Ad Widget

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை இல்லை!! : விளக்கமறியல் நீடிக்கப்பட்டது

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 32 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை என்பதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

32 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று பயங்கரவாத தடுப்பு பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

அதன்படி அவர்கள் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts