பீரிஸிடம் இரண்டரை மணிநேரம் சி.ஐ.டியினர் விசாரணை

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி, கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொரள்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். பீரிஸிடம் சி.ஐ.டியினர் இரண்டரை மணிநேரம் துருவித்துருவி விசாரணை நடத்தியுள்ளனர். சாவகச்சேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், மறுநாள் புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அது பற்றி பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இருந்து இடைநிறுத்தம்

யாழ். திறந்த நீதிமன்றத்தில் வைத்து 500ரூபா லஞ்சம் வாங்கிய பொலிஸார் கடமையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த நபர் மோட்டார் சைக்கிள் பிரச்சினையில் தடுமாறிக்கொண்டிருந்த போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 500 ரூபா தருமாறும், அந்த வேலையை முடித்துத் தருவதாகவும் கேட்டுள்ளார். பொலிஸாருக்கு பணத்தினை கொடுத்த நபர், பணத்தில் உள்ள இலக்கத்தினை பதிவு செய்து...
Ad Widget

ஆனந்தி சசிதரன் படையினரிடம் சரணடையவில்லை: சிங்கள பத்திரிகை

போரின் போது படையினரிடம் சரணடையாத 4000 புலி உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என உயர் மட்ட இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இந்த தகவல்கள் வெளியிடப்பட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதுடன் ஏனையவர்கள் வடக்கில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் படையினரிடம் சரணடையவில்லை. இது ஒர் பாரதூரமான பிரச்சினை தெரிவிக்கப்படுகிறது. வெடிபொருள்...

தமது கட்சியின் பெயரை மாற்றும் EPRLF

ஈபிஆர்எல்எவ் கட்சி தமது பெயரில் உள்ள ஈழம், விடுதலை ஆகிய பெயர்களை நீக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்றுள்ள இந்தக் கட்சியின் பெயர், தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தற்போது...

வாள்வெட்டிற்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில்! மக்கள் அச்சத்தில்!!!!

நீர்வேலி தெற்கில் வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த தாக்குலினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 10 பேர் கொண்ட இளைஞர் குழு குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டு உரிமையாளரை பொல்...

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழு இன்று கூடுகிறது

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு சம்பந்தமான மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து நிபுணர் குழுவானது இன்று முதல் மீண்டும் ஒன்று கூடித் தீர்வுத்திட்ட இறுதி வரைபை தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளது. இப் பணியானது எதிர்வரும் நாட்களில் முடிவுறும். பேரவையின் தீர்வுத்திட்ட வரைபுக்கு தமிழ் மக்கள் பெருமளவில் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கும்...

கசூரினா கடற்கரை சடலம் அடையாளம் காணப்பட்டது

காரைநகர், கசூரினா கடற்கரையில் புதன்கிழமை (30) கரையொதுங்கிய சடலம், யாழ்ப்பாணம் பெருமாள் வீதியைச் சேர்ந்த சின்னையா தங்கராஜா (வயது 59) என்பருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இவர், யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிற்றூழியராகக் கடமையாற்றி வந்துள்ளார். கடலில் நீராடிய போதே, இவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்....

சிறுமியை தாயாக்கிய வயோதிபர் உயிரிழப்பு

பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி, அவரை ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக்கிய குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கந்தையா சித்திவிநாயகம் (வயது 69) என்ற வயோதிபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (01) உயிரிழந்தார். நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் பன்னிரண்டாவது சந்தேக நபரும் நீதிமன்றில்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பன்னிரண்டாவதகாவும் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (01) முன்னிலைப்படுத்தப்பட்டார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைகளுடன் இணைக்காது மேலும் ஒருவர் பதினோராவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு பிரிதொரு தினத்தில் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது....

அமெரிக்கப் நிபுணர் குழு வடக்கு முதலமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று காலை கொழும்பில் உள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பொறுப்புக்கூறல் விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில், கலந்துரையாடப்பட்டுள்ளது....

அமெரிக்க போர்க்குற்ற நிபுணருடன் வடக்கு ஆளுநர் சந்திப்பு

சிறீலங்காவுக்கு திடீர் பயணமொன்றினை மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இதன்பின்னர் வெள்ளிக்கிழமை மாலை சிறீலங்காவுக்கான பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன ஹெற்றியாராச்சியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை...

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைமைத்துவத்தை தான் ஏற்க தயார்! அர்ஜுண ரணதுங்க

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை கலைத்து இடைகால கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையொன்றை நியமிக்குமாறு முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுண ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பகிரங்க கோரிக்கை முன்வைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி தற்போது எதிர்நோக்கியுள்ள பின்னடைவை தடுத்து நிறுத்துவதற்கு இதுவே சிறந்த தீர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயரை காப்பாற்றுவதற்காக...

சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு : இராணுவச்சிப்பாயிடமும் விசாரணை

சாவகச்சேரியில் தற்கொலை குண்டு தாக்குதல் அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவச்சிப்பாய் ஒருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை குண்டு தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் அடங்கிய வீட்டை சந்தேகநபரான ரமேஷ் எனப்படும் எட்வேட் ஜுலியனுக்கு பெற்றுக்கொடுத்தவர் இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரேின் சகோதரரே என ஆங்கில நாளிதழ் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது. சாவகச்சேரி வீட்டில்...

மாணவி ஹரிஸ்ணவி கொலை சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியாவில் 14 வயது மாணவி ஹரிஸ்ணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரின் வழக்கு விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கினை விசாரித்த மாவட்ட நீதிபதி சந்தேக நபரை எதிர் வரும் நான்காம் திகதி...

முல்லை. புதுக்குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் உலாவும் மர்ம நபர்கள்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம், வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார்சைக்கிளில் தினமும் இரவில் உலாவுவதாக அறியமுடிகின்றது. புதுக்குடியிருப்பில் இருந்து குறித்த பிரதேசங்கள் நீண்ட தூரம் என்பதினால் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை தாமதமாக இருக்கின்றது. குறித்த மர்ம நபர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பயணிக்கின்றனர். குறித்த பிரதேசத்தில்...

தற்கொலை அங்கி 10 வருடங்களுக்கு முந்தியது!- பொலிஸ்மா அதிபர்

சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் என்பன புலிகளினால் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த வெடிபொருட்கள் தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு...

காணாமற்போன நால்வரைக் கண்டுபிடித்து விட்டதாம் ஆணைக்குழு!

கடந்த காலங்களில் காணாமல் போனதாக கருதப்பட்டு, காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவர் அல்லது மூவர் மாலைதீவில் உள்ள சிறைச்சாலையில் இருப்பதாகவும், காணமற்போனோர்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். பட்டியலில் உள்ள நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் குறித்த விபரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்....

காணி வாங்குவது வேறு, குடியேற்றம் செய்வது வேறு

ஒரு இடத்தில் காசு கொடுத்து காணி வாங்கி அங்கு வசிப்பது வேறு, அரசாங்கத்தால் முறையற்ற விதத்தில் குடியேற்றம் செய்வது வேறு. இதனை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உணரவேண்டும் என வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வெள்ளவத்தையில் தமிழர்கள் காணிகள் வாங்கி குட்டித் தமிழகம் போன்று குடியேறி வாழ்வது போன்று, வடக்கிலும் சிங்களவர்கள் காணிகளை...

யாழ். குடாநாட்டு கோவில்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்த இடைக்காலத் தடை!

யாழ். குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவை...

ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தினை திறந்து வைக்க நடவடிக்கை!

கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கான சர்வதேச தரத்திலான தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கட்டுமானப் பணிகள்...
Loading posts...

All posts loaded

No more posts