Ad Widget

ஹரிஷ்ணவி கொலையாளியை கண்டறியுங்கள்! பொலிஸாரிடம் கூட்டமைப்பு வேண்டுகோள்!!

வவுனியாவில் மாணவி ஹரிஷ்ணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசமைப்பு பேரவையை நியமிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்தார். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts