Ad Widget

மாணவி ஹரிஸ்ணவிக்காக வடக்கு மாகாணம் ஸ்தம்பிதம்!

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும் அவரின் மரணத்துக்கு நீதி கேட்டும் விடுக்கப்பட்ட ஹர்த்தாலால் வடக்கு மாகாணம் இன்று புதன்கிழமை ஸ்தம்பித்தது.

வவுனியாவில் கடந்த 16 ஆம் திகதி மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலையைக் கண்டித்தும் அவருக்கு நீதி வேண்டியும் இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் எங்கும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் இன்று காலை தொடக்கம் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாடசாலைகள், அரச நிறுவனங்கள் இயங்கவில்லை. போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் வணிகர்கழகத்தின் அழைப்பை ஏற்று இரு மணி நேர கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Related Posts