சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி 18 வயது இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
சபாபதி வீதிப் பகுதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெஜின்ரினா என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ரயிலில் மோதி படுகாயமடைந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்த விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.