- Friday
- November 21st, 2025
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். குற்றம் செய்த இராணுவத்தினர், எங்கே சிறையில் இருக்கின்றனர்? முதலில் அவர்களைப் பிடித்து சிறையில் அடையுங்கள்.5 அல்லது 6 வருடங்கள் கழித்து அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இலங்கைக்கான அமெரிக்க...
'தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்காமையால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நான் துரோகியாக்கப்பட்டேன். விடுதலைப் புலிகள்தான் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லி இருந்தால், நான்தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்.இரா.சம்பந்தன் உட்கார்ந்து இருக்கும் கதிரை என்னுடையது. அதனை குறுக்கு வழியில் பறித்து அவர் இன்று இருக்கின்றார்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்....
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஆனால் அந்த உதவிகளை இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே செய்ய முடியும். வடக்கு மாகாண சபை ஊடாக செய்ய முடியாது என யாழ். வந்த அமெரிக்கக் குழுவினர் தன்னிடம் தெரிவித்தனர் என யாழ். ஆயர் வண. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். மூன்றுநாள் பயணமாக இலங்கை வந்துள்ள...
காணாமல்போக செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் 25ஆவது வருட நிறைவு தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. காணாமல்போக செய்யப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து காணாமல்போக செய்யப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள், நாட்டில் இரகசிய முகாம்கள் உள்ளன என திடமாகத் தெரிவித்ததுடன்,...
புனர்வாழ்வு அதிகார சபையினரின் ஏற்பாட்டில் இம்மாதம் 29, 30 ஆந் திகதிகளில் உடுவில் மற்றும் கரவெட்டி பிரதேச செயலங்களில் நடமாடும் சேவைகள் இடம்பெறவுள்ளன. கோப்பாய், தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உடுவில் பிரதேச செயலகத்தில் இம்மாதம் 29 ஆந்ததிகதி மு.ப 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணிவரையும் பருத்தித்துறை, மருதங்கேணி,...
விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர நேற்று யாழிற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டார். அமைச்சர் இதன்போது யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருந்தார். நவீன மயமாக்கப்பட்டு வரும் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை அமைச்சர் பார்வையூற்றார். இதில் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட், மற்றும் விளையாட்டுத்துறை செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன்...
இலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின் ரஸ்ஸல் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் குழுவினர் யாழிற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள். சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில்...
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அநியாயம் இழைக்கப்பட்ட சிறுவர்களுக்காக, கல்வி அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் தொகையை குறைத்தமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அந்த சட்ட நடவடிக்கைக்கும் மேலாக போராட்டத்தினை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக, குறித்த சங்கத்தின்...
தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரி ஒருவரே காரணம் என்று மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் மனதாயிருக்கின்ற போதிலும், அவ்வாறு விடுதலை செய்தால் தென்னிலங்கையில் கிளர்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தை குறித்த உயரதிகாரி முன்வைத்து...
போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவங்களை மட்டுமே படமாக்கி வெளியிடத் துடிக்கும் இயக்குனர் கணேசன் அவர்களுக்கும் எம் தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்: இசைப்பிரியா அல்லது இசையருவி எனும் புனைபெயரைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதி...
வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் ஒன்று அடுத்தமாதம் பூமியின் மீது மோதப் போவதாகவும், அப்போது உலகம் அழியும் என்றும் புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகின்றன. சில புவியின்...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவும் (வி.முரளிதரன்) கைது செய்யப்படாலாம் என்ற நிலை உருவாகியுள்ளமையடுத்து, கருணா தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தான் கைது செய்யப்படுவதை தவிர்க்கப் பார்க்கின்றார் என தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து அதிருப்தி காரணமாக விலகிய...
பாடசாலை மாணவர்கள் ஐவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பளை - உடுதுறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுத்துறை பகுதி பாடசாலை ஒன்றின் மாணவர்கள் ஐவர் பளை பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இவர் கடந்த 26ம் திகதி...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாள பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான புதிய காத்ததன்குடி, ஏத்துக்கால், பாலமுனை, நாவலடி உட்பட பல இடங்களிலுள்ள கடலில் பாரியளவிலான கொந்தளிப்பு காணப்படுகின்றது. மேலும், இம்மாவட்டத்தில்...
கொக்குவில் பகுதியில் கஞ்சா மற்றும் பாவுல் ஆகிய போதைப்பொருட்களை மாணவன் ஒருவருக்கு விற்பனை செய்தவரையும் அவற்றை வாங்கி வைத்திருந்த மாணவனையும் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் யு.கே. தெரிவித்தார். நேற்றைய தினம் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இவர்கள் இருவரையும் தாம் கைது செய்ததாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,...
கருணாவையும் வேறு பல கட்சிகளையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் புதிய கூட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு கருத்து வெளியிட்ட அவர்- தற்போது எமது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் வேறு...
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 'தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்ததால் தான் அக்கைதிகள், தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்கள், விடுதலைக்கு மாறாக, பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ள...
கிளிநொச்சி 55ஆம் கட்டைப் பகுதியில் ரயில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 அளவில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடன் மோதுண்டோ அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அந்தப் பகுதியிலுள்ள மூடியிருந்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே...
தமது விடுதலை தொடர்பில் அரசால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். தாம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு வழங்கப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தம்மை பொதுமன்னிப்பில் விடுவிக்குமாறு கோரி மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போகின்றனர் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர். இலங்கையில்...
அடுத்த வருடம் ஜனவரி முதல் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டை முறையை இலத்திரனியல் அடையாள அட்டையாக மாற்றுவதற்குறிய செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
