Ad Widget

கேபி குறித்த வழக்கு 30ம் திகதிக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 30ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசார​ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குமரன் பத்மநாதன் தொடர்பில் தற்போது பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.

இதன்படி, குறித்த மனுவை இம் மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

Related Posts