அரசியல் கைதிகளின் விடுதலையில் கடந்த கால உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படவில்லை – சுரேஷ்

இலங்கையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் அனைத்தும் மீறப்பட்ட சூழ்நிலையே காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரத்தியேக நீதிமன்றங்களை அமைத்து அரசியல் கைதிகளின் விசாரணையை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்வதாக முன்னர் கூறியிருந்த போதிலும் அதற்கான சரியான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அரசியல்...

இந்திய வீட்டுத் திட்டத்தில் 40,000 வீடுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன – விக்னேஸ்வரன்

இந்திய வீட்டு திட்டத்தில் உறுதி அளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் 40 ஆயிரம் வீடுகள் மாத்திரமே நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய வீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் தட்சனா மருதமரு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் நடமாடும்...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மழை; மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் மழை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்தால், யாழ். பொம்மைவெளி பகுதியை சேர்ந்த மக்கள் முழுமையாக இடம்பெயரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளிட்ட பல்வேறு...

பல்கலை மாணவர்கள் மீதான பொலிஸாரின் தடியடி ; அறிக்கை கோருகிறார் ரணில்

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடி தாக்குதல் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு சட்ட ஒழுங்கு மற்றும் சிறசை்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு பணிப்புரை விடுத்துள்ள பிரதமர், விசாரணை அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் இனங்ககோனுக்கு பணித்துள்ளார்....

முல்லைத்தீவில் தொடர்ந்தும் அபகரிக்கப்படும் மக்களின் பூர்வீக நிலங்கள்

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான காணியை பிரிகேடியர் வனசிங்க தலைமையிலான 682 ஆவது காலால் படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளதாக காணியை இழந்த மக்கள் தெரிவித்துள்ளனர். வடக்கில் புதுக்குடியிருப்பு - புதுமாத்தளன் வீதியையும், கிழக்கில் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதியையும், தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள வீதிகளையும் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணியில் ஏழே முக்கால்...

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் முஸ்லிம்கள் போராட்டம்

யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. யாழ் மாவட்ட முஸ்லிம் அமையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்கள் எமக்கான நீதியினை பெற்றுத்தர வேண்டும் மற்றும் அதற்கான அணைக்குழுவொன்று வேண்டும், எமது மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகள் கவனம்...

விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்து செல்கின்றமை மனவேதனை அளிக்கிறது – மஹிந்த

பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்து செல்கின்றமை தனக்கு உளத் துன்புறுத்தலாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவுக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

மாற்று வலுவுடைய மாணவிகள் துஷ்பிரயோகம் : அதிபருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைக்கு விளக்க மறியல்

மாற்று வலுவுடைய மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு துணையாக இருந்தார் எனக் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியையை விளக்கமறியலில் வைக்க யாழ். சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி நவீல்ட் மாற்று வலுவுடையோருக்கான பாடசாலையில் கல்வி கற்ற 5 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டில் அதன் அதிபர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு இருந்தார். துஷ்பிரயோகத்துக்கு...

கொத்து ரொட்டிக்குள் ரோமம், தீக்குச்சி!- யாழ் உணவகமொன்றிற்கு எதிராக வழக்கு

யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. குறித்த உணவகத்தில் கொத்து ரொட்டி பாசல் ஒன்றை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், அதனுள் தீக்குச்சி மற்றும் இறைச்சியில் அகற்றப்படாத ரோமம் ஆகியன உள்ளமை கண்டு குறித்த உணவகத்திற்குச்...

தாழமுக்க வலயமானது வலுவடைந்து சூறாவளியாக மாற்றம்!

கடந்த சில தினங்களாக அராபியக்கடல் பகுதியில் தோன்றியிருந்த தாழமுக்க வலயமானது படிப்படியாக வலுவடைந்து, தற்போது அயனமண்டல (Tropical Storm) சூறாவளியாக உருவெடுத்துள்ளது. இதற்கு சபாலா (Chapala) என பெயரிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை (2015.10.30) செய்யப்பட்ட அவதானிப்பின் போது, இந்த சபாலா சூறாவளியானது மணித்தியாலத்திற்கு 07 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தற்போது...

யாழ்.போதனா வைத்தியசாலை ‘பாஸ்’ நடைமுறை நீக்கம், பார்வையிடும் நேரங்களிலும் மாற்றம்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளை மறுதினம் தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெறவருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 6மணிமுதல் காலை...

பொலிஸாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் நூற்றுக்கணக்கில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுகின்ற போதிலும், இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒன்பது கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆணைக்குழுவின்...

தமிழரின் உரிமைகளை சிங்களவர் அன்பளிப்பாகத் தரமாட்டார்கள் போராடியே பெறவேண்டும் – சொல்ஹெய்ம்

இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழர்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும்...

மஹிந்தவின் மேலும் ஒரு நிலக்கீழ் மாளிகை கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி...

யாழில் பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய பெண்!!

பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. தாபரிப்பு பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக தனக்கு பிறந்த குழந்தைக்கு வேறொரு இளைஞன் ஒருவனை தந்தையாக்க பெண்ணொருவர் முயன்றுள்ளார். ஆனால் அக்குழந்தை அவ்விளைஞனுக்கு பிறந்தது அல்ல என்று மரபணு பரிசோதனையின் ஊடாக அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், தாபரிப்பு கேட்டு வழக்குத்தாக்கல் செய்த பெண், குறித்த இளைஞனுக்கு நட்டஈடு...

உயிருடன் கரையொதுங்கிய திமிங்கலம் பெரும் போராட்டத்தின் பின்னர் கடலுக்குள் விடப்பட்டது

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது. ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய 70 அடி நீள திமிங்கலம், கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இந்த தகவலை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு...

ஜனாதிபதி மாளிகையிலுள்ள பங்கர் பற்றிய செய்திகளால் அச்சுறுத்தல் இல்லை

ஜனாதிபதி மாளிகையில் நிலத்தின் கீழ் பதுங்குக் குழி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள கதைகளால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார். இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்கான குறித்த பதுங்குக் குழி...

யாழில் இரவோடு இரவாக மறைந்த வள்ளுவர் சிலை : மாநகர சபை ஆணையாளருக்கு தெரியாதாம் !!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்.நகரின் சத்திரச்சந்தியில் இருந்து அகற்றப்பட்ட புராதன வள்ளுவர் சிலைக்கு என்ன நடந்தது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி இரவு 8மணியளவில் வீதி அகலிப்பு மற்றும் வீதி சமிக்ஞை விளக்குகள் அமைப்பதற்காகவும் குறித்த வள்ளுவர் சிலை மக்களின் கண்ணுக்குப் படாமல் இரவோடு இராவாக...

மோட்டார் வாகன லீசிங் வசதி, 90 வீதம் வரை அதிகரிப்பு

மோட்டார் வாகன லீசிங் சம்பந்தமாக நிதி நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய முறைமைக்கமைய, வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, 90 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்தை இந்துக்கள் புறக்கணிப்பர்! – இந்து மாமன்றம் எச்சரிக்கை!!

தமிழ் அரசியல் கைதிகளை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் தீபாவளி தொடர்பான நிகழ்வுகளில் சுயகௌரவமுடைய எந்தவொரு இந்து மகனும் கலந்து கொள்ளமாட்டான் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், பொதுச் செ லாளர் பொ.கதிர்காமநாதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த...
Loading posts...

All posts loaded

No more posts