- Saturday
- May 2nd, 2026
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பரவிபாஞ்சான் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வதற்கு வழியைத் திறந்துவிட்ட இராணுவ சிப்பாய்க்கு இராணுவ கேணல் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சிக்கு கடந்த 16 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம், மீள்குடியேற்றத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படாத பரவிபாஞ்சான் கிராம மக்கள் சிலர், தங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு...
இறுதிப் போரின் பின்னரும் உயிரோடு இருக்கின்றார் என்று உறவினர்களால் நம்பப்பட்ட கணினிப் பிரிவுப் பெண் போராளி ஒருவர், ஏழு வருடங்கள் கடந்த நிலையில் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கணனிப்பிரிவுப் போராளியான மேகலாவை முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை கண்ட உறவினர்கள், அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாத போதும், உயிரோடு இருப்பார் என்று நம்பியிருந்தனர்....
கிளிநொச்சி, ஆனந்தபுரத்தை சேர்ந்த தாமோதரம்பிள்ளை ஜெயகாந்த் என்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், விடுதலை புலிகள் இயக்கத்தில் ஊடறுப்பு பிரிவில் இருந்து புனர்வாழ்வு பெறவில்லை என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் வவுனியா பயங்கரவாத தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
கிளிநொச்சி இரணைமடு, திருவிலாறு பிரதேசத்தில் 5 கிரனைட் குண்டுகள், பாதுகாப்பு படைகளால் நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
"நாட்டைப் பிரிக்காது நாம் தனித்து வாழும் அதே நேரம் சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். அதனை வலியுறுத்தியே அரசியல் தீர்வுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைவை நாம் தயாரித்திருக்கின்றோம்." இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். "நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால் சிங்கள மக்கள் எங்களுக்குச் சகல ஒத்துழைப்பையும்...
"ஒற்றையாட்சி முறைமை, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை மற்றும் நாடாளுமன்றத்துக்கு உச்ச அதிகாரம் போன்றவை நீக்கப்பட்டு முழுமையான சமஷ்டி முறைமையின் கீழ் வழங்கப்படும் அதிகாரப் பகிர்வுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும். தற்போதைய அரசமைப்பைக் கொண்டு இதைச் செய்ய முடியாது. ஆகவே, புதிய அரசமைப்புத் தேவைப்படுகின்றது." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி...
"புதிய அரசமைப்பையும் அதனூடாக வரப்போகும் அதிகாரப் பகிர்வையும் அர்த்தமுடையதாக - அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்குவதற்கு அரசமைப்பு உருவாக்கத்தின் முயற்சிக்கு தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்." இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய அரசமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு...
யாழ்.மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதர்களின் கீழ் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி அமைதியான ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். வடமாகாண சபையின் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை காலைமுதல் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட ஊழியர்கள், நண்பகல் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தினை சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த...
அரசியலமைப்பு தீர்வுத் திட்டம் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தாக்கி பேசுவதும், கைதுசெய்ய வலியுறுத்துவதும் தேவையற்ற விடயம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி. கே. சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 50வது அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடமாகாண சபையின் அரசியலமைப்பின் தீர்வு திட்டத்தில் மாற்றத்தினை மேற்கொள்ளவதற்கான ஆலோசனைகளைப் பெறும் போதே இவ்வாறு...
பொலிஸ் திணைக்களம், இனிமேல் இலங்கை பொலிஸ் என அழைக்கப்படும் என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பூஜித்த ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறினார். கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நீண்ட இடைவௌி இருந்ததாகவும் இதன்...
வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட யோசனை நேற்று வெள்ளிக்கிழமை 19 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்ற நிலையில், வடக்கு மாகாண சபையும், புதிய அரசியலமைப்பு கருத்துக்களை முன்வைப்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் மூன்று...
பழையமாணவர் சங்கத்தலைவர் யார் என்ற சர்ச்சையால் கொக்குவில் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் பிற்போடப்படவுள்ளது இது பற்றி தெரியவருவதாவது. பழைய மாணவர் சங்கங்களுக்கு தலைவராக அதிபர் தான் இருக்கவேண்டும் என்ற வகையிலான சுற்றறிக்கை ஒன்று வடமாகாணசபை கல்வியமைச்சினால் அனுப்பட்டிருப்பதாகவும் அதனை காரணம் கூறி பாடசாலையில் சங்க பொதுக்கூட்டத்தினை நடாத்துவதாயின் அதிபரை தலைவராக்க வேண்டும் என்ன வற்புறுத்தியதால் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்கவுள்ளதாக...
அரியாலை கனகலிங்கம் வீதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கியிருந்த தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் வருகைதந்த பஸ் மீது வியாழக்கிழமை (21) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது இனந்தெரியாதோர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் கடும் மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் தெற்கு கரையோரங்களில் இன்று காலை முதல், சிறிமதளவு மழை பெய்யக்கூடும்.
கடற்படையினரின் வசமிருக்கின்ற முள்ளிக்குளம் காணிகள், வெகுவிரைவில் விடுவிக்கப்படும்' என, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்தக் காணி விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இடம்பெயர்ந்த முள்ளிக்குளம் கிராம மக்கள், தமது சொந்தக் காணிகளில் மீண்டும் வாழ வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கின்றார்கள். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அவர்களின் மீள்குடியேற்றத்தில்...
உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சிற்றுண்டிகளின்...
பாடசாலை மாணவர்களின் சீருடைத் துணியைக் கொள்வனவு செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ள வவுச்சர் வழங்கும் முறையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2017ஆம் ஆண்டில், இந்த வவுச்சர் முறையை ரத்து செய்து, இதுவரை காலமும் இருந்துவந்தது போல், பாடசாலை ரீதியில் சீருடைக்கானத் துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம்...
வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் நிதியத்தினில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ் நாட்டில் கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக பாதித்த மக்களிற்கு உதவும் வகையில் வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு...
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 284 சிறுவா்கள் தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவா்களாக காணப்படுவதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டின் கணிப்பின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.3 ஆயிரத்து 44 சிறுவா்கள் தந்தையையும், 764 சிறுவா்கள் தாயையும், 476 சிறுவா்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனா். கரைச்சி...
கிளிநொச்சியில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞரின் பெற்றோர் கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளனர். கிளிநொச்சி – திருவையாறை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு –...
Loading posts...
All posts loaded
No more posts
