Ad Widget

இலங்கையில் தினமும் 658 கரு கலைப்பு சம்பவங்கள்!

இலங்கையில் தினமும் 658 கரு கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் கே. கருணாதிலக்க அவர்களே இதனை தெரிவித்துள்ளார்.

கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குதல் வேண்டுமா என்ற தலைப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆண்டு தோறும் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 170 சட்ட விரோத கரு கலைப்பு சம்பவங்கள் நாட்டில் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts