- Tuesday
- March 3rd, 2026
கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாதிரி பொருத்து வீடுகள் போன்ற, வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு வடக்கிலுள்ள மக்கள் முண்டியடிப்பதாகத் தெரிவித்துள்ளார் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். “மாதிரி வீடுகளைப் பார்வையிட்ட பின்னர், யாழ்ப்பாண மாவட்டத்தில், இந்த வீடுகளைப் பெறுவதற்கு, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதுபோன்று வவுனியா மாவட்டத்திலும், 8,500...
எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல், பெறுமதி சேர் வரி (வட் வரி), 15 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படும் என்றும் இதனால் நுகர்வோர் மாத்திரமன்றி,சிறு மற்றும் மத்தியதர வியாபாரிகளும் பாதிக்கப்படுவர் என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதாரச் சேவைகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனைகள் போன்று தகவல் தொடர்புப்...
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான 65 ஆயிரம் உருக்கு வீடுகள் போதிய அத்திவாரங்களோ கூரை தொடர்பான ஆதரங்களோ இல்லாதவையாக காணப்படுவதாகவும், காற்றோட்ட வசதிகளும் இல்லாதிருப்பதாகவும் மொரட்டுவ பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடுகள் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான ஆய்வை மேற்கொண்ட பின்னர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். பேராசிரியர் பிரியன் டயஸ், டொக்டர் நக்கிகா கல்வத்துற...
கடவுள்களை வைத்து பிழைப்பு நடாத்தும் செயல் நாளுக்கு நாள் குடாநாட்டில் அதிகரித்து வருகின்றது. இந் நிலையில் இலங்கையில் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் கோவிலில் கோடிக்கணக்கான நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இது யாழ் அரச அதிபரின் முதல்கட்ட விசாரணையில் உறுதியாகியமையால் அங்கு கூட்டங்கள் நடத்த அரசாங்க அதிபர் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதோடு, இவ் ஆலயம் அரசாங்க கோவில்...
தேசிய அரசாங்கம் அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துவிட்டது. வற் வரி 15 வீதமாக அதிகரிக்கப்படுவதன் காரணமாக தொலைபேசி கட்டணங்களும் தனியார் மருத்துவ ஆலோசனை சேவை கட்டணங்களும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்மூலம் சாதாரண மக்களே பாரியளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் செயலகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, சில அரசியல்...
கொழும்பை நோக்கிப் புறப்பட்ட சற்று நேரத்தில் ஸ்ரீலங்கன் விமானம் திடீரென மீண்டும் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டமைக்கான காரணம் தெரியவந்துள்ளது. UL 309 என்ற ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரின் செங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 3 நிமிடங்களுக்குள் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து விமானத்தில் இருந்த மூன்று இலங்கையர்களை அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர்....
யாழில் அதிகரித்துச் சென்ற குற்றச் செயல்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என யாழ். காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி டி.பி.டி விஜயசிங்க தெரிவித்துள்ளார். பொதுவாக புதுவருடத்தில் இரண்டு குற்றச்செயல்கள் மாத்திரமே இடம்பெற்ற தாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழில் தற்போது பெருமளவான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சில மாதங்களிற்கு முன்னர் ஒவ்வொரு நாளும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று இடம்பெற இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண நிலமைகள் தொடர்பிலும், காணி அபகரிப்புத் தொடர்பிலும், 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பிலுமே இந்தக் கலந்துரையாடல்...
கேரளா தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சிறீலங்கா தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு கேரளா தேர்தல் ஆணையகம் கடிதம்மூலம் சிறீலங்கா தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளருமான எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். கேரள அரசின் அழைப்பிற்கிணங்க அடுத்த வாரமளவில் தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்புவது...
ஊர்காவற்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை செல்லும் 15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர் என ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர், அல்லைப்பிட்டிப் பகுதியிலுள்ள உறவினர்கள் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த காலங்களில் அதே பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுமியுடன் காதல்...
'தமிழ் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அர்த்த பூர்வமாகச் செயற்படவுள்ளேன். இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புகிறேன். இப்பொழுது இலங்கையில் உருவாகியிருக்கும் புதிய அரசியல் சூழ்நிலைக்கு அமைய ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியிலிருந்து விலகி, தனித்துச் செயற்படவுள்ளேன்' என முன்னாள்...
காங்கேசன்துறை வீதி, தாவடிப்பகுதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியிலுள்ள கடை ஒன்றின் முன்னால் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தாவடி தெற்குப்பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தர் என இனங்காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அரசாங்க நிறுவனங்களில் நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் செயலமர்வுகளில் போஷாக்கான உணவு அல்லது பழச்சாறு வழங்கும் தேசிய கொள்கையொன்று அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் 68 வீதமானவர்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களாவர். இதனை தடுக்கும் நோக்கிலேயே இக்கொள்கையை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்....
யாழில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.அண்மையில் யாழ். ஆணைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். கிளிநொச்சியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பொலிஸாரினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதனையடுத்து, பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்களை சனிக்கிழமை, நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் பொலிஸ்...
கிராமப்புற மக்களின் போசாக்கு மட்டம் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் கோழிக்குஞ்சுகளை விநியோகிக்கும் திட்டத்தை வடமாகாண கால்நடை அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,கூட்டுறவு அபிவிருத்தி,உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த சனிக்கிழமை (16.04.2016) வேலணையில் தொடக்கி வைத்துள்ளார். வேலைணையில் கமநல சேவைகள்...
யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பொது நிகழ்வுகளிலும் கலந்து...
லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை (14) திருடப்பட்டிருந்த ரி-56 ரைபிளும் ஐந்து ரிவோல்வர்களும் லக்கலவிலுள்ள நீர்த்தாங்கியொன்றுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று காலை ஆறு மணியளவில் கிடைக்கப் பெற்ற தகவலொன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து ஏறத்தாள ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள வெல்லேவெலவிலுள்ள சன்டகல விகாரையின் பகுதியில்...
அவள் அவளது கட்டளைகளில் மிகத் தெளிவானவள். அவள் மிகவும் தைரியமானவள். அவள் அனுப்பப்பட்ட இடங்களில் எல்லாம், போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் பற்றிய செய்தியினை ஊருக்கு அறிவிக்கவே விரும்பினாள். அவளது ஒரே நோக்கமும் அதுதான். அவளுக்கு தெரியும் இது அத்தனை எளிதான விடயம் இல்லை என்று. தன்னுடைய உயிரையே கொடுத்தவள் அவள். அவள் ஒரு சரித்திரம்;...
வடக்குக் கிழக்கு ஒன்றாக இணைக்கவேண்டும் என்ற தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லையென விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்முனைப் பகுதியில் அமைந்துள்ள சாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையினரால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட யோசனையானது முஸ்லிம் மக்களை ஒருபோதும் திருப்திப்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் விடயத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
