Ad Widget

கிளிநொச்சியில் ரயில் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி 55ஆம் கட்டைப் பகுதியில் ரயில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 அளவில் இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடன் மோதுண்டோ அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அந்தப் பகுதியிலுள்ள மூடியிருந்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து கிளிநொச்சியிலுள்ள தமது உறவினர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றுக்காக வருகைதந்த நிக்‌ஷன் ஶ்ரீபன் (வயது 62) என்பவரே உயிரிழந்தவராவார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Posts