சாவகச்சேரியில் குண்டு மீட்பு!!

சாவகச்சேரி - தனங்கிளப்பு வீதியில் அருகில் பனை வடலிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் செயலிழக்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் இக்குண்டை அவதானித்து பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கினர். இது தொடர்பில் பொலிஸார், நீதிமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றனர். நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கு...

கொள்ளையர்களால் அச்சுருத்தல்: வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு

அச்சுவேலி தெற்கு மற்றும் நவக்கிரி பகுதியில் 3 வீடுகள் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் சகாக்களால், வீட்டு உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.கருணாகரன், அச்சுவேலிப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதாகிய சந்தேகநபர்களை எதிர்வரும்...
Ad Widget

செம்மணியில் வாள் வெட்டு: புலம்பெயர் பிரஜையின் கால் துண்டிப்பு

செம்மணிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (18) இரவு கும்பலொன்று ஒருவரைத் துரத்தித் துரத்தி வெட்டியதில் அந்நபர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர் கைதடியைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து தற்போது விடுமுறையில் நாட்டுக்கு வந்திருந்த பொன்னம்பலம் நந்தகுமார் (வயது 44) என்பவரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்கானார். இது...

நீதிமன்றிலிருந்து கைதி தப்பியோட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வழக்கு ஒன்றிற்காக அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் 2.20க்கு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச்சென்ற கைதியைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்த அதிகார சபை

இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்த சுயாதீன அதிகார சபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. பிரித்தானியாவில் செயற்படுத்தப்படும் முறைமையை போன்றே, இவற்றை செய்வதற்கு அரசாங்கம் ஆலோசித்துள்ளது. இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாக அறியமுடிகின்றது.

விக்கியை உடன் கைதுசெய்க! சம்பந்தனுக்கு எதிராகவும் போர்க்கொடி!!

"சிங்கள மாநிலம், தமிழ் மாநிலம் என இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்த முயற்சிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்."- இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளது கடும் போக்கு இனவாத அமைப்பான சிங்கள ராவய. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அப்பதவியிலிருந்து விலகி சிங்களவர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும் என்றும்...

வற் வரி அதிகரிப்பில் திருத்தம்!

பொதுமக்களுக்கு சுமை அதிகரிக்காத வகையில் வற் வரியை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு அனுமதி வழங்கிய பின்னர், வற் வரி (பெறுமதிசேர் வரி) விவகாரம் பற்றி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போதே...

இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விவரத்தை 28ஆம் திகதி சமர்ப்பிக்கவேண்டும்! ஜனாதிபதி உத்தரவு

வடக்கு , கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகள் தொடர்பான விவரங்களின் தொகுப்பை அதிகாரிகள் சமர்ப்பிக்கத் தவறியதால், அவர்கள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிருப்தியை நேரில் வெளிப்படுத்தியதுடன் காரசாரமாகப் பேசியுமுள்ளார். அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் அத்தனை விவரங்களையும் முழுமைப்படுத்தி, அன்றைய தினம் இடம்பெறும் கூட்டத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி...

இறுதிப் போரில் சரணடைந்தோரின் விவரம் சமர்ப்பித்தல் ஒத்திவைப்பு!

இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்கள் தொடர்பான விவரங்கள் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருக்கின்றன எனவும்,...

இலங்கையில் ஓரினச் சேர்க்கை மூலமே அதிகளவு பரவும் எயிட்ஸ்

ஓரினச் சேர்க்கை மூலமே அதிகளவு எயிட்ஸ் நோய் பரவுவதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ் வருடம் அடையாளம் காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களே என, பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இவ் வருடத்தின் கடந்த 3 மாதங்களுக்குள் 70 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம்...

புலிகள் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்!

சாவகச்சேரி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன, புலிகள் மீண்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராவதை உணர்த்துகின்றதென கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள புலி உறுப்பினர்கள் மூலம், மீண்டும் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும்...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!!

இலங்கை மக்கள் எதிர்வரும் மே மாதத்திலும் அதிகளவு வெப்பத்துடன் கூடிய காலநிலையை அனுபவிக்க நேரிடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மே மாதம் இறுதி வரையில் காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒரே தட்டில் உணவு உட்கொண்ட வடமாகாண சபை உறுப்பினர்கள்

வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவர், ஒன்றாக இணைந்து ஒரே தட்டில் உணவு உட்கொண்ட சம்பவம், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது. மாவை சேனாதிராசாவின் தாயாருடைய அந்தியோட்டிக் கிரியைகள் அன்றைய தினம் மாவையின் வீட்டில் நடைபெற்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வடமாகாண சபை உறுப்பினர்களாக...

கிளிநொச்சிக்கு புதிய நீதவான் நியமனம்

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற புதிய நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நீதிவானாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த ஏ.ஜே.பிரபாகரன், இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, புதிய நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நீதிவானாக கடமையாற்றிய இவர், புலமைப்பரிசில் பெற்று, மேலதிக படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குச்...

முன்னாள் புலி உறுப்பினர் கைது

தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், ஆயுதங்களுடன் காலியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குடாநாட்டில் மட்டும் 118 இடங்களில் இராணுவத்துக்குக் காணிகள் பறிப்பு!

யாழ்.குடாநாட்டில் மட்டும், வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்கு மேலதிகமாக, 118 இடங்களில் படையினருக்குக் காணி வேண்டும் என முப்படையினராலும் கோரப்பட்டுள்ளது. மேற்குறித்த காணிகளைப் படையினருக்குக் கையகப்படுத்தும் நோக்கில் அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்துக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த எண்ணிக்கையின் பிரகாரம் வலி. வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல...

மக்களை பாதிக்கும் வரி யோசனைகளுக்கு இடமளிக்கப்படாது!

மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எந்தவொரு வரி யோசனையையும் செயற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணர்கள் என்ன கூறினாலும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த முடியாது என, அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பற்றி சிந்திக்காத பொருளாதார நிபுணர்கள் இருப்பின் அவர்கள் பணியை விட்டு நீங்கிச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்....

வடக்கு மாகாணசபையின் நியமனங்கள் நீதியான முறையிலேயே இடம்பெறுகின்றன

வடக்கு மாகாணசபையின் மூலம் வழங்கப்படும் நியமனங்களில் எமக்குத் தெரிந்தவர், எமக்கு வாக்களித்தவர் என்று எந்த முன்னுரிமைகளும் வழங்கப்படுவதில்லை. பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நீதியரசர் ஒருவரை முதல்வராகக்கொண்டு இயக்கப்படும் மாகாண நிர்வாகத்தில் நியமனங்கள் யாவும் நீதியான முறையில் தகுதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையால் முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், அலுவலகப்...

மகிந்தவின் உடல் நிலை, மகிழ்ச்சியளிக்கும் மட்டத்தில் இல்லை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் நிலை மகிழ்ச்சியளிக்கும் மட்டத்தில் இல்லை என அவரது குடும்ப மருத்துவர் கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மதுபானம் அருந்துவதை குறைத்து கொள்ளுமாறும் இல்லையென்றால், கல்லீரலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால், குறைந்தது மூன்று மாதங்களுக்காவது மதுபானத்தை மட்டுப்படுத்துமாறும் மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக...

இலங்கை பெண் ஓமானில் தலை துண்டிக்கப்பட்டு கொலை

ஓமானுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 16 ஆம் திகதி குறித்த பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் வினவிய போது, குறித்த பெண் பதிவு...
Loading posts...

All posts loaded

No more posts