Ad Widget

வடக்கு ஹர்த்­தா­லுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆத­ரவு

வவு­னி­யாவை சேர்ந்த 14 வயது சிறுமி க.ஹரிஸ்­ணவி பாலியல் பலாத்­கா­ரத்­திற்­குள்­ளா­க்கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­ட­மைக்கு கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்­னணி வட மாகா­ணத்தில் இன்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள ஹர்த்­தா­லுக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது.

அதே­நேரம் யாழ்.பல்­கலை சமூ­கத்தால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள கண்­டன ஆர்ப்­பாட்­டத்­திற்கும் தமது பூரண ஒத்­து­ழைப்­புக்களை வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

மேலும் குறித்த சம்­பவம் தொடர்பில் நீதி­யான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த கொலை தொடர்பில் பல்வேறு தரப்புக்களும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

Related Posts