Ad Widget

யாழில் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர நேற்று யாழிற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டார். அமைச்சர் இதன்போது யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருந்தார்.

sports-minist

நவீன மயமாக்கப்பட்டு வரும் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை அமைச்சர் பார்வையூற்றார்.

இதில் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட், மற்றும் விளையாட்டுத்துறை செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் யாழ் புதிய மறை மாவட்ட ஆயராக கடமையேற்றுள்ள அருட் கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசத்தினையும் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் வைத்து அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

விளையாட்டுத்துறை மூலமே இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.

ஆகவே பாடசாலைகளில் மாணவர்களுக்கு சகல சந்தர்ப்பங்களும் குறிப்பாக விளையாட்டுத் துறையில் வழங்கப்பட வேண்டும் என யாழ். ஆயர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related Posts