தாயையும் குழந்தையையும் காணவில்லை

ஈச்சமோட்டை, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது பெண் குழந்தையையும் காணவில்லையென அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோகன்ராஜ் ஜனாகி (வயது 23) மற்றும் மோகன்ராஜ் சுருதிகா (வயது 3 ½ ) ஆகிய இருவருமே காணாமல்போயுள்ளனர். கடந்த 10ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள்...

வலி. வடக்கில் 6.1 ஏக்கர் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6.1 ஏக்கர் காணிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (12) கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 26 வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே-226 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட 17 பேருக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கனகராஜா ஸ்ரீமுருகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் உள்ள...
Ad Widget

சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம்: மேலும் எண்மர் கைது

சாவகச்சேரி பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிவந்த மேலும் 8 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிய ஐவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, மேலும் மூவர் கைது...

ஜனாதிபதியுடன் பேச முதலமைச்சர் சி.வி.க்கு அழைப்பு

வடக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் எதிர்வரும் 18ஆம் திகதி கலந்துரையாடுவதற்கு, தனக்கு அழைப்பு வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. சபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு ஒருபோதும் வேண்டாம்!

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டை வன்மையாகக் கண்டித்துள்ள வடக்கு மாகாண சபை, இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரேரணை ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரனினால் சமர்ப்பிக்கப்பட்டது. பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய ரவிகரன்,...

இராணுவ வாகனம் மோதி தாயும் மகளும் நசியுண்டு பலி!

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த தாயும் மகளும் பலியாகியுள்ளனர். அத்துடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் முன்னால் உள்ள பிரதான வீதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த இராணுவத்தின் டிபெண்டர் ரக வாகனம், ஓட்டோவை மோதித்தள்ளியதில் சாம்பல்தீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த நடராசா வாசுகி (வயது...

வடக்கின் தீர்வுத் திட்ட இறுதி வரைவு 22ஆம் திகதியே சபையில் சமர்ப்பிப்பு!

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைவு, முதலமைச்சருக்கு நேரமின்மையால் இறுதி செய்யப்பட்டு சபையில் நேற்றுச் சமர்ப்பிக்கப்படவில்லை. தீர்வுத் திட்ட இறுதி வரைவு எதிர்வரும் 22 ஆம் திகதியே வெளியிடப்படும் என்றும், 30ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு...

இனிமேலும் காணி சுவீகரித்தால் விளைவுகள் மோசமாக ஏற்படும்!

"காணி சுவீகரிப்பு இனிமேலும் தொடருமாக இருந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். இதனை நாம் நல்லாட்சி அரசுக்கு இங்கிருந்து எச்சரிக்கின்றோம்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று சபையில் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

நுரைச்சோலை மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது பிரிவில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். மூன்றாவது பிரிவின் வெப்பத்தை சேமிக்கும் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிசே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. எவ்வாறாயினும் இதனால் மின் விநியோகத்தில்...

புத்தாண்டை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை 14ஆம் திகதி இடம்பெறவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்.நகர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வன்முறை மற்றும் குழப்பகரமான நிலமைகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் டி.டி.பி வீரசிங்க தெரிவித்துள்ளார். யாழ். நகரில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக...

பேரவையின் செயற்குழுவிலிருந்து விலகினார் முதலமைச்சர்!

தமிழ் மக்கள் பேரவையின் குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தின் நிறைவில் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையினரால் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பு இறுதி செய்யும் முகமாக நேற்று முன்தினம் யாழ். பொது நூலகத்தில் கூடியது இதில் கலந்து கொண்ட முதலமைச்சரே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்கள்...

பிற்பாக்கெட் அடித்த பெண் 15 நிமிடங்களில் கைது

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, 15 நிமிடங்களில் நேற்று திங்கட்கிழமை (11) மாலை பொலிஸார் கைது செய்தனர். புதுவருட கொள்வனவை முடித்துவிட்டு நண்பிக்காக மேற்படி பெண் காத்திருந்த வேளை, பெண்ணின் பின்பக்கமாகச் சென்ற சந்தேகநபரான பெண்,...

வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு பூரணப்படுத்தப்படவில்லை

அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான வட மாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு இன்னமும் பூரணப்படுத்தப்படவில்லை. இன்னும் சில தினங்களில் பூரணப்படுத்தப்பட்டு, சபையில் முன்வைக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும்' என வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான வட மாகாண சபையின் கொள்கை...

துர்முகி வருடப் பிறப்பு : உங்கள் ராசிக்கு எப்படி?

அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி வருடம் நாளை மாலை மலரவிருக்கின்றது. இதனை எதிர்கொள்ள இறுதிக்கட்ட பொருள் விற்பனையிலும் கொள்வனவிலும் வர்த்தகர்களும் பொது மக்களும் ஈடுபட்டுள்ளனர். மலிவு விற்பனை ஒருபுறம் ஏட்டிக்குப் போட்டியாக நடக்க மறுபுறம் வீதியோர வியாபாரம் மட்டுமன்றி வீதிக்கு வீதி மக்களின் காலடியிலும் வியாபாரம் நடைபெற்று வருகின்றது. புதுவருட பிறப்பு பற்றி...

யாழ்ப்பாணத்தில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு அழகு ராணிப் போட்டி

யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டினைமுன்னிட்டு மாநகரசபை மைதானத்தில் அழகு ராணிப் போட்டியினை நடாத்தவுள்ளனர். குறித்த நிகழ்வுகள் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளின் அங்கமாக நடைபெறவுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி வீரசிங்க தெரிவித்தார். சித்திரை புத்தாண்டில் தங்க இல்லம் எனும் தொனிப்பொருளில் ஏப்ரல் 18 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் நகர சபை...

மதுபோதையில் வாகனம் ஓடினால் இனிமேல் ஓட முடியாது

தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்துவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்றும், நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். 'இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின்...

நாமல் ராஜபக்சவின் குத்து நடனம் !!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வீதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. நாமல் ராஜபக்ச நடனமாடும் போது, அவரை சுற்றி, சிறுவர்களும் சிறுமிகளும் துணை நடனமாடுகின்றனர். தனது மகன் நடனமாடுவதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேடிக்கை பார்த்தவாறும் கைகளையும் தட்டுகிறார். இந்த காணொளியை அருகில் இருந்த ஒருவர் படமாக்கி இணையத்தளத்தில்...

தமிழகத்தில் செல்வம் அடைக்கலநாதன் வீட்டுக்காவலில்!!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமிழகத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அரசியல் ரீதியான பயணமாக கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அந்த வேலைகளை முடித்துக்கொண்டு தனிப்பட்ட பயணமாக தமிழ்நாட்டிற்கு சென்றபோதே இச்சம்பவம் நாடைபெற்றுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி...

சம்பூர் அனல் மின் நிலைய விவகாரம்! இந்தியா சிந்தித்து செயற்படும்! -சம்பந்தன்

சம்பூர் அனல் மின் நிலைய விடயத்தில் இந்தியா மக்கள் நலன் கருதி சிந்தித்து செயற்படும் என நான் நம்புகின்றேன். இந்தியாவுடனும் இலங்கை அரசுடனும் பேச்சு நடத்தி இவ்விடயத்தில் நல்ல முடிவை நாம் காண்போம் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மூதூருக்கு நேற்று விஜயம் செய்த அவர் சம்பூர்...

புலம்பெயர் தமிழ் மக்களின் ஒழுங்கமைப்பும் ஒருங்கமைப்புமே தமிழ் மக்களின் சுபீட்சதின் திறவுகோலாக அமைய முடியும்

நிதி, அறிவு, திறமை ஆகியவை உள்ளடங்கலாக புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றின் வினைத்திறன் மிக்கதான ஒழுங்கமைப்பும் ஒருங்கமைப்புமே தமிழ் மக்களின் சுபீட்சதின் திறவுகோலாக அமைய முடியும் என்று வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் லண்டன் ஹரோவில் நேற்று பிரமாண்டமான முறையில்...
Loading posts...

All posts loaded

No more posts