இனங்களிடையே குழப்பத்தை தோற்றுவிக்க சிலர் முயற்சி ; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் குழப்பத்தை தோற்றுவித்து அதிலிருந்து குளிர்காய்வதற்கு சில மூன்றாம் தரப்பு பிரிவினர் முயற்சித்து வலுவதாக யாழ்ப்பாணப் பல்கழலக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையை இன முறுகல் என்று திரிபுபடுத்தி சில ஊடகங்களும் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள...

ஆறுவார குழந்தையாக இருந்த போது தாயைப் பிரிந்த பெண் 28 வயதில் மீண்டும் இணைந்தார்!

ஆறு வார குழந்தையாக இருந்த போது பிரித்தானிய தம்பதிகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட பெண், 28 வயதில் மீண்டும் தாயாருடன் இணைந்து கொண்டார்.   இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார். அன்று முதல் அந்த...
Ad Widget

வடக்கின் ஆளுநராக சிங்களவர் வேண்டாம்! -சிவாஜிலிங்கம்

வடக்கின் ஆளுநராக முன்னாள் மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் நிர்வாக திறன் அறிந்தவர் என்பது தெரியும் ஆனாலும் தமிழர்கள் ஆட்சி செய்யும் ஒரு மாகாணத்துக்கு தமிழரோ அல்லது முஸ்லிமோ தான் ஆளுநராக வரவேண்டும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவ்வாறு தொடர்ந்து சிங்களவர் ஒருவர் எதிர்ப்பை மீறி நியமிக்கப்பட்டால் அதற்கு எதிராக...

முதலமைச்சர் அலுவலகம் மாற்றம்

வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்கள் என்பன கைதடியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சம்பிராதாயபூர்வமாக மாற்றப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண அமைச்சர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வட மாகாண முதலமைச்சர்...

வீதியில் மயங்கி கிடந்த பெண் வைத்தியசாலையில் உயிரிழப்பு

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மயங்கிக் கிடந்த பெண்ணொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வீதியில், கன்கொல்டலை என்னும் இடத்தில் மயங்கிக் கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்நிலையில், அப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....

நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில் இல்லை -எம்.ஏ.சுமந்திரன்

சிறைகளில் நீண்டகாலமாக நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவது தவறானது. குறைந்தளவானவர்களே சிறைகளில் உள்ளனர். அவர்களிலும் குற்றம் இனங்காணப்படாதவர்கள் சொற்ப அளவிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான வழிமுறைகளுக்கான இணையத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (12) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது, அதில்...

முதலமைச்சர் சபையை முற்றாக புறக்கணித்துவிட்டார் – ஜி. ரி. லிங்கநாதன்

முதலமைச்சர் சபையை முற்றாக புறக்கணித்துவிட்டார் என்பதை அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என வட மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் குற்றம் சாட்டினார். வவுனியா, கோவில்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர். கடந்த மாகாணசபை அமர்வின்போது விவசாய...

“மக்கள் எங்கோ அங்கே மஹிந்த”! – அவரே சொல்கிறார்!

"தமது நலன்களைக் காப்பதற்கு தலைவன் வேண்டும் என்று முழுநாடுமே கேட்டு நிற்கின்றது. அந்தவகையில், மக்கள் எங்கேயோ அவர்களுக்கு தலைமைதாங்க நான் தயாராக இருக்கின்றேன்."- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தனது அரசியல் பயணத்தின் தீர்க்கமான அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கும் வகையில் பத்தரமுல்லையில்...

இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மங்கள முக்கியஸ்தர்களுடன் பேச்சு!

யாழ்ப்பாணத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களாகத் தெரிவான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், மற்றும் அக்கட்சியின் முக்கிஸ்தர் சேவியர் குலநாயகம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஐ.நா....

விபத்தில் உயிரிழந்த 6 வயது சிறுவனுக்காக நீதிகேட்டு யாழ். நகரில் போராட்டம்!

மினிபஸ் சாரதியின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 வயதுச் சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு யாழ். நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஊர்வலமும் கையெழுத்துப் போராட்டமும் இடம்பெற்றன. இதன்போது போராட்டக்காரர்கள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பஸ்களை மறித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் போக்குவரத்துக்கு...

ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு யாழ் கட்டளைத்தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு யாழ்குடா நாட்டுக்கான விஜயத்தின் போது யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இச்சந்திப்பின் போது இப்பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் நல்லிணக்க அபிவிருத்தி செயற்பாடுகளின் நகர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இராணுவ தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்நிகழ்வின்...

உயிரிழப்பு ஏற்படுத்தும் சாரதிகள் மீது இனிமேல் கொலைக்குற்ற வழக்குகள்! – நீதிபதி இளஞ்செழியன்

விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும்...

வடக்கு தென்னை மற்றும் பனம்பொருள் உற்பத்தியாளர்கள் ஜனாதிபதி சந்திப்பு

கொழும்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, வடமேல் மாகாண பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களைச் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் நேற்று (11) மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர். இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய பிரதிநிதிகள் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு...

ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்

ஒருங்கிணைந்த நல்லிணக்க வழிமுறைகளுக்கான இணையத்தளத்தை அதன் தலைவர் மனோரி முத்தடுக்காம, இன்று வெள்ளிக்கிழமை (12) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து இந்த இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. உண்மை அறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள இடம்பெறாது தடுத்தல் ஆகிய 4 நோக்கங்களின் அடிப்படையில் ஜெனீவாவுக்கு சமர்ப்பிப்பதற்காக, பொறுப்புக்...

எரிபொருளின் விலை குறைப்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை?

உலகச் சந்தையில் எரிபொருளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டும் இதுவரையில் அதன் பயனை எமது நாட்டு மக்கள் அனுபவிப்பதற்கு வாய்ப்பு கிட்டாதுள்ளமை துரதிஸ்டவசமான நிலைமையாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'எரிபொருளின் விலை உலகச் சந்தையில் வீழ்ச்சியுற்றுள்ளது....

இந்த நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பு!! : புவி ஈர்ப்பு அலைகள்

புகழ்பெற்ற நோபல் பரிசு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து சொன்ன புவி ஈர்ப்பு அலைகளை தற்கால விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். கடந்த 1915ஆம் ஆண்டு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தனது கோட்பாடு ஒன்றில் இது குறித்த கணிப்பை முன்வைத்தார். அதைத்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வான்வெளியில் 'கருந்துளை' என்ற மர்மத்தை ஏற்கெனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து...

ஸிகா வைரஸ் தாக்கத்துக்கு 3 பேர் பலி!! ஆசியாவிலும் வேகமாக பரவுகின்றது!!

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிகா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட சுமார் 30 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது. தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது....

தேசிய கொடியை ஏற்ற மறுக்கவில்லை – விஜயகலா

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே விமல் வீரவன்ச இந்த விடயத்தை தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம்...

யாழ் பல்கலை மாணவர்களிடையே மோதல்!

யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பிரிவைச் சேர்ந்த இரண்டு தரப்பினருக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்தனர். மூன்றாம் ஆண்டு மாணவர்களின் செயற்பாடுகளை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வாசிகசாலையில் ஒட்டியதாக கூறப்படும் சுவரொட்டிகளே இந்த மோதல்களுக்கான காரணம் என அறியமுடிகின்றது. எதுஎவ்வாறாயினும் சம்பவத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் யாழ்ப்பாண மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும்...

சிறிய விண்கல் பூமியைத் தாக்குமா? அச்சத்தில் விஞ்ஞானிகள்

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் ஒன்று, மார்ச் மாதத்தில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பூமியை கடந்து செல்லுமா அல்லது தாக்குமா என்பதை கணிக்க முடியாமல், விஞ்ஞானிகள் அச்சத்தில் உள்ளனர். ஒரு கிலோ மீட்டர் அகலமுள்ள அந்த விண்கல், நிலாவை விட 21 மடங்கு பெரிய அளவில் பூமியை கடந்து செல்லும் என்று...
Loading posts...

All posts loaded

No more posts