Ad Widget

போராட்டங்களுக்கு மத்தியில் ஜுலியனை பார்வையிட்டார் தந்தை

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு கொழும்பு 2 ஆம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்வேட் ஜுலியனை அவரது தந்தை இன்று திங்கட்கிழமை பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், குற்றப்புலனாய்வு பிரிவினரின் பாதுகாப்பில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜுலியனின் மனைவியை பார்வையிட அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என ஜுலியனின் தந்தை செய்தி ஊடகம் ஒன்றிற்க்கு தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க (ஐ.சி.ஆர்.சி) அலுவலகத்திலிருந்து ஜுலியனின் சகோதரிக்கு அழைப்பை மேற்கொண்ட அதிகாரி ஒருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜுலியனை பார்க்க 2 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் நேற்று தாம் ஜுலியனைப் பார்க்கச்சென்ற நிலையில், விசாரணைக்காக அவரை வேறு இடத்திற்கு அனுப்பிவைத்துள்ளோம் எனவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பார்வையிடலாம் என 2 ஆம் மாடி அதிகாரிகள் தெரிவித்ததாக ஜுலியனின் தந்தை கூறினார்.

Related Posts