- Sunday
- November 23rd, 2025
ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட இருந்த பெறுமதி சேர் வரி (VAT) மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மறு அறிவித்தல் வரும் வரை முன்னர் இருந்தது போன்று...
கம்பியில்லா இணையத்தள வசதியை இலங்கை முழுவதும் குறைந்த கட்டணத்தில் வழங்கும் கூகுள் லூன் பலூன் செயற்திட்டம் இன்று மீண்டுமொரு முறை தோல்வியடைந்துள்ளது. சீகிரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யொவுன்புர இளைஞர் ஒன்றுகூடல் மைதானத்தில் இருந்து கூகுள் பலூனை வானுக்கு ஏவும் செயற்திட்டத்தின் இரண்டாவது முயற்சி இன்று மேற்கொள்ளப்பட இருந்தது. எனினும் பலூனுக்கு காற்றைச் செலுத்தும் முயற்சியின் போது...
“விடுதலைப்புலிகள் மீது “பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்”என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு திமுக கூட்டணியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்கப்பட்டுள்ளது! இதுவரை விடுதலைப்புலிகள் மீது, ‘பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள்’ என்றோ சிங்கள பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை. ஆனால், பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள்...
'ஒரு செம்பு தண்ணி கொடுத்தவர்கள், தகவல் தெரிவிக்காதவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் சிறைகளில் வாழ்கின்ற நிலையில், சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்ததாக முன்னரே அறிந்தும் அரசாங்கத்துக்கு தகவல் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை கைது செய்து புனர்வாழ்வளிக்க வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் எட்டு பேரில் அறுவருக்கு ஒரு பக்க சிறுநீரகம் மாத்திரமே இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களுடைய ஒருபக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பது கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார். கடந்த மார்ச் 04ம் திகதி...
முன்னாள் போராளிகளை ஏற்று அவர்களையும் எமது சமுதாயத்துடன் இணைத்து நடாத்த எமது சமூகம் முன்வருவது அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், முன்னாள் போராளிகள் பலரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர்....
உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் பற்றி தெட்சணாமூர்த்தி அறக்கட்டளையின் ஆதரவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளி அம்ஷன்குமார் தயாரித்த ஆவணப்படமும் மற்றும் 'தெட்சணாமூர்த்தி: எட்டாவது உலக அதிசயம்'எனும் நூல் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ தூங்க்காபி சமூக...
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பான மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக பேரவை அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த நிபுணர்குழு இன்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடர்ச்சியாக ஒன்று கூடி தீர்வுத்திட்ட இறுதி வரைபை எதிர்வரும் சில நாட்களில் தயாரித்து முடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தீர்வு திட்ட இறுதி வரைபானது சர்வதேசத்திடமும்,...
இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பில் வடமாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகள் 7ம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனிடம் நேரில் கையளிக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சிமாற்றத்தின் பின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் யாப்பு மறுசீரமைப்பு ஒன்றிற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் வடமாகாண மக்களின்...
மாகாண முதலமைச்சர்களிடம் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழு தீர்மானித்துள்ளது. மக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக அந்த குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார். 5000 இற்கும் அதிகமான யோசனைகளை பதிவுசெய்துள்ளதாக அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் தலைவர்...
சாவகச்சேரி மறவன்புலவில் தற்கொலை அங்கி,கிளைமோர் மீட்பு சந்தேக நபர் கைது-அதே இடத்தில் 16 சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தமிழ் இராணுச் சிப்பாய் ஒருவரும் ஒரே நாளில் கைதாகியுள்ளமை பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மீட்க்கப்பட்ட வெடிபெருட்க்கள் யாவும் சிங்கள மொழிப் பத்திரிகையினால் சுற்றப்பட நிலையில் காணப்படுவதனால் பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. கைதாகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாம்.
1997ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் வசமிருந்த வவுனியாவின் மிகப்பெரும் நெற்களஞ்சிய சாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நெற்களஞ்சிய சாலையை விடுவிக்குமாறு வவுனியா மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந் நிலையில் நேற்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ரோகண புஸ்பகுமார மற்றும் மாவட்ட விசாய பணிப்பாளர் ஆகியோர் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட...
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த 10 பேர் கொண்ட விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு செயற்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்கவின் கண்காணிப்பின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்படுகின்றது. தினமும் காலை 7 மணியில்...
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு 150 படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கும் உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் நேற்றுக் கையொப்பமிட்டன. மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடல் நிகழ்வில் இந்திய அரசியல் சார்பில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே. சிங்ஹாவும், இலங்கையின் சார்பில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யு....
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வால்பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம் என அவர் ஆதரவு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எந்த யோசனையாக இருந்தாலும் அதனை நாடாளுமன்றில் முன்வையுங்கள். அதை நாம் கருத்திற்கொள்வோம் என்றும் தெரிவித்தார். சிறிகொத்தவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஆலோசனை கூறி, கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில்...
ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை எடுத்துச் செல்லாது சாதாரண பயணிகள் விமானத்திலேயே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரிவினருடன் சென்று வந்துள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்றுத் திறந்து வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த...
மன்னாரில் மீண்டும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளதாக கவலையடைந்துள்ளனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு முன்பாக குறித்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வருகின்றது. யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகுட்பட்ட மறவன்புலோ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள மீட்கப்பட்டுள்ளமை மற்றும் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட...
இந்த நாட்டில் காணாமல்போன ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என ஆட்சியாளர்கள் கூறும்வரை நாம் மக்களுக்காக உரத்துக் குரல் கொடுக்கவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 'காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம்' என்னும் தொனிப்பொருளில் கடந்த புதன்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்ற காணாமல்போனோரின் உறவுகளின் கவனயீர்ப்பு நிகழ்வில்...
சாவகச்சேரி பகுதியில் இருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் மிதவாத குழுக்களின் செயற்பாடுகளாக இருக்கலாம் என, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நேற்றைய சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என வெளியாகும் தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை...
முல்லைத்தீவு மாவட்டதில் தொடரும் வெப்பமான காலநிலையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் காலநிலை மாற்றத்தால் பெருமளவு வெளிநோயாளர்கள் முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவதாக அறியமுடிகின்றது. வெப்பம் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் வர்த்தக நிலையங்கள் வெறிச்சோடிகிடக்கின்றது. எனினும் இன்று காலை சிறிதாக மழைபெய்து ஓய்ந்துள்ளது தொடர்ந்தும் மழை பெய்யாதா என்று முல்லைமக்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
