பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் 23பேர் கைது!

நல்லாட்சி எனக்கூறும் இந்த அரசாங்கத்தில்கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் மட்டும் இருபத்துமூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடக்குக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் மூன்றுபேரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் பூசா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்மையில்...

இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை கோருவோம்! கனடா பழமைவாதக் கட்சி!

ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனவும் சிறீலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இன அழிப்பிற்கான அனைத்துலக விசாரணையைக் கோருவோமென்றும் கனேடிய பழமைவாதக் கட்சி அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும்(NCCT) மற்றும் கனடாவில் தமிழர் பிரதேசங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராம்டன், ஆட்டாவாவைச் சேர்ந்த...
Ad Widget

காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் அரசுக்கு எதிராக போராட்டம்

தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என...

வெயிலால் முதியவர் சுருண்டு விழுந்து மரணம்!

முல்லைத்தீவு கடற்கரை சிறுவர் பூங்காவுக்கு அருகே, வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்த வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் முள்ளியவளை கணுக்கேணி மேற்கைச் சேர்ந்த 72 வயதான இளையதம்பி சுந்தரலிங்கம் என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், சிறுவர் பூங்கா பின் வீதியின் நடுவே மயங்கி விழுந்துள்ளதுடன், அவரை அருகே இழுத்துப்...

தமிழ் மக்கள் ஏற்காத தீர்வை நாம் ஏற்கமாட்டோம்! -சம்பந்தன்

அரசியல் தீர்வு தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள கூடியவகையில் அமைய வேண்டும். தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வை, நாம் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபை உறுப்பினர்களுக்கும், இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த...

வடக்கில் வெடிகுண்டுகளை நீக்குவதற்கு அமெரிக்காவினால் பயிற்சி

இலங்கை கடற்படையின் நீச்சல் குழுவினரும் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் வெடிபொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை செயலிழக்கச் செய்யும் மொபைல் பிரிவும் இணைந்து பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. கடற்படை நீச்சல்குழுவின் 22 பேர் இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி இதில் பங்கேற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யுத்த காலத்தில் குளங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டு...

அரசாங்கத்தின் தேவைக்கேற்பவே புத்தாண்டு சுப நேரம் கணிக்கப்பட்டது

இந்த முறை புத்தாண்டிற்கான சுப நேரம் கணிக்கப்பட்டது அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே என்று ஜோதிடர்கள் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கண்டி மல்வத்து அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம், புத்தாண்டு சுப நேரம் குறித்து ஊடகவியலாளர்கள் கருத்து கேட்ட போது மஹிந்த ராஜபக்ஷ...

பல்கலைக்கழக அனுமதிக்கு இணையம் ஊடாகவும் விண்ணப்பிக்கலாம்!

பல்கலைக்கழக அனுமதிக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இனிவரும் காலத்தில் இணையம் ஊடாக விண்ணப்பிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இணையம் ஊடாக விண்ணப்பிப்போருக்கு அவர்களின் கைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியாக தகவல் அனுப்பப்படும்.

சாவகச்சேரியில் கடத்தப்பட்டவர் முன்னாள் போராளி!

சாவகச்சேரியில் வெள்ளை வானில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மனைவி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார். கடத்தப்பட்ட தமிழ் இளைஞனின் மனைவி சார்பில் அவரது தாயார் சட்டத்தரணியுடன் நேற்று முற்பகல் இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். தனது கணவர் முன்னாள் போராளி என்றும், புனர்வாழ்வு பெற்று கடந்த 2011ஆம்...

விரைவில் கைதாகிறார் நாமல் ராஜபக்ச!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பணச்சலவை குற்றச்சாட்டு சம்பந்தமாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி வருவதுடன் பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த...

அமைச்சரவை மாற்றம் தேவையில்லை! வினைத்திறனின்மைக்கு 13 ம் சரத்தில் தான் பிழை- சம்பந்தன்

யாழ்ப்பாணம் வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்று மாலை, வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது  பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையிலான 16 ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அமைச்சரவை மாற்றத்திற்கான கோரிக்கையினை சம்பந்தர் நிராகரித்தார். அமைச்சர்களும் முதலமைச்சரும் திறமையானவர்கள் . வினைத்திறனின்மைக்கு அரசியலமைப்பின் 13 ம்...

தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் கூட்டமைப்பு துணைநிற்கின்றது!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கடத்தப்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துணை நிற்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதன் பின்னணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் கைதாகியுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு...

சித்திரைப் புத்தாண்டிற்கு வாழ்த்து கூறிய பிரித்தானிய பிரதமர்

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் வகையில் அவர்களின் அனைத்து உறவினர்களையும் சந்தித்துக் கொள்வதன் பெறுமதியை தான் அறிந்து கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்...

வடக்கின் கல்வி நிலை வீழ்ச்சி!உரியவர்களின் அக்கறையின்மையே காரணம்!

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், தேசிய தரப்படுத்தல் ரீதியில்இதில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது வேதனை தருவதாக உள்ளதென ஈழ மக்கள் ஜனநாய கக்கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார் இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்அவர்கள், கடந்த காலங்களில் வடக்கின் கல்வி...

தினேஸ் குணவர்த்தனவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி!

வடமாகாண சபையில் நாங்கள் விடுகின்றபிழைகளை சுட்டிக்காட்டுங்கள். அதை விடுத்து தமிழர்களை பிரிவினைவாதிகளாக சித்தரித்து சுயலாபங்களை பெற்றுக் கொள்ள முனையாதீர்கள் என்று தினேஸ் குணவர்த்தனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பொது எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன,கடந்தகாலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சர்...

இலங்கையின் பொருளாதாரத்தைக் கவிழ்க்கும் விடுமுறைகள்

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு வழங்கப்படும் 25 பொது விடுமுறைகள் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தினால் பல பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நிவர்த்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில்...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

ஏ - 9 வீதியில் கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர் கிளிநொச்சி பிரதேசத்தைச்...

இடை நிறுத்தப்பட்ட வரி அதிகரிப்பு மீண்டும் அமுலுக்கு வருகிறது

மே மாதம் 2ம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 15% ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ​முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட வெட் வரி மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி...

பொலிஸ் பாதுகாப்புக் கேட்கிறார் யாழ். அரச அதிபர்!

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் அத்தியட்சகரிடம், மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்திற்கும் கடமை நேரங்களில் அரச அதிபரின் அலுவலக அறைக்கும் நிரந்தரமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடமை நேரங்களில் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது அரச...

முல்லை. மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சம்பந்தன் மாங்குளம் பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் நேற்று முல்லைத்தீவு மாவட்ட மக்களை மாங்குளத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று மாங்குளம் வருகைதந்த சம்பந்தன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த அனைத்துப் பிரதேச செயலர் பிரிவு மக்களையும் சந்தித்துக் கலந்துரை யாடியுள்ளார். இதன்போது, தென்பகுதி...
Loading posts...

All posts loaded

No more posts