Ad Widget

திருமலையில் நடை பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம்

திருகோணமலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று(10) மாலை 6 மணியாளவில் சிவன் கோவில் மண்டபத்தில் மாவட்ட அமைப்பாளர் ராஜகோண் ஹரிகரன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளருமான...

தேவைக்கு அதிகமாகவும் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா

தேவைக்கு அதிகமாகவும் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் வடக்கு கிழக்கில் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். சுன்னாகத்தில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற கண்ணகி மற்றும் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுடன் இடம்பெற்ற...
Ad Widget

மதவாச்சியில் விபத்துக்குள்ளான கொழும்பு – யாழ் சொகுசு பஸ்

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் சொகுசு பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் மதவாச்சியில் விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் சொகுசு பஸ் உம், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறியும்...

நாங்கள் சொல்வதைத்தான் கூட்டமைப்பும் சொல்கிறது – அங்கஜன்

நாங்கள் சொல்வதைப் போன்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதி என்று சொல்லுகிறது எனத் தெரிவித்தார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன். யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்களின்...

காணாமல்போன உறவுகளைத் தேடித் தருமாறு வவுனியவில் ஆர்ப்பாட்டம்

காணாமல் போன உறவுகளைத் தேடித் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் இன்று வவுனியா கந்தசாமி கோவில் அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். காணாமல் போன எமது பிள்ளைகள் எங்கே? தேர்தல் காலத்தில் மட்டுமா எங்களை ஞாபகம் வருவது? காணாமல்...

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி த.தே.கூ – சம்பந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற விசுவாசத்தை பெற்ற கட்சியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா கலைமகள் விளையாட்டு திடலில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...

போலி வாக்குச் சீட்டுக்களுடன் மூவர் கைது

சாவகச்சேரி, கச்சாய் பகுதியில் போலி வாக்குச் சீட்டுக்களுடன் வாகனத்தில் சென்ற 3 சந்தேகநபர்களை நேற்று திங்கட்கிழமை (10) இரவு கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட வாகனத்திலிருந்தே இந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தேர்தல் சுவரொட்டிகள் சிலவற்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் கூறினர். வாகனத்தில் ஒலிபெருக்கியை...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்; சி.வி.கே மறுப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படவேண்டும் என சில கட்சிகள் திட்டமிட்டுச் வெளிப்படுத்தும் வதந்தியான விடயமே இதுவெனவும் வடமாகாண அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தான்...

ஐ.ம.சு.கூ.வின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு கல்வீச்சு தாக்குதல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் யாழ்ப்பாணம், மந்துவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (10) இரவு நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரத்தின் போது இனந்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டதை அடுத்தே, பிரசார மேடையை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நிறுத்தப்பட்டது. இதேவேளை, சாவகச்சேரி பகுதியில் நேற்று(10)...

ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார் மன்னார் ஆயர் !!

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக கத்தோலிக்கத் திருச்சபைக்கு அறிவித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுகவீனம் காரணமாகவே, மன்னார் ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெற விண்ணப்பித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கொழும்பு சென்ற கொண்டிருந்த போது, மன்னார் ஆயர்...

ஐ.நா. அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்த பின் போர்க்குற்றவாளிகள் தொடர்பில் கருத்து வெளியிடுவோம்!

"ஐ.நா. விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னரே வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் போர்க்குற்றவாளிகளாக பாதுகாப்புத் தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாகக் கருத்து வெளியிடமுடியும்." - இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். அறிக்கை கிடைப்பதற்கு முன்னதாக மேற்படி விவகாரங்கள் தொடர்பில் தற்போது வெளியிடப்படும் கருத்துகள் தொடர்பில் எதுவும்...

இலங்கைத் தேர்தலும்,ஆண் துணையின்றி வாழும் பெண்களின் நிலையும்

இலங்கையில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான நிவாரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் போதிய அளவுக்கு கிடைக்கவில்லை எனும் கவலைகள் தொடருவதாக பலர் தெரிவித்துள்ளனர். முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்தில் ஏராளமான பெண்கள் தங்களது கணவர், மகன், சகோதரன் ஆகியோரை இழந்துள்ளனர். அவர்கள் இன்றளவும் உடல் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு ஆளாகியிருப்பதாக பலரை சந்தித்துள்ள பிபிசியின்...

ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் வரைபடத்தில் இலங்கையும்!

அடுத்து ஐந்து ஆண்டுகளில் தமது தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. பிபிசி செய்தியாளர் ஒருவர் இது தொடர்பான வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக இலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளில் அரசாட்சி பயம் என்ற புதிய நூல் ஒன்றிலேயே பிபிசி செய்தியாளர் அன்றூ ஹொஸ்கென் இந்த தகவலை...

நாடகம் மூலம் தேர்தல் பிரசாரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கையில் 'கண்களைத் திறக்கட்டும்' என்னும் தொனிப்பொருளில் நாடகங்களை ஆற்றுகை செய்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. வடமராட்சி மாலுசந்தியில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பு இவ்வாறு நாடகம் மூலம் பிரசாரம் செய்தது. இசைக்கச்சேரி, நாடகம் மற்றும் எழுச்சிப் பாடல்கள் என தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு...

இந்திய மீனவர்கள் 40பேர் விடுதலை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 40பேர், நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் அடிப்படையிலேயே அம்மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 26 மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 மீனவர்கபளுமே இவ்வாறு...

வளலாய் பகுதியில் இறங்குதுறை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில், உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த மார்ச் 13ஆம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வளலாய் பகுதியின் கடற்கரையில் தேங்கியுள்ள கல் மற்றும் மணல் திட்டுக்களை அகற்றி, இறங்கு துறை (வான்) அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சேவாலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனம் இப்பணிகளை நடைமுறைப்படுத்தி வருவதாக திட்ட மேற்பார்வையாளர்...

ஐ.தே.க.வில் இணைந்தார் சனத்

முன்னாள் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக்கட்சியில் நேற்று திங்கட்கிழமை இணைந்துகொண்டுள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளரான சாஹல ரத்னாயக்கவை தான் ஆதரிக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஈபீடிபீக்கும் த.தே.கூ.வுக்கும் என்ன வித்தியாசம்? – மணிவண்ணன்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (ஈபீடிபீ) இடையே என்ன வித்தியாசம் காணப்படுகிறது. நாங்கள் ஈபீடிபீயை நிராகரிக்க வேண்டுமானால், கூட்டமைப்பையும் தூக்கி எறியவேண்டும் எனத் தெரிவித்தார் தமிழ் தேசிய முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன். யாழ். தென்மராட்சி - கோவிலாக்கண்டி பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...

யாழில் முன்னரைப் போன்றல்லாது அமைதியான முறையில் தேர்தல்

இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ் மக்கள் எந்தவித அச்சுறுத்தலோ சந்தேகமோ இன்றி தமக்கு விருப்பமான பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இவ்வாறு கூறியுள்ளார். 2008ம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில், இடம்பெற்ற தேர்தல்களின்...

வெற்றிலை உண்டால் புற்றுநோய் வரும் என்பதால் விலகிவிட்டோம் – இரா.செல்வ வடிவேல்

வெற்றிலை உண்டால் புற்றுநோய் ஏற்படுவது போல வெற்றிலையில் தொடர்ந்து இருக்க முடியாத வகையில் வெற்றிலையுள்ளதால் அதில் இருந்து விலகி தமிழ் மக்களின் நாதமாகிய வீணையில் போட்டியிடுகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் இரா.செல்வ வடிவேல் தெரிவித்தார். யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
Loading posts...

All posts loaded

No more posts