நுணாவில் இராசா கடைக்கு அருகிலுள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
விஜிதரன் யாழினி (வயது 35) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.
குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.