைதிகளையும் உள்ளடக்கி சாத்வீக ரீதியிலான தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் தெரிலித்துள்ளது. அந்தக்...

ஐக்கிய நாடுகளின் அறிக்கை தமிழர்களுக்கு இன்னொரு வாய்ப்பு தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு அதை அணுகவேண்டும் பொது இணக்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை தமிழ் மக்களின் இழப்புக்கள் மற்றும் பாதிப்புகளுக்குப் பரிகாரம் காணவும், உண்மைகள் கண்டறியப்படவும், உரிய நியாயம் கிடைக்கவும் மற்றும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பாகவும், தமிழ்த் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்தகாலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இவ்வாறு கிடைக்கப்பெற்ற பல நல்ல வாய்ப்புக்களை...

சிறுவர் மரணங்கள் – யாழ்ப்பாணத்திலும் மூவர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சிறுவர் மரணங்கள் தொடர்பிலான செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை குளமொன்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறார்கள் நேற்றையதினம் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.10 மற்றும் 8 வயதான இரண்டு சிறார்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நாராந்தனை பகுதியைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்களான டெனிஸ்கரன் தனுசன் (வயது 11), சுரேஷ்குமார் விதுஷன்...

காணாமல் போன கர்ப்பிணிப் பெண் சடலமாக மீட்பு..!!

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த கர்ப்பிணிப் பெண், தொண்டமானாறு கடல் நீரேரியில் ஞாயிற்றுக்கிழமை (20) சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். 3ஆம் சந்தி தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த, அரசன் சந்திரவதனா (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (18) குறித்த கர்ப்பிணிப் பெண்...

புலிகள் இயக்கத்தின் ஆயுதப்பயிற்சி பெற்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞன் யாழ்.மேல் நீதிமன்றால் விடுதலை

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப்பயிற்சி பெற்றார் என தாஸ் அல்லது அண்ணா என்று அழைக்கப்படும் கனகரட்னம் நிசாந்தன் என்ற இளைஞனுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் எதிரி, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவில்லை என தெரிவித்த பின்னர் நடைபெற்ற விசாரணையின் முடிவில் எதிரியை நீதிபதி...

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சவுடன் ரங்கா யாழ் இந்துக்கல்லூரியில் முத்திரை வெளியீட்டில் பங்கேற்கிறார் ?- பழையமாணவர்கள் எதிர்ப்பு!

யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களை புறக்கணிக்க எடுத்த முடிவை மீளப்பெறுவதில்லை என பழையமாணவர்சங்கம் நேற்றைய (20) கூட்டத்தில் மீள உறுதி செய்துள்ளது. இதுபற்றி பழையமாணவர் சங்கத்தலைவர் சி.சுந்தரேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஈழத் தமிழர் வரலாற்றில் பல புகழ் பூத்த பழைய மாணவர்களைத் தந்த கல்லூரியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு...

இளைஞர் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி மாணவர்கள் இருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பழை யூனியன் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சேர்க்கப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் சுன்னாகம் சந்தியில் சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் கடமையில் ஈடுபட்டு இருக்கக் கூடியதாக மூன்று மோட்டார்...

எங்கள் பிரச்சினைகள் அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும்வரை காத்துக்கொண்டிருக்கமுடியாது!

அரசியலானது மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. எமது அரசியல் யாப்பும் எமக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவில்லை. எங்கள் பிரச்சினைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்படும் வரை எம் மக்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உரிய திட்டங்களுக்கேற்ப எமது வெளிநாட்டு,உள்நாட்டு உறவுகளின் உதவியுடன் முன்னேறுவதுதான் உசிதம் என்று எனக்குப் படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் வட...

இறுதி யுத்தத்தில் 7,700 பேரே இறந்தனர்!! – மக்ஸ்வெல் பரணகம

இறுதி யுத்தத்தில் 7 ஆயிரத்து 700 பேர் வரையானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: 2011 இல், ஐ.நா பொதுச் செயலர் பான்...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவரிற்குமான அழைப்பு!!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் நாளை இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் அனைத்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவரிற்குமான அறிவித்தல் ஒன்றினை வெளியீட்டுள்ளனர். அவ் அவறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் கடந்த 07.09.2015 அன்று யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வேலைவாய்ப்பினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு மகஜர்களும் கையளிக்கப்பட்டன. அப்போது இரண்டு கிழமை கால அவகாசம்...

முதலமைச்சரின் தற்துணிவு நடவடிக்கைகளை உறுப்பினர்கள் கேள்விக்குட்படுத்துவது குறித்து அதிருப்தி!

வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் தற்துணிவு நடவடிக்கைகளினை கேள்விக்குட்படுத்துவது குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மேலும் வடக்கு மாகாண சபை, மாகாண சபை போல் இயங்க வேண்டுமெனவும் மாநகரசபை போல் இயங்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இறுதியாக நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம்...

புகைப்பிடித்தல் காரணமாக வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் இலங்கையில் மரணம்

புகைப்பிடித்தல் காரணமாக வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவி க்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தந்தைகள் புகைப்பிடிப்பதன் காரணமாக உயிரிழக்கும் குழந்தைகளும் அவர்களுள் உள்ளடக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புகைத்தலற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்காக...

இலங்கை வரும் ஐ.நா குழு

பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக காணாமல் போனோர் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. நவம்பர் 9ம் திகதி முதல் 18ம் திகதி வரை இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் பற்றிய அறிக்கையை ஐ.நாவிடம் கையளிக்க கோரிக்கை

காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவின் முன்னாள் இலங்கையின் பிரதிநிதிகளான பேராசிரியர் தயான் ஜயதிலக்க, தமரா குணநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஜீவ் வீஜேசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் – பொன்சேகா

இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது குறித்த எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு...

இந்தியா – இலங்கை இடையே சாலை அமைக்கும் பேச்சு தொடக்கம்

இந்தியா - இலங்கைக்கு இடையே, சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான பேச்சு, அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கவுள்ளது. இந்திய மத்திய, சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் இது குறித்து கூறியதாவது, அண்டை நாடுகளுடன் வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்துவதற்கு, போக்குவரத்து வசதி மிகவும் முக்கியம் என, மத்திய அரசு கருதுகிறது. பங்களாதேஷ், பூடான், நேபாளம் ஆகிய...

வடக்கு – கிழக்கு நிர்வாகரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பொது வேலைத்திட்டங்களில் நாம் ஒன்றிணைய வேண்டும்! – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

இலங்கைத்தீவில் இணைந்த வடக்கு கிழக்கு தமிழர்களின் ©ர்வீகத் தாய்நிலம். இப்போது வடக்கை நிர்வகிப்பதற்குத் தனியாக வடக்கு மாகாணசபை, கிழக்கை நிர்வகிப்பதற்குத் தனியாக கிழக்கு மாகாணசபை என்று எமது தாய்நிலம் இலங்கை அரசாங்கத்தால் நிர்வாகரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பொதுவேலைத்திட்டங்களில் நாம் ஒன்றிணைய வேண்டும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண விவசாய அமைச்சு...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்ல முடியாது -சுமந்திரன்

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லமுடியாது என சுவிஸ் அமைதி அமைப்பினால் 18.9.2015 இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர்,மே17 இயக்கம் , மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க...
Loading posts...

All posts loaded

No more posts