- Friday
- November 21st, 2025
தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேரின் உடல் நிலை மோசமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக...
ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் 21பேர் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலையில் நேற்று முன்தினம் கற்றல் செயற்பாடுகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஒவ்வாமை நோயால் உடம்பில் ஏற்பட்ட தடிப்பு, கடி, சொறி காரணமாக மாணவர்கள் அவதியுற்றனர். இதனை அடுத்து இவ்வாறு பாதிக்கப்பட்ட 21 மாணவர் கள் வைத்தியசாலையில்...
ஜனாதிபதி செயலகத்தினால் எனது வீட்டை மீட்பது தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நான் விரக்தியடைந்த நிலையில் இருக்கின்றேன். இவ்வாறு மானிப்பாயைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பியினர் அபகரித்துள்ள எனது வீட்டைப் பெற்றுத்தாருங்கள் எனச்சகல ஆவணங்களுடனும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபாலா...
குடிமனைகளிலிருந்து அகற்றப்படும் குப்பைகளில் உக்கக்கூடிய குப்பைகள் தவிர்ந்து ஏனைய குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்கான பைகளை, நல்லூர் பிரதேச சபை நிர்வாகம், குடியிருப்பாளர்களுக்கு புதன்கிழமை (14) முதல் வழங்கி வருகின்றது. கண்ணாடிப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தகரம் என குப்பைகளை மூன்று வகையாகப்பிரித்து அவற்றை போடுவதற்காக தனித்தனியான பைகள் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு...
இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண சாலை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டமானது, அரசியல் இலாபத்துக்காகவும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என யாழ்ப்பாண சாலை காப்பாளர் ஜெ.அன்ரன்மயூரன் தெரிவித்தார். யாழ்.சாலை முகாமையாளர் அநீதியாக செயற்படுவதாக கூறி, கட்சிகள் சார்ந்த ஊழியர் சங்கங்கள் இணைந்து முகாமையாளருக்கு எதிராக போராட்டம் ஒன்றை புதன்கிழமை (14) நடத்தின. இந்தப்...
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் தலைமையிலான குழு எதிர்வரும் 20ஆம் திகதி கூடி ஆராயும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அமைச்சர் மனோ கணேசன்,...
இம்மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலிலே பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை...
இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்றும் மாறாக கொலை கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்களே இருக்கிறார்கள் என்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை நியாயமற்றது. இவ்வாறு தெரிவித்துள்ளனர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர். அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - நீண்ட நெடுஞ்சிறை வாழ்வை...
உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் சம்பந்தன் சென்றது எவ்வாறு என இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்தை நேரில் பார்வையிட்டார். இராணுவக் குடியிருப்பு அமைந்துள்ள அந்தப் பகுதிக்குள் நுழைந்த அவரின் வாகனம் சாதரணமாக உள்ளே செல்ல...
வழக்குக்காக நீதிமன்றம் சென்றுவிட்டு தாயாரோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை வானில் வந்த இனந்தெரியாத குழு கடத்திச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை மதியம் வடமராட்சி - வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது: இதில் இதே இடத்தைச் சேர்ந்த 32 வயதான பெண்...
மனைவியைக் கொலையற்ற மரணம் செய்த கணவனுக்கு 16 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27 ஆம் திகதி கைதடி கிழக்கில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணவரை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர், பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு...
வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளிலும், புலம் பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களும் வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அன்மையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் சிறு பான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளை...
வடமாகாண விவசாய அமைச்சால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக தரிசனம் நிறுவனத்தின் 2..5 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (13.10.2015) திறந்து வைத்துள்ளார். இலங்கையில் நிலக்கடலை உற்பத்தியில் மொனராகலை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டமே உள்ளது....
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி போராட்த்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. காலம்: 16.10.2015 வெள்ளிக்கிழமை நேரம்: காலை 7.00 மணி இடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நூலகத்திற்கு அருகாமை) தமிழ்த்...
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆரம்பகால அமைதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த இந்தியா, போரின் இறுதித் தருணங்களில் இலங்கை இராணுவம் வெற்றியடையும் வாய்ப்பு அதிகரித்தவுடன் விடுதலைப்புலிகளின் அழிவை எதிர்பார்த்துகாத்திருந்ததாக தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்யஹய்ம், புலிகளுக்காக இந்திய அரசு ஒரு சொட்டு கண்ணீர்கூட சிந்த வில்லை எனக் குறிப்பிட்டார். தென்னிந்தி...
இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலை முகாமையாளரின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக இன்று யாழ்.பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமையகத்தால் மூன்று கட்டமான விசாரணைகள் இடம்பெற்றபோதிலும் எந்த விதத்திலும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நிர்வாகக் குழுவின் அனுமதியைப் பெறாமல் சுயமாக முடிவுகள் எடுத்தல்,ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஒழுங்கீனம்,மதுப்பாவனையுடன் வேலைக்கு...
நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி அதனுடன் இணைந்து, மற்றுமொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. சமவுரிமை இயக்கம் என்ற பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இன்று புதன்கிழமை பருத்தித்துறை கடற்ப்பரப்பில் வைத்து 9 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இழுவைப்படகு ஒன்றில் பருத்தித்துறை கடற்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்...
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவிகளை மறைமுகமாக பாடசாலைப் பணியாளர் ஒருவர் கையடக்கத்தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து வருவதாகவும் இதனால் மாணவிகள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகின்றது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில்; உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பிரிவுகளில் கல்வி...
Loading posts...
All posts loaded
No more posts
