வட மாகாண முதலமைச்சர் – பிரதமர் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஷ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடையிலான சந்திப்பொன்று இன்று (15) மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் முதலமைச்சருடன் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளமை...

முந்தைய அரசாங்கம் போர்க்களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை!

இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு தான் உறுதுணையாக இருக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். முன்னாள் அமைச்சரான ரெஜினோல்ட்...
Ad Widget

அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் சட்டமா அதிபருடன் விரைவில் பேச்சு

புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்கொட்லாந்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில்...

மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன – பொ.ஐங்கரநேசன்

மற்றவர் வளர்ச்சி கண்டு மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (12.02.2016) இடம்பெற்ற வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு உரையாற்றும்போது, வெற்றி தோல்விகளைச்...

மாவீரர்களை நினைவுகூரும் உரிமையை வழங்க வேண்டும்!

மாவீரர்களை நினைவு கூரும் உரிமையை வழங்க வேண்டும் என புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்தறியும் அமர்வில் கருத்துகளை முன்வைக்கும் போது முல்லைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். “தமிழ்மக்களின் விடுதலைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தமிழீழமே சரியான தீர்வு. தமிழீழமா சமஸ்டியா என்னும் கேள்வியுடன் தொடர்ந்தும் காலத்தை வீணாக்கி பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருப்பதை விடுத்து, வடக்கையும் கிழக்கையும் நிர்வகிக்கக்...

அடுத்துவரும் நாட்களில் கைது செய்யப்படுகிறார் மஹிந்தவின் அடுத்த மகன்!

நாமல் ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக, பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது. தாஜுடீன் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

இலங்கையிலும் பரவுகிறது ஐ.எஸ் தீவிரவாதம்! – ஐ.நா பொதுச்செயலர் அறிக்கை

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதம் வேகமாக பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். உலகளாவிய ஐஎஸ் தீவிரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை நேற்று பான் கீ மூன் வெளியிட்டார். குறித்த அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளின்...

மீனவர்களை சரமாரியாக வெட்டிய கடற்படை! – இருவர் காயம்

மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் நேற்று கடற்படையினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட இருவரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏ.யூட்சன் டெரன்சியன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். குறித்த மீனவர்கள் 4...

சிறுநீரக வியாபார சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க இந்திய குழு வருகிறது

சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்களுக்கு தொடர்புள்ளதாக என்பது பற்றி விசாரிப்பதற்காக இந்திய பொலிஸ் அதிகாரிகள், இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐதராபாத் பொலிஸார் இங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை - இந்தியாவுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்கள் இருவருக்கு தொடர்புள்ளதாக...

இரகசிய முகாம்கள் தொடர்பில் அரசு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்! நாடாளுமன்றில் செல்வம் எம்.பி.!!

வடக்கு, கிழக்கில் காணாமல்போகச் செய்யப்பட்டோர் மற்றும் நாட்டில் இரகசிய முகாம்கள் எங்கு இருக்கின்றன என்பது தொடர்பில் அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். அத்துடன், காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என யாழில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிஙக் தெரிவித்த...

மரணச் சான்றிதழுக்குப் பதில் காணாமல்போனோர் படிவம்! நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு!!

காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் முறைமை ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அத்துடன், இலங்கைச் சட்டத்திலும் இதற்கு இடமில்லை. அதற்கான அதிகாரமும் அரசுக்கு இல்லை. அதனால் மேற்படி தரப்பினருக்கு 'மரணச் சான்றிதழ்' வழங்குவதற்குப் பதிலாக 'காணாமல் போனோர் சான்றிதழ்' இன்னும் இரு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன சபையில் தெரிவித்தார்....

எந்தவொரு விடயத்திலும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ள வேண்டிய விசரணை நடவடிக்கைகளில் எந்தவொரு விடயத்தையும் வற்புறுத்தவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் அல் ஹுஸைன் கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகளை விசாரணை நடவடிக்கையில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று அவர்...

அவர்கள் மின்சார கதிரைக்கு செல்வதில் இருந்து தப்பியது தான் ஜனாதிபதியானதாலே

நாட்டில் முன்னிருந்த அரசியல் தலைவர்கள் மின்சாரக் கதிரைக்கு செல்வதில் இருந்து விடுபட்டமைக்கு காரணம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனாலேயே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் மின்சாரக் கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அன்றிருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டிருந்த போதும் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற...

இரவு நேரங்களிலும் தபாலகங்களை திறக்க நடவடிக்கை

வீதி சட்டதிட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக நாடு பூராகவும் பிரதான நகரங்களில் உள்ள தபால் காரியாலங்களை இரவு 8 மணி வரைக்கும் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தபாலகங்களை திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...

வடக்கு மக்களின் கதாநாயகன் பிரபாகரன் – கோத்தாபய

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “வடக்கு மாகாணத்தில்...

இறுதி யுத்த விவகாரம்: சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணை

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,...

மக்கள் விடுதலை முன்னனியின் யாழ் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

மக்கள் விடுதலை முன்னனியின் யாழ் மாவட்டத்திற்காக புதிய அலுவலகம் இன்று காலை இல - 289 கண்டி வீதியில் உத்தியபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னனியின் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்வு மக்கள் விடுதலை முன்னனியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச்...

டயலொக் – எயார்டெல் நிறுவனங்கள் ஒன்றாக இணையவுள்ளன!!

இலங்கையிலுள்ள டயலொக் நிறுவனமும் எயார்டெல் நிறுவனமும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. economic_times எனும் பொருளியல் சஞ்சினை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டயலொக் நிறுவனம் இந்நாட்டில் 10.5 மில்லியன் தொடர்பாளர்களைக் கொண்ட ஒரு வலைப் பின்னலைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சந்தையில் 41 வீதத்தை தம்மிடம் வைத்துள்ளது. எயார்டெல் நிறுவனம் 2.3 மில்லியன் தொடர்பாளர்களை தம்மிடம் வைத்துள்ளது....

பரிசோதனை வீடமைப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்தப் பரிசோதனை வீடமைப்புத் திட்டம், மல்லாகத்திலும் வளலாயிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் வடக்கு - கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது. 2...

யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ‘மாகாண ஆரோக்கிய விழா-2016’

வடமாகாண சுகாதார அமைச்சும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சமுதாய மற்றும் குடும்ப மருத்துவதுறையும் இணைந்து 35ஆம் அணி மருத்துவ மாணவர்கள் ஊடாகத் தொற்றா நோய்களிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கான ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ‘மாகாண ஆரோக்கிய விழா-2016’ எனப் பெயரிடப்பட்டு வடமாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி இந்நிகழ்வுகள் கடந்த மாசி மாதம்...
Loading posts...

All posts loaded

No more posts